Wednesday, May 2, 2012

பெரு நாட்டில் கடற்கரையில் திடீரென உயிரிழந்த 1200 பெலிகான் பறவைகள் (வீடியோ, படங்கள் இணைப்பு)

பெரு நாட்டில் உள்ள பயூரா என்ற கடற்கரை பகுதிகளில் ஏராளமான பெலிகான் பறவைகள் வசிக்கின்றன.
இவைகளில் 1200 பறவைகள் திடீரென செத்து விழுந்தன. இதனால் கடற்கரை பகுதி முழுவதும் எங்கு பார்த்தாலும் பெலிகான் பறவைகள் உடல்களாக காட்சி அளித்தன.
இதே போன்று அந்த பகுதியில் 54 கடல் சிங்கங்களும், சில கடல் ஆமைகளும் செத்து கிடந்தன. இவை எதனால் திடீரென இறந்தன என்பது தெரியவில்லை.
இதுகுறித்து ஆய்வு நடத்தி கண்டுபிடிக்கும்படி அந்நாட்டு அமைச்சர் கேப்லியல் ஆகோஸ்டா உத்தரவிட்டு உள்ளார். இதே கடல் பகுதியில் கடந்த ஆண்டு 800 டால்பின் மீன்கள் செத்து கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment