Monday, February 4, 2013

எனக்கு எந்த செலவும் இல்லை -பில் கேட்ஸ்


FILE
அமெரிக்க செல்வந்தரான பில் கேட்ஸ் தன்னிடம் இருக்கும் பணத்தை செலவழிக்கும் அளவிற்கு தனக்கு எந்த தேவையும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு சாப்பிட உணவும், உடுத்த உடையும் இருக்கிறது. இந்த அத்தியாவசிய தேவையை மீறி என்னிடம் இருக்கும் பணத்தை செலவு செய்யும் அளவிற்கு வேறு எந்த தேவையும் இல்லை என்றார்.

இதுவரையில் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா சேர்ந்து கிட்டத்தட்ட 28 பில்லியன் டாலர்களை அவர்களின் அறக்கட்டளைகள் மூலமாக ஆதரவற்ற மக்களுக்கு அளித்துள்ளனர்.

உலக செல்வந்தர்களின் பட்டியலில் நிரந்த இடம்பிடித்த அமெரிக்க தொழிலதிபரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவருமான வில்லியம் ஹென்றி பில் கேட்ஸ், உலகளவில் போலியோவை அடியோடு ஒழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

நைஜீரியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இன்னும் போலியோ நோய் பரவலாக இருப்பதாகவும், இதனை முற்றிலுமாக களையவே இந்த முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறிய பில் கேட்ஸ், ஒரு அளவிற்கு மேல் செல்வம் இருந்தால் அதனை ஆதரவற்ற ஏழை எளியோர்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் பயன்படுத்த வேண்டுமென்றார்.

65 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள சொத்துகளுக்கு அதிபதியான பில் கேட்ஸ் ஏற்கனவே எய்ட்ஸ், காசநோய், மலேரியா போன்ற நோய்களை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Saturday, February 2, 2013

கடற்கரையில் நடந்து சென்றவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்




இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நபருக்கு கடற்கரையில் ஒதிங்கிய திமிங்கலத்தின் "வாமிட்" முலம் ஜாக்பாட் அடித்துள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் கென் வில் மென். 

வழக்கம் போல் தனது நாயுடன் கடற்கரையில் வாக்கிங் சென்றுகொண்டு இருத்தபோது, கரை ஓரம் ஒதுங்கி கிடந்த தேங்காய் பருமன் கொண்ட ஒரு பொருளை நாய் மோப்பம் பிடித்தவாறே நின்றது. முதலில் கல் போன்று தோன்றியதால் அதை பொருட்படுத்தாமல் சிறிது தூரம் நடக்க தொடங்கினார். 

ஆனால் நாய் அதை விட்ட பாடில்லை. அதனால் அந்த பொருள் என்ன என்று பார்க்க நினைத்த கென் வில் மென், அதை கையில் எடுத்து மோந்து பார்த்த பொழுது, துர்நாற்றம் மற்றும் நறுமணம் கலந்து வீசவே, அதை தனது வீட்டிற்கு எடுத்து சென்றார். பின்னர்தான் அது திமிங்கலத்தின் "வாமிட்" என தெரியவந்தது. 

சில நேரங்களில் திமிங்கலம் தான் உட்கொண்ட உணவை வயிற்று கோளாறு காரணமாக கக்கிவிடுகுறது. அந்த குளுகுளு "வாமிட்" பல மாதங்கள் கடல் நீரில் மிதந்தவாறு இருக்கும். மேலும் அதன் மீது வெயில் பட பட பறை போன்று இறுகி பின்பு கடற்கரையில் ஒதுங்குகிறது. இது தான் சென்ட் ("வாசனை திரவம்") தயாரிக்க பயன்படும் மிக முக்கியமான மூலப்பொருள். மிக அபூர்வமாக அதுவும் இயற்கையாக கிடைக்கும் இதன் விலை மிக மிக அதிகம். இவரிடம் உள்ள இந்த திமிங்கல வாமிட்டை ஏற்கனவே 50,000 ஈரோவுக்கு (36 லட்சத்து 31 ஆயிரத்து 20 இந்திய ரூபாய்) விலை தர முன்வந்துள்ளார். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர். ஆனால் திமிங்கலத்தின் "வாமிட்டை பரிசோதனை செய்து அதன் உண்மை விலையை கண்டு அறிந்த பின்னர் விலைக்கு விற்க முடிவு செய்துள்ளார். கென் வில் மென். திமிங்கலத்தின் "வாமிட்" மூலம் இவருக்கு அடித்த லக்கை பாருங்களேன்!