Monday, May 28, 2012

வேலை வாய்ப்புகள் குவிந்துள்ள உளவியல் படிப்புகள்



பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
மனித மனங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை ஆராய்வது தான் உளவியல். இந்த பதில் கிடைக்காத கேள்விக்கு யூகத்தின் அடிப்படையில் பதிலளிப்பது உளவியலின் சிறப்பாக கருதப்படுகிறது.
சரியாக யூகம் செய்யும் திறன், ஆர்வம், பொறுமை, தகவல் தொடர்வு திறன் ஆகியவை இந்த துறைக்கு இன்றியமையாதது. இந்த துறையில் ஆர்வம் உள்ளவர்கள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்து உளவியல் படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்கலாம். இதில் டிப்ளமோ, பட்டப்படிப்பு, பட்டமேல் படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகள் ஆகியவை வழங்கப்படுகின்றன.

உளவியலில் பல துறைகள் அடங்கியுள்ளன. இதில் கல்வி உளவியல், சமூக உளவியல், தடய உளவியல், கலாசார உளவியல், எக்ஸ்பிரசிவ் தெரபி, ஆற்றுப்படுத்தல் உளவியல், செயற்கை அறிவு, மனிதக்கூறுகள், குழந்தை மற்றும் இளம்பருவ உளவியல், பிறழ்வு உளவியல் ஆகிய பிரிவில் கூடுதல் படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

இந்து துறையில் மனநல மருத்துவராக பணி புரிவதற்கு மருத்துவ படிப்புகளை பயில தேவையில்லை. இந்த துறை பட்டமேல் படிப்புகளை முடித்து, பணியில் நல்ல அனுபவம் பெற்றாலே மனநல மருத்துவராக பணிபுரியலாம்.

படிப்புகள்
* பி.ஜி., டிப்ளமோ (கிளினிக்கல் அண்டு கம்யூனிட்டி சைக்காலஜி)
* பி.ஜி., டிப்ளமோ (சைக்கலாஜிக்கல் கவுன்சிலிங்)
* பி.ஏ., (சைக்காலஜி)
* எம்.ஏ., (கிளினிக்கல் சைக்காலஜி)
* எம்.ஏ., (கவுன்சிலிங் சைக்காலஜி)
* எம்.எஸ்சி., (அப்ளைடு சைக்காலஜி)
* எம்.எஸ்சி., (ஹோலிஸ்டிக் சைக்காலஜி)

கல்வி நிறுவனங்கள்
* அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்
* பாரதியார் பல்கலைக்கழகம், கோவை
* சென்னை பல்கலைக்கழகம், சென்னை
* கேரளா பல்கலைக்கழகம், திருவனந்தபுரம்
* பெங்களூரு பல்கலைக்கழகம், பெங்களூரு

வேலைவாய்ப்புகள்
தற்போது அனைத்து துறைகளிலும் உளவியல் நிபுணர்களின் தேவை கட்டாயமாக இருக்கிறது. கவுன்சிலிங், சோதித்தல், ஆராய்ச்சி, நிர்வாகம், சுகாதாரத் துறை, மனநல மருத்துவ மையங்கள், அரசின் மறுவாழ்வு மையங்கள், சட்டம், காவல் துறை, சமூக சேவகர்கள், சமூகவியலாளர்கள், கருத்துக்கணிப்பு ஆராய்ச்சியாளர்கள், உளவியல் பயிற்சியாளர்கள், தொழிலாளர் உறவுகள் மேலாளர்கள் ஆகிய

பிரிவுகளில் உளவியல் நிபுணர்களுக்கு பணி வாய்ப்புகள் காணப்படுகின்றன. அரசுத்துறை, வெளிநாடு களிலும் உளவியலாளர்களின் தேவை இருக்கிறது. இவர்களுக்கு ஆரம்ப கட்டத்தில் ரூபாய் 5 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை ஊதியம் கிடைக்கிறது. பின்னர் தங்களது தகுதி, திறமைக்கேற்ப ஊதியம்

பன்மடங்கு உயரும். இந்த துறையில் சமூகத்தின் நிலைமையை அறிந்து, அதற்குகேற்ப செயல் படுவதால் சமூகசேவை செய்யும் மனநிறைவு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

உளவியலின் பிரிவுகள்.....


உளவியல் பல்வேறு வகைப்படுகின்றன.அதன் தேவைக்கு ஏற்ப கத்தான் எல்லைகள் விரிவடைகின்றன.

  • நியம உளவியல்.....
மனித நடத்தையின் இயல்புகளை இது விளக்கும்.

  • பிறள் நிலை உளவியல்...
நடத்தையின் சமனற்ற நிலை,மனவெழுச்சிப் பிரச்சினைகள்,அசாதரண நடத்தை,என்பவை பற்றி இது ஆராயும்.

  • உயிரணுக்கள் பற்றிய உளவியல்....
ஒரு கரு உற்பத்தியில் இருந்து குழந்தைப் பருவம்,பிள்ளைப் பருவம்,கட்டிளமைப் பருவம்,வளர்ந்த பருவம்வரை நடத்தை எவ்வாறு வளர்ச்சி அடைகிறது என்பது பற்றி இது விளக்கும்.

  • குழந்தை உளவியல்....
குழந்தை வளர்ச்சியில் செல்வாக்கு செலுத்தும் பரம்பரைச் சூழல், முதிர்ச்சி,கற்றல் ,பரம்பரைத் தொடர்புகள், என்பன இதில் ஆராயப் படுகின்றன.பிள்ளைப் பருவத்தில் நிகழும் புலன் வளர்ச்சி,விவேக வளர்ச்சி ,சமுக வளர்ச்சி என்பன பற்றி இங்கு ஆராயப்படுகின்றன.

  • சமுக உளவியல்.
ஒருவருடைய நடத்தை ஏனையவர்களின் நடத்தையால் எவ்வாறு பாதிப்படைகிறது? குழுக்களுக்கு இடையே உள்ள பரஸ்பரத் தொடர்புகள் யாவை?என்பன பற்றி சமுக உளவியல் விளக்குகிறது.

  • பிரயோகஉளவியல்...
உளவியல் மூலம் பெற்ற அறிவை பல்வேறு துறைகளுக்கு பயன்படுத்த முடியும்.கல்வித் துறை எனின் கல்வி உளவியல் எனவும் மருத்துவத் துறை எனின் மருத்துவ உளவியல் எனவும் சட்டத் துறை எனின் சட்ட உளவியல் எனவும் இராணுவத் துறை எனின் இராணுவ உளவியல் எனவும் அமையும்.

கவுன்சிலிங் பண்ணலையோ கவுன்சிலிங்!!!





பழைய ஈயம் பித்தளைக்கு பேரீச்சம்பழம் என கூவி அழைப்பதை போல் பலர் கவுன்சிலிங் பண்ண வாங்க! என கூவி அழைக்கிறார்கள்.

""நானே தினமும் நாப்பது பேருக்கு கவுன்சிலிங் கொடுத்துக்கிட்டிருக்கேன். எனக்கே கவுன்சிலிங்கா?''
(திருப்பதிக்கே லட்டா மாதி)
"எவ்வளவோ பண்றோம் இதை பண்ணமாட்டமா?'' என்பது மாதி சிலர் கூறுவதுண்டு.


டாக்டர் இவனுக்கு நல்ல கவுன்சிலிங் பண்ணுங்க டாக்டர். சொன்ன பேச்சை கேட்க மாட்றான். இந்த காலத்துல படிக்கட்டி வாழ்க்கையே கிடையாது. நாங்கதான் படிக்கல புள்ளையாச்சும் படிக்கட்டுமேன்னு பார்த்தா (நீங்க படிக்காததாலதான் அவனுக்கும் அதே மூளை வந்திருக்குன்னு புஞ்சுக்குங்க ப்ளீஸ்)... என பல பெற்றோர்கள் புலம்புவதுண்டு.

உண்மை என்ன?


நீங்கள் குடியிருக்கும் தெருவில் கூட ஒரு கவுன்சிலர் இருப்பார் தெயுமா? வார்டு கவுன்சிலர். நீங்க பஞ்சாயத்து தேர்தல்ல ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தீங்களே அவர்தான். அவரும் கவுன்சிலர்தான். அவருடைய வேலையும் கவுன்சிலிங்தான். "ஏரியாவுல தெரு லைட்டெல்லாம் சரியா எயுதா?'' ""தண்ணி ஒழுங்கா வருதா?'' தெருவ சுத்தமா-,சுகாதாரமா வச்சுக்கணும் என பல கவுன்சிலிங் வேலைகள் அவருக்கு.

அரசுப்பணியில் காலியிடங்களை நிரப்ப, பிஇ. சேர்வதற்கு அண்ணா பல்கலைக்கழகம் போன்ற இடங்களில் கூட கவுன்சிலிங்கிற்கு கூப்பிடுவார்கள். இதுவும் கவுன்சிலிங்தான். ஆனால் உளவியல் கவுன்சிலிங் என்பது மட்டும் ஏதோ மந்திரவாதி, மாயாஜாலம் செய்வது போல நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கலந்தாய்வு என்பதுதான் கவுன்சிலிங்.

அது சர்க்கரை வியாதிக்கு சிகிச்சையளிக்க கலந்தாய்வாக இருக்கலாம். கண்வன்-மனைவி பிரச்சினையை தீர்த்து வைக்கும் கலந்தாய்வாக இருக்கலாம். வார்டு கலந்தாய்வு, அணுசக்தி ஒப்பந்தம் குறித்து அனைத்துகட்சி கலந்தாய்வு என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உளவியல் கலந்தாய்வு செய்ய பயிற்சி பெற்ற நிபுணர்களால் மட்டுமே முடியும். அது அறிவியல்பூர்வமானது. அறிவுரைகளும் ஆறுதல்களும் கவுன்சிலிங் கிடையாது.