Monday, March 19, 2012

த‌ம்மை கே‌லி செ‌ய்வா‌ர்களோ எ‌ன்ற அ‌ச்ச‌ம்



உலக‌த்‌தி‌ல் ‌நம‌க்கு ‌எ‌ல்லாமே பு‌திதுதா‌ன். அது பழகு‌ம் வரை. ‌பிற‌க்கு‌ம் குழ‌ந்தை‌க்கு இ‌ந்த உலகமே பு‌திது. தா‌ய், த‌ந்தை, சகோதர சகோத‌ரிக‌ள் என அனை‌த்து உறவுகளு‌ம் பு‌தியவ‌ர்க‌ள். அழுதுகொ‌ண்டே இரு‌ந்தா‌ல் இவ‌ர்க‌ள் பு‌தியவ‌ர்களாகவே‌த் தெ‌ரிவா‌ர்‌‌க‌ள். அவ‌ர்களை‌ப் பா‌ர்‌த்து ‌சி‌ரி‌க்க ஆர‌ம்‌பி‌த்தவுட‌ன் இவ‌ர்க‌ள் நெரு‌ங்‌கியவ‌ர்களா‌கிறா‌ர்‌க‌ள்.
ப‌ள்‌ளி, க‌ல்லூ‌ரி, அலுவலக‌ம், ந‌ண்ப‌ர்க‌ள், பகைவ‌ர்க‌ள் என எ‌ல்லாமே முத‌லி‌ல் பு‌திதா‌ன். ‌பிறகுதா‌ன் அது ந‌‌ட்பாகவு‌ம், பகையாகவு‌ம், நெரு‌க்கமாகவு‌ம் மாறு‌கிறது.
ஒரு ‌சில‌‌ர் மா‌ற்ற‌ங்களை எ‌‌ளிதாக எடு‌த்து‌க் கொ‌ண்டு ஒருவரோடு ஒருவ‌ர் பழ‌கி தோழமையை ஏ‌ற்படு‌த்‌தி‌க் கொ‌ண்டு போ‌ய்‌க்கொ‌ண்டே இரு‌ப்பா‌ர்க‌ள். ஆனா‌ல் ஒரு ‌சில‌ர் அ‌வ்வாறு இரு‌ப்ப‌தி‌‌ல்லை. ம‌ற்றவ‌ர்களுட‌ன் பேசவோ, வெ‌ளி‌யிட‌ங்களு‌க்கு‌ச் செ‌ல்லவோ தய‌ங்குவா‌ர்க‌ள்.
இத‌ற்கு அவ‌ர்களு‌க்கு‌ள் இரு‌க்கு‌ம் ஒரு சமூக அ‌ச்சமே‌க் காரண‌ம் எ‌ன்பதை முத‌லி‌ல் பா‌ர்‌த்தோ‌ம். அ‌ந்த சமூக அ‌ச்ச‌ம் எ‌ன்பது எ‌ப்படி‌ப்ப‌ட்டது எ‌ன்று இ‌‌ங்கு பா‌ர்‌ப்போ‌ம்.
‌சில குழ‌ந்தைக‌ள் ம‌ற்ற குழ‌ந்தைகளுட‌ன் பேசவே‌த் தய‌ங்குவா‌ர்க‌ள். அத‌‌ற்கு‌க் காரண‌ம், ‌வீ‌ட்டி‌ல் அவ‌ர்க‌ள் பேசு‌ம்போது ஏதேனு‌ம் ‌கி‌ண்ட‌ல் செ‌ய்வது அதாவது ஏதாவது ஒரு வா‌ர்‌த்தையை ச‌ரியாக உ‌ச்ச‌ரி‌க்காத ப‌ட்ச‌த்‌தி‌ல் அதை‌ச் சொ‌ல்‌லி ‌கே‌லி செ‌ய்வதா‌ல், ‌வீ‌ட்டை‌ப் போலவே இ‌ங்கு‌ம் ந‌ம்மை கே‌லி செ‌ய்வா‌ர்களோ எ‌ன்ற பய‌த்தா‌ல் பேசவே தய‌ங்குவா‌ர்க‌ள்.
சமூக‌த்‌தி‌ன் ‌மீதான நமது பா‌ர்வை, ‌வீ‌ட்டி‌ல் இரு‌ந்துதா‌ன் துவ‌ங்கு‌கிறது. ‌வீ‌ட்டி‌ல் நா‌ம் செ‌ய்யு‌ம் ஒ‌வ்வொரு செயலையு‌ம் குறை சொ‌ல்‌லி‌க் கொ‌‌ண்டே இரு‌ந்தா‌ல், அ‌ந்த ‌பி‌ள்ளைக‌ள் வெ‌ளி‌யி‌ல் த‌ங்களது ‌திறமையை வெ‌ளி‌க்கா‌ட்ட தய‌ங்குவா‌ர்க‌ள். அவ‌ர்களு‌க்கு‌ள்ளாக ஒரு தா‌ழ்வு மன‌ப்பா‌ன்மை வள‌ர்‌ந்து‌விடு‌ம்.
‌சில ‌வீடு‌க‌ளி‌ல் ஒரு ‌பி‌ள்ளையை வை‌த்து ம‌ற்றொருவரை குறை சொ‌ல்வது உ‌ண்டு. அதுவு‌ம் ‌மிக‌ப்பெ‌ரிய தவறு. இதனா‌ல் சகோதர‌த்த‌ன்மை குறை‌ந்து, ஒருவரு‌க்கு ஒருவ‌ர் பகையாக மா‌றி‌விடு‌ம். மேலு‌ம், ‌எ‌ப்போது‌ம் குறை சொ‌ல்ல‌ப்படு‌ம் குழ‌ந்தை நாளடை‌வி‌ல், தன‌க்கு ஏது‌ம் தெ‌ரியாது எ‌ன்று ‌நினை‌த்து ஒரு பாழா‌கி‌விடு‌ம்.
உலக‌த்‌தி‌ல் எ‌த்தனையோ பே‌ர், எ‌த்தனையோ ‌விஷய‌ங்க‌ளு‌க்கு தய‌ங்கு‌கிறா‌ர்க‌ள். ஒரு பெ‌ண் இரு‌க்‌கிறா‌ள், அவ‌ள் எ‌ப்போதுமே ஒரு ட‌ம்ளரை இர‌ண்டு கைகளாலும‌் ‌பிடி‌த்தபடிதா‌‌ன் ‌நீ‌ர் அரு‌ந்துவா‌ள், தே‌னீ‌ர் அரு‌ந்துவா‌ள். அது அவளு‌க்கு பழ‌கி‌வி‌ட்டது. அவ‌ள் வள‌ர்‌ந்து பெ‌ரிய பெ‌‌ண் ஆன ‌பிறகு‌ம் அ‌ந்த பழ‌க்க‌த்தை அவளா‌ல் மா‌ற்ற முடிய‌வி‌ல்லை. ‌வீ‌ட்டி‌ல் இதுப‌ற்‌றி எ‌ப்போது‌ம் ‌கி‌ண்ட‌ல் செ‌ய்து கொ‌ண்டே இரு‌ப்பதா‌ல், அவ‌ள் வெ‌ளி‌யிட‌ங்களு‌க்கு, உற‌வின‌ர் ‌வீடுகளு‌க்கு எ‌ங்கு செ‌ன்றாலு‌ம், எதையு‌ம் வா‌ங்‌கி குடி‌க்கமா‌ட்டா‌ள். எ‌வ்வளவு கெ‌ஞ்‌சினாலு‌ம், கொ‌ஞ்‌சினாலு‌ம் ஒரு சொ‌‌ட்டு ‌நீரையு‌ம் குடி‌க்க மா‌ட்டா‌ள்.
இத‌ற்கு காரண‌த்தை அ‌றி‌ந்தபோது, அவளது பழ‌க்க‌ம் வெ‌ளி‌‌ப்ப‌ட்டது. அவ‌ளிட‌ம், அ‌வ்வாறு குடி‌ப்ப‌தி‌ல் எ‌ந்த தவறு‌ம் இ‌ல்லை எ‌ன்று‌ம், அது உ‌ன்னுடைய ‌ஸ்டை‌ல் எ‌ன்று‌ம் அ‌றிவுறு‌த்‌தி பு‌ரிய வை‌க்க வெகு நா‌ட்க‌ள் ஆனது.
இதுபோ‌ல், இழு‌த்து இழு‌த்து பே‌சுபவ‌ர்க‌ள், கையெழு‌‌த்து ந‌ன்றாக இ‌ல்லாதவ‌ர்க‌ள், ஆ‌ங்‌கில‌ம் பேச‌த் தெ‌ரியாதவ‌ர்க‌ள், ‌ஸ்பூ‌னி‌ல் சா‌ப்‌பிட‌த் தெ‌ரியாதவ‌ர்க‌ள், டெ‌ன்‌னி‌ஸ், கேர‌ம், செ‌ஸ் போ‌ன்ற ‌விளையா‌ட்டுக‌ள் ‌விளையாட‌த் தெ‌ரியாதவ‌ர்க‌ள் எ‌ன்று ‌எ‌த்தனையோ ‌விஷய‌ங்களு‌க்காக பல‌ர் இ‌ந்த சமூக‌த்‌தி‌ன் ‌மீது அ‌ச்ச‌ப்படு‌கி‌ன்றன‌ர். இதனா‌ல் நா‌ம் ந‌ண்ப‌ர்க‌ள் மு‌ன்‌னிலை‌யி‌ல் அ‌ல்லது உற‌வின‌ர்க‌ள் மு‌ன்‌னிலை‌யி‌ல் அவமான‌ப்பட வே‌ண்டி வருமோ எ‌ன்று அ‌ச்ச‌ப்படு‌கி‌ன்றன‌ர். இ‌ந்த அ‌ச்ச‌ம் இரு‌க்கு‌ம் வரை, உ‌ங்களது குறையு‌ம் உ‌ங்க‌ளிடமே‌த்தா‌ன் இரு‌க்கு‌ம். அ‌ச்ச‌த்தை ‌விடு‌த்து வெ‌ளியே வாரு‌ங்க‌ள். எ‌ந்த ‌விஷயமு‌ம் தெ‌ரி‌ந்து கொ‌ள்ளு‌ம்வரை பு‌திதுதா‌ன், தெ‌ரியாததுதா‌ன், ஆனா‌ல் அதையே ‌நீ‌ங்க‌ள் பழ‌கி‌வி‌ட்டா‌ல், உ‌ங்களு‌க்கு அது அ‌த்து‌ப்படி எ‌ன்று ம‌ற்றவ‌ர்க‌ள் பாரா‌ட்ட‌த் தவறமா‌ட்டா‌ர்க‌ள்.
எனவே, சமூக‌ அ‌ச்ச‌த்தை து‌ச்சமாக ‌நினை‌த்து, வெ‌ளியே வாரு‌ங்க‌ள். இ‌ங்கு ‌‌வி‌ரி‌ந்து பர‌ந்து ‌கிட‌கு‌ம் பூ‌மி உ‌ங்களை வரவே‌ற்கு‌ம்.

மன அள‌வி‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ஊ‌ழிய‌ர்க‌ள்



பொருளாதார நெரு‌க்கடி காரணமாக வேலை ப‌றிபோகுமோ எ‌ன்ற அ‌ச்ச‌த்‌திலேயே வேலை செ‌‌ய்யு‌ம் ஊ‌ழிய‌ர்க‌‌ள் மன அள‌வி‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு இரு‌ப்பதா‌ல் அவ‌ர்களது உட‌ல்‌நிலையு‌ம் மோசமா‌கிறது எ‌ன்று மரு‌த்துவ ஆ‌ய்வு ஒ‌ன்று தெ‌ரி‌வி‌க்‌கிறது.
அமெரிக்காவில் நிதி நெருக்கடி தொடங்கியது முதல் லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். இதனால் எஞ்சியுள்ளவர்கள் வேலை பறிபோ‌ய்‌விடுமோ அ‌ல்லது த‌ங்களது ‌நிறுவன‌த்தை மூடி‌விடுவா‌ர்களோ எ‌ன்ற அச்சத்தில் உள்ளனர்.
அவர்களது மனநிலை காரணமாக ஏற்படும் பாதிப்புகள் பற்றி மிச்சிகன் பல்கலைக்கழக சமூகவியல் துறை ஆய்வு நடத்தியது. அதில், நிதி நெருக்கடிக்குப் பிறகு அமெரிக்க தொழிலாளர் சந்தையில் அதிக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முதலாளி – தொழிலாளி இடையேயான இணைப்புகள் பலவீனம் அடைந்து விட்டன. வேலை போகும் அச்சத்தில் ஊழியர்க‌ள் பலரு‌ம் உள்ளனர்.
வேலை இழந்தவர்களைப் பார்த்த மற்றவர்களுக்கு தங்கள் வேலை பற்றிய அச்சம் அதிகரித்து விட்டது. அவர்களில் பலர் அடிக்கடி உடல்நலம் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு மரு‌த்துவமனை‌க்கு செ‌ன்று‌ள்ளன‌ர். அவ‌ர்களது உட‌ல்‌நிலை பாதிக்கப்பட்டதற்கு மனநிலையே காரணம். வேலை பற்றிய அச்சம், ஊழியரின் உடல்நலத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
வேலையில் பாதுகாப்பின்மையால் ஊழியர்கள் மது, புகைப் பழக்கத்துக்கு அடிமையாகின்றனர். அதிக மன அழுத்தத்துக்கு ஆளாகின்றன. இவையும் அவர்கள் உடல்நல பாதிப்புக்கு காரணமாகிறது. குடும்ப எதிர்காலம், பணத் தேவை ஆகியவை குறித்து நிரந்தர வேலையில்லாத ஊழியர்கள் மனதில் கேள்விக் குறி எழுகிறது. இதுவும் அவர்கள் ஆரோக்கியம் கெடக் காரணமாகிறது.
ஆய்வில் பங்கேற்ற சுமார் 1,700 பேரில் 18 சதவீதத்தினர் வேலை பறிபோகும் அச்சத்தில் உள்ளதாக தெரிவித்தனர். அவர்களை சோதனை செய்ததில் அடிக்கடி உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளது தெரிய வந்தது எ‌ன்று ஆ‌ய்வு தெ‌ரி‌வி‌க்‌கிறது.

பதினென் பருவமும், மனோநிலையும்



பொதுவாக அலைபாயும் வயது என்பது பதினென் பருவத்தில் ஆண்/பெண் இருபாலருக்கும் இருக்கும். இந்தக் காலக் கட்டம் இரு பாலருக்குமே மிகவும் முக்கியமான காலம் ஆகும். பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு தொடங்கி முதல் காதல், இனக்கவர்ச்சி, அதிகமான விஷயங்களைக் கற்றுக் கொள்தல் அல்லது கற்றுக்கொள்ளத் துடித்தல், தேடல் ஆர்வம் போன்றவை 11 வயது தொடங்கி 22 வயதுக்குள் வரும்.
பெண்கள் எனில் பருவமடைதல் (பூப்பெய்தல்) நிகழ்வும் 11 வயதுக்குப் பிறகே நிகழக்கூடியது. மனோவலிமை குறித்த விஷயத்தைப் பொருத்தவரை பெண்கள், ஆண்களைக் காட்டிலும் முதிர்ச்சியடைந்தவராக இருக்கிறார்கள்.
20 வயதுடைய ஆண்களையும், பெண்களையும் ஒப்பிடுகையில், ஆண்களை விடவும் பெண்கள் தெளிவான- உறுதியான மனோநிலையைக் கொண்டிருக்கிறார்கள் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மனதளவில் முதிர்ச்சி பெறும் வயது 11 – 20 என்பதால், பெற்றோர் இந்த வயதுடைய குழந்தைகளை தீவிரமாக கண்காணித்து பராமரித்தல் அவசியம்.
தனிமையில் உட்கார்ந்து ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார்களா என்பதை அறியவும். கூடிய வரை தனிமையில் இருப்பதை அனுமதிக்க வேண்டாம்.
பெண் குழந்தைகளாக இருப்பின் அவர்கள் உற்சாகமாக – மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என அறியவும். என்னதான் நெருங்கிய நண்பர்கள் – குடும்ப நண்பர்கள் என்றாலும், இந்த வயதுடைய பெண் குழந்தைகளை அவர்கள் பாதுகாப்பில் விட்டு வெளியில் செல்லாதீர்கள்.
முடிந்தால் உடன் அழைத்துச் செல்லுங்கள். அல்லது அவர்களை தனியாகவே செயல்பட அனுமதியுங்கள். இப்படிச் செய்வதால், அவர்களுக்கும் பொறுப்புணர்ச்சி அதிகரித்து, படிப்பு மற்றும் வேலைகளில் ஆர்வம் காட்டத் தொடங்கி விடுவார்கள்.
எனவ மனோநிலை முதிர்ச்சி என்பது பதினென் பருவத்தில் மிகமிக குறிப்பிடத்தக்கது என்பதை அறிந்து செயலாற்றுங்கள்.

தற்கொலைகளும் தைரியசாலிகளும்!



ஒரு நிமிடம் தைரியம் இருந்தால் தற்கொலை செய்து கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு நிமிடமும் தைரியம் இருந்தால் தான் வாழ முடியும் என்பது வாக்கு.
தற்போது எங்கு பார்த்தாலும் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. இதற்குக் காரணம் பலவாக இருக்கலாம். ஆனால் தற்கொலை செய்து கொண்டு இறக்கும் ஒருவரது பிரச்சினை இந்த உலகத்தில் எத்தனையோ பேருக்கு இருக்கிறது. அவர்கள் எல்லாம் தற்கொலைதான் செய்து கொள்ள வேண்டும் என்றால் உடல்களை எடுத்துப் போடக் கூட ஆள் இருக்காதல்லவா.
தற்கொலை என்பது தனிப்பட்ட ஒருவரது மனநிலையைப் பொறுத்தது. மன இறுக்கம், பிரச்சினை, தோல்வி, நம்பிக்கையின்மை, ஏமாற்றம் போன்ற பல பிரச்சினைகளுக்காக தற்கொலைகள் நடக்கின்றன.
ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஏதேனும் ஒன்று தவறாக நடக்கும்போது மனம் வெறுத்து தற்கொலை செய்து கொள்கிறான். தற்கொலைக்கு வயது, பொறுப்புகள், ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன் என்ற பேதமெல்லாம் இல்லை. மனநிலை ஒன்று மட்டுமே காரணமாகிறது.
தற்கொலை செய்ய முயன்றவர்களில் 30 விழுக்காட்டில் இருந்து 70 விழுக்காட்டினர் மனநிலை அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. மனநிலை அழுத்த நோய் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் எடுத்துக் கொள்ளும் மது அல்லது வேறு வகையான போதைப் பொருட்கள் தற்கொலையை தூண்டும் ஒரு கருவியாக அமைந்துவிடுகிறது.
மனநிலை தடுமாற்றம், மன அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்வார்கள் என்று கூற முடியாது. ஆனால் அதே சமயம் அவர்களுக்கு நமது உதவி தேவைப்படுகிறது என்று கூறலாம்.
தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் உடையவர்கள்,
எப்போதும் ஏதாவது ஒரு தற்கொலை முறையைப் பற்றி பேசி அல்லது யோசித்துக் கொண்டிருப்பார்கள்.
தன்னம்பிக்கையை இழந்தவர்கள் போல அல்லது தனக்கென்று யாருமில்லை என்பது போன்ற ஒரு எண்ணத்தை வெளிப்படுத்துவார்கள்.
நடத்தையில் வெகுவாக மாற்றத்தை வெளிப்படுத்துதல்
எப்போதும் இல்லாத அளவிற்கு குடிப்பது அல்லது போதைப் பொருளை உபயோகிப்பது
யாருடனும் பேசாமல் எதையோ பறிகொடுத்தது போல இருப்பது
எந்த பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளாமல் தட்டிக் கழிப்பது
எதிர்கால திட்டங்களைப் பற்றிய எண்ணமோ ஆசைகளோ இல்லாமல் இருப்பது போன்ற நடவடிக்கைகளில் ஏதேனும் ஒன்றாவது தற்கொலை செய்து கொள்ளும் 10 பேரில் 8 பேரிடம் காணப்படும் என்று மன‌‌ச்‌சிதைவு‌‌த் துறை நட‌த்‌திய ஆய்வு தெரிவிக்கிறது.
அதே சமயம், தற்கொலைப் பற்றி அடிக்கடி பேசுதல், தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுதல், தற்கொலையில் இருந்து மீட்கும் அமைப்புகளுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும் நபர்களில் பாதி பேர் தற்கொலை பற்றிய பயத்தில்தான் அவ்வாறு செய்கிறார்களே தவிர, தற்கொலை செய்து கொள்ள அவர்களுக்கு எள்ளளவும் துணிச்சல் இருக்காது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

ஒரு வேளை தற்கொலைக்கு முயன்ற ஒரு நபரை நீங்கள் கண்டால்…
உடனடியாக உங்களது அதிர்ச்சியை அவரிடம் வெளிக் காட்டாதீர்கள்.
திட்டுவதோ அல்லது மற்றவர்களுக்கு தெரிவிப்பதாக எச்சரிப்பதோ பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும்.
அவருக்கு தைரியமூட்டி அவரது பிரச்சினையை எந்தவித எதிர்வாதமும் இன்றி அமைதியாகக் கேளுங்கள்.
மனநிலையை நீங்களாக மாற்ற முயற்சிக்க வேண்டாம். அதற்குரிய மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றுதான் ஆலோசனைகளை அளிக்க வேண்டும்.
அவரை தனியாக விட்டுவிட்டு எங்கும் போக வேண்டாம்.
அவர் மறுத்தாலும் அவருக்குரிய உதவிகளை செய்யுங்கள்.
தற்கொலைக்கு மருந்து!
தற்கொலைக்கு முயன்றவர்களுக்கு இரண்டு வகைகளில் சிகிச்சை அளிக்க‌ப்படு‌கிறது. ஒன்று தியானம், மற்றொன்று ஆலோசனை வழங்குதல். ஒரு சிலருக்கு இரண்டுமே தேவைப்படும்.
ஆலோசனை
தற்கொலைக்கான காரணத்தைக் கண்டறிந்து அந்த பிரச்சினையை வேறு வகையில் பார்க்கவும், அதற்குரிய தீர்வைத் தேடவும், அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும் ஆலோசனை வழங்கப்படும்.
தங்களது மனோபாவத்தை மாற்றிக் கொள்ளுதல், தன்னம்பிக்கையை வளர்க்க பயிற்சி, பிரச்சினைகளை கையாளும் திறன், சமூக அமைப்பு பற்றிய அறிவு, மனதிற்கு ஓய்வளிக்கும் பயிற்சி, தசைகளை அமைதிப்படுத்துதல் போன்றவையும் இந்த ஆலோசனை சிகிச்சையில் அடங்கும்.
தியானம்
மனதை ஒருநிலைப்படுத்தும் தியானப் பயிற்சி அளிக்கப்படும். தியானம் பயின்றவரை வைத்து அவருக்கு பயிற்சி அளிக்கப்படும்.
அதே சமயம் மனநிலைக்குத் தகுந்தவாறு மனநல மருத்துவரிடம் மருந்துகளும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நாட்கள் செல்ல செல்ல மருந்தின் அளவில் லேசான மாற்றத்துடன் மருந்தை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். பொதுவாக நான்கு முதல் 9 மாதங்கள் வரை மருந்துகளை உட்கொள்ள வேண்டியிருக்கும். பின்னர் மருத்துவரின் ஆலோசனையுடன்தான் மருந்தை நிறுத்த வேண்டும்.
இந்தியாவில் தற்கொலை
தற்கொலைக்குக் மன அழுத்தம்தான் முக்கியக் காரணம் என்பது பு‌ரி‌ந்து ‌வி‌ட்டது. ஆனால் தற்கொலைக்கே தூண்டும் அளவிற்கு மன அழுத்தம் வர முக்கியமாக மூன்று காரணங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
அதில் முதல் காரணம் எய்ட்ஸ் நோய் என்றும், இரண்டாவதாக தேர்வு அல்லது மற்றவற்றில் தோல்வியாகவும், மூன்றாவதாக கடன் தொல்லை என்றும் தெரிய வந்துள்ளது.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் இந்தியாவில் கிராமங்களில்தான் அதிகப்படியான தற்கொலைகள் நடக்கி‌ன்றன.
எ‌ய்‌ட்‌‌ஸ் நோ‌ய்‌க்கு மரு‌ந்து இதுவரை க‌ண்ட‌றிய‌ப்படாத ‌நிலை‌யி‌லு‌ம், எ‌ய்‌‌ட்‌ஸ் எ‌ன்றாலே தகாத உறவு வை‌த்‌திரு‌ந்தா‌ல் வர‌க்கூடிய நோ‌ய் எ‌ன்ற பொதும‌க்க‌ளி‌ன் எ‌ண்ண‌த்‌தினாலு‌ம் எ‌ய்‌ட்‌ஸ் நோ‌ய் தா‌க்‌கியவ‌ர்க‌ள் உட‌ல் அள‌வி‌ல் அ‌ல்லாம‌ல் மன அள‌வி‌ல் ‌மிகு‌ந்த உளை‌ச்ச‌ல் அடை‌கி‌ன்றன‌ர்.
இ‌ந்த சமூக‌ம் எ‌ன்ன சொ‌ல்லுமோ எ‌ன்று பய‌ந்து‌ம், உ‌ற்றா‌ர் உற‌வின‌ர்க‌ளி‌‌ன் புற‌க்க‌ணி‌ப்பாலு‌ம் தா‌ன் அ‌திகமான எ‌ய்‌ட்‌ஸ் நோயா‌ளிக‌ள் த‌ற்கொலை செ‌ய்து கொ‌ள்‌கி‌ன்றன‌ர்.
சில ப‌ள்‌ளி‌, க‌ல்லூ‌ரி மாணா‌க்க‌ர்க‌ள் த‌ங்களது தே‌ர்வுக‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் தோ‌ல்‌வி‌‌க்காக மனமுடை‌ந்து த‌ற்கொலையை‌த் தேடி‌‌க் கொ‌ள்‌கி‌ன்றன‌ர். தே‌ர்வு‌‌த் தோ‌ல்‌வி‌க்கு அடு‌த்தபடியாக காத‌ல் தோ‌ல்‌வியு‌ம் உ‌ள்ளது.
கட‌ன் அள‌வி‌ல் எடு‌த்து‌க் கொ‌ண்டா‌ல் க‌ந்து வ‌ட்டி‌க்கு‌ம், வ‌ங்‌கி‌யி‌ல் கட‌ன் வா‌ங்‌கியு‌ம் ‌நில‌த்‌தி‌ல் பண‌த்தை‌ப் போடு‌ம் ‌விவசா‌யி‌க்கு, மழையு‌ம், த‌ட்பவெ‌ப்ப ‌நிலை‌யி‌ல் கைகொடு‌க்காம‌ல் போகு‌ம் ப‌ட்ச‌த்‌தி‌ல் பே‌ரிடி ‌விழு‌கிறது. இ‌ந்த ‌நிலை‌யி‌ல் வா‌ங்‌கிய‌க் கடனை செலு‌த்த முடியாம‌‌ல், உண‌வி‌ற்கு‌ம் ப‌ஞ்ச‌ம் ஏ‌ற்ப‌ட்டு, ‌நில‌த்தையு‌ம் இழ‌ந்து த‌ங்களது வா‌ழ்‌க்கையை முடி‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் ‌நிலை‌க்கு‌த் த‌ள்ள‌ப்படு‌‌கி‌ன்றன‌ர்.
எனவே எ‌ந்த ‌பிர‌ச்‌சினை‌க்கு‌ம் த‌ற்கொலை எ‌ன்பது ‌தீ‌ர்வாகாது. ‌பி‌ர‌ச்‌சினையை‌க் க‌ண்டு ஓடுவதை‌ ‌விட, அதனை எ‌தி‌ர்கொ‌ண்டு வெ‌ல்வதே மானுட‌த்‌தி‌ன் வெ‌ற்‌றி.
வாழ ‌நினை‌த்தா‌‌ல் வாழலா‌ம்.

தன் பயமும் மனோவியாதியே!



மனிதர்களில் பொதுவாக காணப்படும் ஒருவகை பயம் பின்னாளில் மனோவியாதியாக மாறி விடுவதுண்டு. கமல்ஹாசன் நடித்த `தெனாலி’ படத்தில், அவர் எதற்கெடுத்தாலும் பயப்படுபவராக நடித்திருப்பதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
சிலர் குழந்தைப் பருவத்தில் இருந்தே பயந்த சுபாவம் உள்ளவர்களாக இருப்பர். வேறு சிலர் ஏதாவதொரு நிகழ்ச்சிக்குப் பிறகு பயந்த நிலையைக் கொண்டிருப்பர்.
இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் அவர்கள் வளரும் முறை எனலாம். சிறிய வயதில் குழந்தைகளை பயமுறுத்துவதற்காக `பூச்சாண்டி’ என்று தொடங்கி, காலப்போக்கில் அவர்கள் வேறுவகையான பயம் அல்லது அச்சத்தை தங்களுக்குத் தாங்களே ஏற்படுத்திக் கொள்வார்கள்.
வேறு சிலருக்கு தாங்கள் செய்யும் சட்டவிரோத செயலால் பயம் தானாகவே ஏற்பட்டு விடும். அதாவது எப்போது மாட்டிக் கொள்வோமோ என்ற ஒரு பயம் இருக்கும்.
இதனால் அவர்களால் வேறு எந்தப் பணியிலும் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும்.
வேறு சில நேரங்களில் அலுவலகங்களில் உயர் பதவிகளில் இருப்பவர்கள் தங்களுக்கு கீழே பணியாற்றுபவர்களைக் கண்டு அஞ்சுவர். ஆனால் அதனை நேரிலும் வெளிப்படுத்த முடியாமல் மனோரீதியாகத் தவிப்பர்.
திறமையின்மையால் தவிப்பார்கள். மாறாக தங்கள் திறமையையும் வளர்த்துக் கொள்ளாமல், எப்போதும், ஏதாவதொரு குற்ற உணர்ச்சியுடனேயே சந்தேகக் கண்களைக் கொண்டிருப்பார்கள்.
ஏதாவது சூழ்ச்சி தங்களுக்கு எதிராக இருக்குமோ என்பதை சிந்திப்பதிலேயே அதிக நேரத்தை செலவிடுவதால், பணியை திறம்பட செய்ய முடியாமல், அதுவே அவர்களின் வேலைத் திறனைப் பாதித்து விடும்.
நாளடைவில் தங்களுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருக்கும் நிலை, மனதளவில் எரிச்சலை வரவழைத்து, எதிரில் இருப்பவர்களிடம் தேவையற்ற கோபத்தை உருவாக்கும். மன அழுத்தம் அதிகரிக்கும்.
இதன்காரணமாக மனோதிடம் பாதிக்கப்பட்டு, குறிப்பிட்ட காலத்தில் மனோவியாதியாகி விடக்கூடிய சூழல் உருவாகும்.
எனவே மனதை குழப்பம் இல்லாமல் வைத்திருப்பதுடன், இறுக்கம் ஏற்படும்பட்சத்தில் உடனடியாக உரிய மனோதத்துவ நிபுணரை அணுகி கவுன்சலிங் எடுத்துக் கொள்ளலாம். தன்பயத்தை தவிர்த்து, தலைசிறந்து வாழ்வோம்!

தனிமையை விரும்புவது மனநோயா? -டாக்டர் டி. காமராஜ்.


தகவலதொழில்நுட்பம் – ஐ.ி துறை. இந்தியாவில் ஐ.ி துறையினவளர்ச்சி எத்தனையமாற்றங்களபொருளாதாரீதியில், சமூரீதியில், பெருநகரங்களினவளர்ச்சி அடிப்படையிலஏற்படுத்திககொண்டிருக்கிறதஎனலாம்.
வாரத்தில் 5 நாளவேலை, அதிசம்பளம், விடுமுறைககொண்டாட்டம், அழுத்தத்தையும், சோர்வையுமபோக்குவதாகககூறிககொண்டஅவ்வப்போதசினிமா, விருந்து, விழா, கூடிககொண்டாடுதல் (get together) போன்றவை இந்தத் துறையில் வெகுசாதாரணமான ஒன்று.
ஆனால், ஐ.டி. நிறுவனங்களின் ஊழியர்களை மகிழ்விக்கும் நோக்கம் உண்மையிலேயே நிறைவேறுகிறதா? இதனால் ஊழியர்களுக்கு சாதகம் இருக்கிறதா? அல்லது மன அழுத்தத்தை மேலும் ஏற்படுத்துகிறதா? என்பது பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.
தனிமையை விரும்புவோர்:
சிலர் எப்போதுமே தனிமையை விரும்புவார்கள். அவர்களுக்கு நல்ல திறமை இருந்தாலும் மற்றவர்களுடன் பழகுவதற்கு மிகவும் யோசிப்பார்கள். சின்ன வயதில் நண்பர்கள் அல்லது பழகியவர்களிடம் ஏற்பட்ட ஏமாற்றம், தேவையிலாத நட்பு வேண்டாம் என்ற அறிவுரை, தன்னைப் போன்றே சிந்திப்பதற்கு யாரும் இல்லை என்ற மனப்பான்மை போன்ற ஏதாவதொரு காரணத்தால் தனிமையில் இருப்பதையே விரும்புவார்கள்.
வலிய வந்து யாராவது பேசினாலும், ஒருசில வார்த்தைகள் மட்டுமே பேசி தட்டிக்கழித்து விடுவார்கள். தனிமையில் இருப்பதே ஒருவகையான மனநோய்தான். ஆனால் அது விபரீதமான சிந்தனைகளுக்கு வழிவகுக்காதவரை பிரச்னை இல்லை.
தகவல் தொழில்நுட்பத் துறை (ஐ.டி) ஊழியர்கள் பெரும்பாலான நேரம் கணினியிலேயே நேரத்தைக் கழிக்க வேண்டியிருப்பதால், பிறருடன் கலந்து பழக வேண்டியது மிகவும் அவசியம். அலுவலகத்தில் எவருடனும் பழகாமல் இருப்பதால் அவர்களது கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்ள மாட்டார்கள். அதற்குப் பதிலாக உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் விடுமுறையைக் கழித்தால் உண்மையில் எவ்விதப் பிரச்னையும் உண்டாகாது.
மற்றவர்கள் சந்தோஷமாக இருக்கும்போது, தம்மால் சந்தோஷமாகக் கொண்டாட முடியவில்லையே என்று ஆதங்கப்படும்போது தான் பிரச்னை ஆரம்பிக்கிறது. அந்த மனத்தாங்கலே அவர்களுக்கு பல பிரச்சினைகளை ஏற்படுத்தி விடக்கூடும்.
இப்படி தனிமையை விரும்புவர்கள், சில நேரங்களில் தங்களுக்குத் தாங்களே பார்ட்டி வைத்துக் கொள்வார்கள். மற்றவர்கள் சந்தோஷமாக இருக்கும்போது தம்மால் மகிழ்ச்சியாகக் கொண்டாட முடியவில்லேயே என்ற எண்ணத்தில் தனியே எங்காவது சுற்றுப்பயணம் செய்வது, தனியே மது அருந்துவது, பாக்கு, கஞ்சா போன்று ஏதாவது ஒரு போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி விடுவதும் உண்டு.
சில நேரங்களில் அளவு தெரியாமல் குடித்து விட்டு, சாலையில் தள்ளாடி நடப்பது, கீழே விழுந்து அடிபடுவது, வாந்தி எடுப்பது போன்றவை ஏற்பட்டு மயங்கி விழக்கூடும்.
அடுத்த நாள் அவர்கள் மீதே அதிக வெறுப்பு ஏற்பட்டு பிறருடன் பேசுவதை மேலும் குறைத்துக் கொள்வார்கள். இதனால் கிட்டத்தட்ட ஒரு மனநோயாளியின் நிலைக்கே தள்ளப்படுவார்கள். எவருடனும் பழக விருப்பம் இல்லை என்பதும் உண்மையில் ஒரு மனநோய்தான் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். ஊருடன் ஒத்து வாழ்பவர்களால் மட்டுமே வாழ்க்கையை எளிதாகக் கொண்டு செல்ல முடியும்.
வீட்டிற்கும் தாவும
அலுவலகத் தோழர்களுடன் பேசுவதில் இருக்கும் விருப்பமின்மை நாளடைவில் வீட்டுக்கும் பரவக் கூடும். தாய், தந்தை மற்றும் உறவினர்கள் பேசினால்கூட எரிச்சலும், கோபமும் உண்டாகி தனித்தீவாக மாறி விடுவார்கள். அப்படியொரு நிலை உருவாகும் முன்பே, உரிய மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். மனதுக்குப் பிடித்தவர்கள் யாருடனாவது ஒரு சில நிமிடங்களாவது பேசுவதைக் கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும்.
கொஞ்சம் கொஞ்சமாக பேசும் நேரத்தைக் கூட்டிக் கொள்ள வேண்டும். மனதில் இருக்கும் சோகம், துக்கம், வேதனை போன்றவற்றை அடுத்தவர்களோடு பகிர்ந்து கொள்ளும் போதுதான் அவை குறையும். ஆறுதல் சொல்ல நண்பர்கள் இருப்பதே பெரும் பலமாக இருக்கும்.
இவற்றுக்கெல்லாம் என்னதான் தீர்வு?
கொண்டாட்டத்தை அனுபவிக்கக்கூடிய மனநிலை இருப்பது போன்று, அதை நிறுத்துவதற்கான மனநிலையையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லா வாரமும் கொண்டாட்டம் வேண்டும் என்று அடம்பிடிக்கக் கூடாது.
ஒருவாரம் குடும்பத்துக்கு, ஒரு வாரம் பழைய நண்பர்களுக்கு என்று விடுமுறையைப் பகிர்ந்து கொண்டால் எந்தப் பிரச்னையும் வராது.
இந்த விஷயத்தில் ஐ.டி. நிறுவனங்களும் தங்களது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக இதுபோன்ற கொண்டாட்டங்களை சில நிறுவனங்கள் ஊக்குவிக்கின்றன. ஊழியர்களுக்குத் தேவையான வாகன வசதி செய்து தருவது, மது மற்றும் உணவு வகைகளை ஏற்பாடு செய்வது, ஹோட்டல் ரிசார்ட்ஸ் புக் செய்வது என்றெல்லாம் ஊழியர்களை பலமாகக் கவனிக்கிறார்கள்.
இவையெல்லாம் ஊழியர்களின் நன்மைக்காகச் செயல்படுகின்றன என்றுதான் நிறுவனங்கள் சொல்கின்றன. ஆனால் நிறுவனங்களின் இத்தகைய ஏற்பாடுகள் ஊழியர்களின் வாழ்க்கையைத்தான் பாதிக்குமே தவிர, நன்மை எதையும் செய்து விடாது. ஊழியர்கள், அதலபாதாளத்தை நோக்கிப் பயணப்பட்டால், நிறுவனங்கள் கைகொடுத்து அவர்களை மீட்க வேண்டும். மாறாக அழிவுக்கான பயணத்தை விரைவுபடுத்தி விடக்கூடாது.
Categories: 

மனநோயின் அறிகுறிகள்!


மனநோய் ஏற்படுவதற்கான பல்வேறு காரணங்கள், எந்தெந்த மாதிரியான தருணங்களில் மனநோயாளிகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது பற்றிய தகவல்களை ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.
மனநோய்க்கும், தூக்கமின்மைக்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளதையும் குறிப்பிட்டிருந்தோம். சிந்தனைத் திறன் பாதிக்கப்படும்போதே மனநோய் ஏற்படுகிறது.
நமது சிந்தனைத் திறனைக் கட்டுப்படுத்துவது உடலின் தலைமைச் செயலகமான மூளையில் உள்ள நரம்பு மண்டலமே.
ஒருவரின் சிந்தனைத் திறன் என்பது வயதிற்கேற்ப, காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வேறுபடுகிறது.
குழந்தைப் பருவத்தில் உள்ளவர்கள், விளையாட்டு, பள்ளிப் படிப்பு, நண்பர்கள், புதிய பொருட்களை வாங்குதல், புத்தாடை, அணிகலன்கள், புத்தகங்களைப் படித்தல் என ஒவ்வொரு வயது நிலையிலும் அவர்களது சிந்தனை பரந்து விரிந்து கொண்டே செல்கிறது. ஆனால், பெரிய அளவிலான எதிர்பார்ப்பு நிறைவேறாதபோது, சிலர் பித்துப் பிடித்ததைப் போல் ஆகிவிடுவர்.
சிறு குழந்தைகளே கூட, சற்றே அதட்டலாகப் பேசினால், அவர்களின் முகபாவம் மாறிவிடுவதைப் பார்க்கிறோம். மிகவும் நம்பிக்கொண்டிருந்து விட்டு, குறிப்பிட்ட ஒரு பொருளோ அல்லது பதவியோ கிடைக்காமல் போனால்கூட சிலருக்கு ஒருவித மன அழுத்தம் உருவாகக்கூடும்.
நாம் மிகவும் நேசிக்கும் ஒருவர், அதாவது தாயோ – தந்தையோ மரணம் அடைந்தால் அவர்களின் இழப்பைத் தாங்க முடியாத துயரின் காரணமாகக்கூட சிலருக்கு மனநோய் ஏற்பட வாய்ப்புண்டு. ஆழ்ந்த பற்றுடன் வாழ்ந்துவிட்டு அவர்கள் மறைந்துவிடும் போதோ அல்லது அகால மரணம் ஏற்படும்போதோ இப்படிப்பட்ட பாதிப்பு ஏற்படுகிறது.
மனஅழுத்தமும், மனநோயும் தொடர்புடையது என்று ஏற்கனவே பார்த்தோம். நரம்புமண்டலத்தில் கட்டளைகளாக பதிவாகும் விஷயங்கள், நிறைவேறாமல் போகும்போதே பெரும்பாலானோருக்கு மனநோய் ஏற்படுகிறது.
இன்னும் சிலர், கஞ்சா, அபின், பிரெளன் சுகர் போன்ற போதைப்பொருட்களை உபயோகிப்பதால் அதிகளவில் மூளை நரம்புகள் தூண்டப்பட்டு பின்னர் அது மூளையின் சொல்படி நடக்காமல் போவதாலும் மனநோய்க்கு ஆளாகின்றனர்.
அரிய நிகழ்வாக, அதிகளவு புத்தகப்புழுவாக இருப்பதால், சிந்தனை பாதிப்புக்குள்ளாகி மனஅழுத்த நோய்க்கு ஆளானவர்களையும் பார்க்கிறோம்.
எனவே மனநோய் எந்தமாதிரி, எந்த சூழ்நிலையில் ஏற்படுகிறது என்பதை விடவும், அந்த நோய் ஏற்பட்டு விட்டால்,. அதனை குணப்படுத்துவது எப்படி என்பது பற்றித்தான் நாம் யோசிக்க வேண்டும்.
முதலில் ஒருவருக்கு மனநோய் இருப்பதை எப்படி அறிந்து கொள்வது?
அதிகநேரம் – அதாவது மணிக்கணக்கில் – நாள்கணக்கில் தனிமையில் இருப்பது, யாருடனும் பேசாமல் ஒரே இடத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருத்தல், சம்பந்தமின்றி தானாகப் பேசுதல் அல்லது புலம்புதல் போன்றவை இந்நோய்க்கான அடிப்படை அறிகுறிகள் எனலாம்.
நோயின் தன்மையைப் பொருத்து அறிகுறிகளும் வேறுபடலாம். சிலர் அதிக நேரம் தண்ணீரை திறந்து விட்டு குளித்துக் கொண்டேயிருப்பர். வேறு சிலர் குளிக்கவே மாட்டார்கள். இதுபோல மனநோயாளிகளுக்கான அடையாளங்கள் பல உண்டு.
முதலில் மனநோய் என்று தெரிந்தவுடன், சம்பந்தப்பட்ட நோய்க்கு சிகிச்சையளிக்கக் கூடிய மனோதத்துவ நிபுணர்களை அணுக வேண்டும்.
அவர்களின் அறிவுரைப்படி மாத்திரைகளை சாப்பிட வேண்டும். மனோதத்துவ நிபுணர்களைப் பொருத்தவரை பெரும்பாலும் கவுன்சலிங் எனப்படும் கலந்துரையாடல் மிக மிக முக்கியமானது.
நோயாளியுடன் மருத்துவ நிபுணர் பேசுவதால், பல விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது. அதற்கேற்ப சம்பந்தப்பட்ட நோயாளிக்கு நோயின் தீவிரத்தை அறிந்து, சிகிச்சை அளிக்க முடியும்

மனநோய்க்கு அடிப்படை என்ன?


மனோதத்துவம் (Psychology) என்றால் என்ன என்பதை அடிப்படையில் புரிந்து கொள்தல் அவசியம்.
உதாரணமாக ஒரு சிலர் தினமும் இரவு நேரத்தில் மது அருந்துவதை வழக்கமாக்கிக் கொண்டிருப்பார்கள். ஒரு நாள் மது அருந்த தவறும் பட்சத்தில் அவருக்கு மன அழுத்தம் ஏற்படுகிறத. தொடர்ந்து குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு காலப்போக்கில் கைநடுக்கம் போன்ற நரம்பு தளர்ச்சி பாதிப்புகள் ஏற்படத் தொடங்குகிறது. இதுவே சிலருக்கு மனநோய்க்கும் அடிப்படையாக அமைகிறது.
பொதுவாக அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளும், மனஅழுத்தமும் ஒன்றுக்கொன்று எவ்விதம் தொடர்புடையதோ, அதேபோல மனநோயும், தூக்கமின்மையும் நெருங்கிய கூட்டாளிகள் எனலாம்.
தூக்கமின்மை காரணமாக உடல் சூடு உட்பட பல்வேறு உடல் கோளாறுகள் ஏற்பட்டாலும் கூட, அதிக நாட்கள் அல்லது ஒரு நாளில் அதிக நேரம் தூக்கமின்றி இருந்தால் அது மனநோய்க்கு வித்திடும் என்பது உறுதி.
பொதுவாக மனித உடலுக்கு தினமும் 8 மணி நேர தூக்கம் அவசியமாகிறது. அது அதிகரித்தாலோ அல்லது போதிய அளவு தூக்கமின்மையாலோ மூளை சோர்வு ஏற்படுகிறது. அதனால்தான் தூக்கமின்மைக்கும், மனோவியாதிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதென உளவியல் கூறுகிறது.
பொதுவாக மனநோய் உள்ளவர்கள் மருத்துவர்களை அணுகினால், முதலில் அவர்களுக்கு அளிக்கப்படுவது நிம்மதியான உறக்கத்தை கொடுக்கக்கூடிய மாத்திரை, மருந்துகளே.
மனநோய் துவக்க நிலையில் உள்ளவர்கள் இரவு நேரத்தில் நன்றாக – போதிய அளவு தூங்கினாலே அவர்களுக்கு 90 சதவீத குணம் ஏற்பட்டு விடும்.
மனநோய் என்பது பல்வேறு நிலைகளில், அதன் தீவிரத்தைப் பொருத்து வேறுபடுகிறது.
எந்தெந்த மாதிரியான தருணத்தில் மனநோயாளிகள் பாதிப்புக்குள்ளாகிறார்கள், அவர்களின் தன்மைக்கேற்ப தீர்வு அல்லது எந்த மாதிரியான மனோதத்துவ நிபுணர்களை அணுகலாம் என்பது பற்றியெல்லாம் இப்பகுதியில் தொடருவோம்.
.

மனநலத் துறையில் புரட்சி : டாக்டர் சி. ராமசுப்பிரமணியம்

மருத்துவத்தில் முதுகலைப் பட்டம். வாங்கிக் குவித்திருக்கும் விருதுகளோ ஏராளம். ஆனாலும் டாக்டர் சுப்பிரமணியத்தின் முகத்தில் பெருமையின் சுவடு கொஞ்சம் கூட தெரியவில்லை. மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் தங்களுக்கு இயன்ற வழிகளில் மற்றவர்களுக்கு உதவ வேண்டும். சக மனிதர்களுக்கு உதவுவது சாதனையல்ல. அனைவரும் நிறைவேற்ற வேண்டியது கடமை என்கிறார் வெகு இயல்பாக.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் மகத்தான பணியில் சுப்பிரமணியம் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருப்பதற்கு உருக்கமான பின்னணி உண்டு. மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு சமூகம் அளிக்கும் நிலை, அவர்களது குடும்பத்தினர் சந்திக்கும் சங்கடங்கள் இதையெல்லாம் இவரும் அனுபவித்தவர் தான்.
உறவினர்களால் ஒதுக்கப்பட்ட, சமூகத்தால் தள்ளிவைக்கப்பட்ட இவர்களுக்கு மறுவாழ்வு கொடுப்பதையே தனது இலக்கு என்பதை தீர்மானித்தார். மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் மகத்தான பணியை எந்தவித ஆரவாரமின்றி ஒரு தவமாகவே செய்து வரும் இந்த மனித நேயமிக்க மருத்துவரை சந்தித்து பேசியதிலிருந்து…
கேள்வி : குடும்பம், தொழில், சம்பாத்தியம் என்ற சராசரி கோட்டிற்குள் இல்லாமல் மனித நேயபணிகள் சமூகப் பணிகளில் ஈடுபடக் காரணம்?
பதில் : என்னை பொருத்தவரை, வளர்ந்த விதம் வளர்க்கப்பட்ட விதம் மிகவும் முக்கியமானவை. எனது தந்தை ஒரு பொறியாளர் என்பதை விட கருணை உள்ளம் கொண்டவர் என்று தான் பலருக்குத் தெரியும். எதாவது ஒரு சந்தர்பத்தில் யாருக்காவது உதவி செய்ய வேண்டிய நிலை வந்தால், உடனே செய்து விடு. இல்லையென்றால் மீண்டும் அந்த சந்தர்ப்பம் உனக்கு அமையாது என்று என்னிடம் அடிக்கடி கூறுவார். இதுவே என்னை நான் சமூகப் பணியில் ஈடுபடுத்திக் கொள்ளக் காரணம்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற காரணம் எனது சகோதரரின் மரணம் தான். மனநலம் பாதிக்கப்பட்ட அவருக்கு உரிய மருத்துவ வசதிகள் கிடைக்காததால் அவர் எங்களை விட்டு பிரிந்தார். அவரின் மரணம் எனது குடும்பத்தை எந்தளவு பாதித்தது என்பது எனக்குத் தான் தெரியும். இது போன்ற நிலை யாருக்கும் வரக்கூடாது, மனநலம் பாதிக்கப் பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என எண்ணினேன்.
20 விழுக்காட்டினர் மனநல பாதிப்பின் ஆரம்பத்தில் உள்ளனர்!
கேள்வி : இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் மனநலம் பாதிக்கப் பட்டோரின் நிலை பற்றி விரிவாக …
பதில் : நாட்டின் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 2 சதவீதம் பேர் மனநல நோயினால் பாதிக்கப் பட்டு உடனடி சிகிச்சைக்காக காத்துக்கொண்டு இருக்கின்றனர் . இது தவிர 20 சதவீதற்கும் மேற்பட்டோர் மனநல பாதிப்பின் ஆரம்ப கட்டத்தில் உள்ளனர். அத்தனை பேருக்கும் மருத்துவம் பார்க்க மருத்துவர்கள் இல்லை. மொத்தமாகவே 15 ஆயிரம் மருத்துவர்கள் தான் உள்ளனர். விதவிதமான மருந்துகளும், மாத்திரைகளும் வந்து கொண்டுதான் இருக்கின்றனர். நவீன விஞ்ஞான உலகத்தில் ஒரு அமைதிப் புரட்சியே நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் குணப்படுத்துவது எளிது.
கேள்வி : மருத்துவ சிகிச்சை முறைகளால் மட்டுமே மனநலக் குறைபாடுகளுக்கு தீர்வு காணமுடியுமா?
பதில் : நிச்சயமாக இல்லை. சிகிச்சை முறையில் மருந்து, மாத்திரைகள் ஒரு அங்கமே தவிர அதன் மூலமே தீர்வுக் காணமுடியும் என்பது சாத்தியமில்லாத ஒன்று. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் முதலில் கவுன்சிலிங் நடத்தப்படும். இறுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மறுவாழ்வுப் பயிற்சியின் மூலம் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வரப்படுகின்றனர்.
மனநல குறைபாட்டின் அறிகுறிகள்!
கேள்வி : மனநலக் குறைபாடுகளுக்கான அறிகுறிகள் உண்டா?
பதில் : சில அறிகுறிகளை வைத்து அவர்கள் மனநலப் பாதிப்பின் ஆரம்பக்கட்டத்தில் உள்ளார்கள் என்பதை நம்மால் யூகிக்க முடியும். உதாரணமாக கலகலப்பாக பேசி சிரிக்கும் ஒருவர் திடீரென்று யாரிடமும் பேசாமல் மௌனமாக இருப்பது, நன்கு படிக்கும் மாணவர் திடீரென சரிவர படிப்பில் கவனம் செலுத்தாமல் இருப்பது, அமைதியாக இருப்பவர் அதிகமாக பேசுவது போன்றவற்றை அறிகுறிகளாக சொல்லலாம்.
கேள்வி : மனநல பாதிப்புக்கு ஆளாவதற்கான காரணங்கள்…
பதில் : அளவுக்கு மீறி ஆசைப்பட்டு அது அடைய முடியாத நிலை வரும் போது ஏற்படும் விரத்தி , நல்ல திறமை இருந்தும் அதற்கான சூழ்நிலை வராமல் போகும் போது ஏற்படும் மன அழுத்தம், தன்னுடைய உணர்வுகளை யாருடனும் பகிர்ந்து கொள்ளாமல் மனதில் போட்டு அழுத்தி வைப்பது போன்றவையெல்லாம் மனநலம் பாதிப்பிற்கான காரணங்களாக அமைகின்றன.
கேள்வி : சிகிச்சை முறையில் மட்டுமின்றி வேறு எந்தவிதமான வசதிகள் மற்றும் சூழ்நிலைகளை உருவாக்கி தரவேண்டும்.
பதில் : மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இயற்கைச் சூழலுடன் கூடிய இட வசதி மிகவும் அவசியமான ஒன்று. அவர்களை சங்கிலியால் கட்டிப் போடுவதோ, தனி அறையில் பூட்டி வைப்பதோ கூடாது. சுதந்திரமாக செயல்பட அவர்களை அனுமதிக்க வேண்டும். கவுன்சிலிங் மூலம் அவர்களின் மனநிலையை அறிந்து ஏதாவது ஒரு துறையில் அவர்களின் திறமையை வெளிக்கொணர வேண்டும். குறிப்பாக தாழ்வு மனப்பான்மையை போக்கி அவர்களை ஊக்குவிப்பது முக்கியமான ஒன்று. இதனால் அவர்களுக்கு தன்னம்பிக்கை வளரும். சமுதாயத்தில் தங்களாலும் சாதிக்க முடியும் என்ற எண்ணம் தோன்றும். கற்பனை உலகத்திலிருந்து எதார்த்தமான நடைமுறை வாழ்க்கைக்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கொண்டு வரவேண்டும்.
கேள்வி : சிகிச்சை முறைகளும் மருந்த முறைகளும் சராசரி சாமான்ய மக்கள் பெற சாத்தியமான நிலை உள்ளது.
பதில் : மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் மருந்து மாத்திரைகள் பொதுவாக விலை உயர்ந்தவை. ஆனால் மனநோயின் ஆரம்ப அறிகுறிகள் தெரிந்த உடனேயே சிகிச்சை மேற்கொள்ளப்பட்டால் மருந்தின் அளவும் அவர்களை குணப்படுத்துவதற்கான கால அளவும் குறையும். சிகிச்சை நேரத்தில் மறுவாழ்வு பயிற்சியில் ஈடுபடுத்தும் போதும் அவர்களுக்கு கொடுக்கப்படும் மாத்திரையின் அளவும் குறையும்.
கேள்வி : மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக கொண்டு வரப்பட்ட சட்டம் எந்தளவில் பயனளிக்கிறது.
பதில் : இந்தியாவை பொறுத்தவரையில் மனநல மருத்துவத்தில் தமிழகம் மிக முன்னிலையில் உள்ளது. இதற்காக கொண்டுவரப்பட்ட சட்டமும் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் மனநல காப்பக மையம் ஆரம்பிக்க வேண்டுமென்றால் அரசின் அனுமதி பெற்ற பிறகே ஆரம்பிக்க முடியும். இது வரவேற்கக் கூடிய ஒன்று.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வந்து மறுவாழ்வு கொடுப்பது என்பது அவ்வளவு சாதாரண காரியமல்ல. ஆனால் இவரைப் போன்ற மனிதநேயமிக்க மருத்துவர்களும், அதற்கு துணையாக அரசும் எடுத்து வரும் முயற்சிகளை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. அதே தருணத்தில் சமுதாயமும், தன்னார்வத் தொண்டு நிறுவங்களும் இதற்கு எவ்வாறு உறுதுணையாக இருக்க வேண்டும்?

நோயா‌ளிக‌ளி‌ன் மனதை குண‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம்

 

ஆரோ‌க்‌‌கியமாக இரு‌க்கு‌ம் வரை நம‌க்கு ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌ம் தெ‌ரிவ‌தி‌ல்லை. ஏதேனு‌ம் நோ‌ய் தா‌க்‌கிய ‌பிறகுதா‌ன் நா‌ம் ஆரோ‌க்‌கியமாக இரு‌‌ப்பத‌ன் அவ‌சிய‌த்தை உண‌ர்‌‌கிறோ‌ம்.

வெறு‌ம் கா‌ய்‌ச்ச‌ல் வ‌ந்தாலே, கை, கா‌ல் சோ‌ர்வு, வா‌ய் க‌ச‌ப்பது போ‌ன்றவை ஏ‌ற்படு‌கிறது. ஒரு வார‌ம் வரை ந‌ம் அ‌ன்றாட வேலைகளை செ‌ய்ய இயலாம‌ல் போ‌கிறோ‌ம். மனதள‌வி‌ல் தள‌ர்‌ச்‌சியை உண‌ர்‌கிறோ‌ம். இதே உ‌யிரையே மா‌ய்‌த்து‌விடு‌ம் நோ‌ய்க‌ள் ந‌ம்மை‌த் தா‌‌க்‌கினா‌ல், நோ‌ய் ந‌ம்மை‌க் கொ‌ள்வத‌ற்கு மு‌ன்பு, நாமே பய‌த்தா‌ல்‌ அ‌ல்லவா ‌தின‌ம் ‌தின‌்‌ம் செ‌த்து மடி‌கிறோ‌ம்.
நோ‌ய் தா‌க்‌கியதா‌ல் ஏ‌ற்படு‌ம் மன உளை‌ச்சலா‌ல்தா‌ன் நோயா‌ளிக‌ள் அ‌திக‌ம் பா‌தி‌க்க‌ப்படு‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று மரு‌த்துவ‌ர்க‌ள் கு‌றி‌ப்‌பிடு‌கிறா‌ர்க‌ள். எ‌ந்த நோயு‌ம் 50 ‌விழு‌க்காடுதா‌ன் பா‌தி‌ப்பை ஏ‌ற்படு‌த்து‌ம். ஆனா‌ல் அதனா‌ல் ஏ‌ற்படு‌ம் மன உளை‌ச்சலா‌ல்தா‌ன் ஏராளமான நோயா‌ளிக‌‌ளி‌ன் நோ‌ய் ‌தீ‌விரமடை‌கிறது.
எனவே, நோயா‌ளிக‌ளி‌ன் மனதை முத‌லி‌ல் குண‌ப்படு‌த்த வே‌ண்டியது அவ‌சியமா‌கிறது. பொதுவாக நா‌ம் ஏதேனு‌ம் ஒரு ‌சி‌கி‌ச்சை பெற மரு‌த்துவரை அணு‌‌‌கினா‌ல், நோ‌ய்‌க்‌கான காரண‌த்தை‌க் கூ‌றி,இ‌ப்படி இ‌ப்படி இரு‌ங்க‌ள், இதனை சா‌ப்‌பிடு‌ங்க‌ள், நோ‌ய் ச‌ரியாக‌ி‌விடு‌ம் எ‌ன்று கூறுவா‌ர்க‌ள்.
‌சில மரு‌த்துவ‌ர்க‌ள், உ‌ங்களு‌க்கு இ‌ப்படி ஒரு நோ‌ய் வ‌ந்து‌வி‌ட்டது, இ‌ப்படி எ‌ல்லா‌ம் செ‌ய்யு‌ம், குண‌ப்படு‌த்த இ‌த்தனை நா‌ட்க‌ள் ஆகு‌ம் எ‌ன்று முத‌‌லிலேயே நோயா‌ளிக‌ளை பயமுறு‌த்‌தி‌விடுவா‌ர்க‌ள். இவ‌ர்களு‌க்கு ‌உ‌ரிய கால‌ம் ஆன ‌பிறகு‌ம் கூட நோ‌ய் குறையாது. அத‌ற்கு‌க் காரண‌ம், அவ‌ர்களது மன‌தி‌ல் உ‌ள்ள பய‌ம்தா‌ன்.
அதே‌ப்போல, பு‌ற்றுநோ‌ய் பா‌தி‌த்தவ‌ர்‌களு‌க்கு, பு‌ற்று நோ‌யினாலு‌ம், அத‌ற்காக எடு‌த்து‌க் கொ‌ள்ள‌ப்படு‌ம் ‌சி‌கி‌ச்சை‌யினாலு‌ம், உட‌லி‌ல் ப‌ல்வேறு உபாதைக‌ள் ஏ‌ற்படு‌ம். இதனா‌ல் ‌மிகு‌ந்த மன உளை‌ச்சலு‌க்கு உ‌ள்ளாவா‌ர்க‌ள். அவ‌ர்களது உருவ‌த்‌தி‌ல் மா‌ற்ற‌ம், தனது வேலைகளை செ‌ய்து கொ‌ள்ள முடியாம‌ல் போவது, அ‌திகமான வ‌லியை உண‌ர்வது, மரு‌ந்துக‌ளினா‌ல் ஏ‌ற்படு‌ம் ப‌க்க ‌விளைவுக‌ள் போ‌ன்றவை ஆரோ‌க்‌கியமான மனதை‌க் கூட கெடு‌‌த்து‌விடு‌ம்.
எனவே, மரு‌த்துவமனைக‌ளி‌ல் ப‌ணியா‌ற்று‌ம் ‌பி‌ஸியோதெர‌பி ‌நிபுண‌ர்க‌ள், இதுபோன‌ற் நோயா‌ளிகளு‌க்கு மன தை‌ரிய‌ம் அ‌ளி‌க்க வே‌ண்டு‌ம். எ‌ளிய உட‌ற்ப‌யி‌ற்‌சிகளை ‌க‌ற்று‌த் தர வே‌ண்டு‌ம். அ‌ல்லது நோயா‌ளிகளே ‌சி‌றிய ‌சி‌றிய உட‌ற்‌ப‌யி‌ற்‌சிகளை செ‌ய்து கொ‌ண்டு வர வே‌ண்டு‌ம். இதனா‌ல் உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் அசவுக‌ரிய‌ங்க‌ள் பல களைய‌ப்படு‌ம். இர‌த்த இழ‌ப்பு நோயாக இரு‌ப்‌பி‌ன், உட‌ற்ப‌யி‌ற்‌சி‌யினா‌ல் இர‌த்த ‌சிவ‌ப்பணு‌க்க‌ள் உருவாகு‌ம். கை கா‌ல்க‌ளி‌ல் இய‌‌ங்கு‌ம் த‌ன்மை அ‌திக‌ரி‌க்கு‌ம். நோயா‌ளிக‌ள் த‌ங்களது வேலைகளை தா‌ங்களே செ‌ய்து கொ‌ள்ள முடியு‌ம்.
நோயா‌ளிக‌ளி‌ன் நோயை குண‌ப்படு‌த்துவத‌ற்கு மு‌ன்பு, அவ‌ர்களது உட‌ல் இய‌க்க‌த்தை ‌சீரா‌க்‌கி அத‌ன் மூல‌ம் அவ‌ர்களது மன ‌நிலையை ச‌ரி செ‌ய்ய வே‌ண்டு‌ம். ந‌ம்‌பி‌‌க்கையை ஏ‌ற்படு‌த்த வே‌ண்டு‌ம். அவ‌ர்களு‌க்கு‌ள் இரு‌க்கு‌ம் த‌ன்ன‌ம்‌பி‌க்கையை த‌ட்டி எழு‌‌ப்ப வே‌ண்டு‌ம். இதனை மரு‌த்துவ‌ர்க‌ள் ம‌ட்டு‌‌ம்தா‌ன் செ‌ய்ய வே‌ண்டிய‌தி‌ல்லை. நோயா‌ளிக‌ளி‌ன் உற‌வின‌ர்க‌ள் கூட செ‌ய்யலா‌ம். எ‌ப்போது‌ம் நோயை‌ப் ப‌ற்‌றி‌ப் பே‌சி அழுகையை உ‌ண்டா‌க்காம‌ல், அவ‌ர்களு‌க்கு த‌ை‌ரிய‌ம் கூறலா‌ம்.
நோயா‌ளிகளு‌க்கு‌ப் ‌பிடி‌த்த வேலைகளை அவ‌ர்களாகவே‌ச் செ‌ய்ய‌ச் சொ‌ல்‌லி தூ‌ண்டலா‌ம். குழ‌ந்தைகளை அவ‌ர்களுட‌ன் ‌விளையாட ‌விடலா‌ம், தொ‌ற்று நோயாக இ‌ல்லா‌திரு‌ப்‌பி‌ன் அவ‌ர்களை பொது இட‌ங்களு‌க்கு‌ம், பொது ‌நிக‌ழ்‌ச்‌சிகளு‌க்கு‌ம் அழை‌த்து‌ச் செ‌ன்று, அவரு‌ம் சராச‌ரியான வா‌ழ்‌க்கை வாழ‌த் தகு‌தியானவ‌ர்தா‌ன் எ‌ன்பதை ஞாபக‌ப்படு‌த்தலா‌ம்.
உற‌வின‌‌ர்க‌ளி‌ன் ‌வீடுகளு‌க்கு‌ச் செ‌ன்று உறவுபாரா‌ட்டலா‌ம், பழைய ந‌ண்ப‌ர்களை தேடி‌ப் ‌பிடி‌த்து ச‌ந்‌தி‌க்க‌ச் செ‌ய்யலா‌ம். எ‌ப்படியேனு‌ம், அவ‌ர்க‌ள் நோ‌யுட‌ன் போராட மன தை‌ரிய‌த்தை உ‌ருவா‌க்க வே‌ண்டியது அ‌வ‌சிய‌ம்.
ம‌னிதனு‌க்கு முத‌‌ல் எ‌தி‌ரியே பய‌ம்தா‌ன். இ‌ந்த பய‌த்தை மன‌தி‌ல் இரு‌ந்து அக‌ற்‌றி‌வி‌ட்டு, மன உளை‌ச்சலை குறை‌த்து‌வி‌ட்டு, நோயா‌ளிகளு‌க்கு மன தை‌ரிய‌த்தையு‌ம், த‌ன்ன‌ம்‌பி‌க்கையை ஏ‌ற்படு‌த்துவதே முத‌ல் கடமையாகு‌ம். இதுதா‌ன் அவ‌ர்களது நோயை ‌விர‌ட்டு‌ம் மு‌க்‌கிய ‌சி‌கி‌ச்சையாகு‌ம்.