Tuesday, April 3, 2012

கண்களை களையாக மாற்றும் மேக் அப் டிப்ஸ்





கண்களின் தான் முகத்தின் அழகை எடுத்துக்காட்டும் கண்ணாடி. ஆரோக்கியமான கண்களே அழகான கண்கள். எனவே கண்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டும். கண்கள் சிவந்துபோதல், மேக் அப் அலர்ஜியால் கண்கள் பாதிக்கப்படுதல், காண்டாக்ட் லென்ஸ், சன்ஸ்கிரீன் போன்றவற்றால் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.
கண்களுக்கு தனி கவனம் செலுத்தி மேக் அப் போடுவதால் கண்களின் அழகு அதிகரிக்கும். முகத்திற்கும் தனி பொலிவு கிடைக்கும். கண்களுக்கு போடும் மேக்அப் சாதனங்களை சரியானதாக தேர்வு செய்யவேண்டும். கண்மை, ஐ லைனர், ஐ ஷேடோ போன்றவை தரம் வாய்ந்தவையாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான் அலர்ஜியினால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.
கண்களுக்கு போடும் மேக் அப் கலர் சரியானதாக இருக்கவேண்டும். உங்களுடைய ஸ்கின் டோனுக்கு ஏற்ற சரியான கலரை தேர்ந்தெடுத்து போடவேண்டியது அவசியம். கண்களின் வடிவத்திற்கு ஏற்ப கவனம் செலுத்தி மேக் அப் போடவேண்டும். அப்பொழுதுதான் சரியான அளவில் அழகாய் மேக் அப் போடமுடியும்.
தரமான மேக் அப்
கண்களுக்கு இரவில் திக்காகவும், பகல் நேரத்தில் லைட்டாகவும் மேக் அப் போடவேண்டும். அப்பொழுதுதான் இயற்கையான ஒரு லுக் கிடைக்கும். கண்கள் மென்மையானவை அவற்றிற்கு தனி கவனம் செலுத்தி மேக் அப் போடவேண்டும். லேட்டஸ்ட் மேக் அப் போடுவதன் இளமையாக, ஸ்டைலாக காணப்படுவீர்கள்.
முதலில் நல்ல தரமான பவுண்டேஷன் தடவ வேண்டும். பிறகு விருப்பமான நிறத்தில் ஐ ஷேடோ தடவ வேண்டும். காலை வேளைகளில் லைட்டான ஷேடுகளிலும் மாலை மற்றும் இரவு வேலைகளில் டார்க் நிறங்களையும் உபயோகிக்கலாம். பிறகு ஐ லைனர் தடவ வேண்டும். இப்போதெல்லாம் திக்காக ஐ லைனர் தடவுவதுதான் பேஷன். சிறிய கண்களாக இருந்தால் ரொம்பவும் திக்காகப் போட வேண்டாம். கீழ் பாகத்தில் முழுவதுமாக ஐ லைனர் தடவ வேண்டாம்.
பிறகு மஸ்காரா, காலை வேளைகளில் ஒரு கோட்டும் மாலை வேளைகளில் இரண்டு மூன்று கோட்டுகளும் தடவலாம். மஸ்காராவிலேயே இப்போது பிரவுன் நீலம் மாதிரி நிறங்கள் கூட வந்துவிட்டன. விருப்பமுள்ளோர் அவற்றையும் தடவிப் பார்க்கலாம். கடைசியாக காஜல் அதாவது கண் மை. இது கண்களுக்குள்ளே போகக் கூடியது என்பதால் தரமானதாக இருக்க வேண்டியது அவசியம்.
மேக் அப் கலைக்க
கண்களில் போடப்பட்ட மேக்கப்போடு இரவு தூங்கக் கூடாது. அதை அகற்றி விட்டே தூங்கச் செல்ல வேண்டும். தினசரி இரவு தூங்கும் முன்பாகக் கண்களுக்குள் ஒரு துளி சுத்தமான விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டால் காலையில் கண்கள் பளிச்சென்று இருக்கும்.
கண்களின் மேக் அப் கலைக்கும் போது சோப், சோப் ஆயில் பயன்படுத்தவது கண்களில் எரிச்சலை ஏற்படுத்தும். எனவே அதற்கென உள்ள கிளன்சர்ஸ் பயன்படுத்திதான் மேக் அப் கலைக்கவேண்டும். இரவு உறங்கும் முன் கண்டிப்பாக கண்களின் மேக் அப் கலைத்துவிட்டுதான் உறங்கவேண்டும்.
கருவளையம் போக்க
கண்களின் கீழ் கருவளையம் வருவதற்கு காரணம் தூக்கம் இன்மை, ஒழுங்காக சாப்பிடாமல் இருப்பது. தண்ணீர் அதிகமாக குடிக்காமல் இருப்பதாலும், அதிகமாக டி.வி. பார்ப்பது, இவை எல்லாம் காரணம் ஆகிறது. கருவளையம் வராமல் தடுக்க, குறைந்தது 8 மணி நேரம் நன்றாக உறங்கவேண்டும். தூங்கும் போது எந்த விதமான மன உளைச்சல்களும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கண்களுக்கு புத்துணர்ச்சி
உறங்கும் முன் சூடான பாலில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல தூக்கம் வரும். மனதையும், உடலையும் டென்ஷன் ஆக வைத்துக் கொள்ளாமல் ரிலாக்சாக இபேருப்பதும், நல்ல தூக்கத்திற்கு வழி செய்யும். வெள்ளரிகாய், உருளைகிழக்கு, தக்காளி ஆகியவற்றை மெலிதாக கட் செய்து கண்களுக்கு மேல் வைக்கவும், இதனால் கண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
வெள்ளை சாமந்திப் பூவின் இதழ்களைப் பிய்த்து அதை வெந்நீரில் போட்டு அப்படியே மூடி வைத்துவிட வேண்டும். அதில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்துக் கொண்டு ஓய்வெடுக்கலாம். இது கண்களுக்குக் குளிர்ச்சியைத் தருவதோடு கருவளையங்களை போக்கும்.
கண்களின் அழகிற்கு
வைட்டமின் ஏ சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். பால், பால்பொருட்கள், கீரை, முட்டை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறப் பழங்கள் மற்றும் காய்கள். அதோடு போதிய அளவு தண்ணீர் குடிக்கவேண்டியதும் மிக முக்கியம்.

சன் கிளாஸ் வாங்கப்போறீங்களா? கவனம் !


கொளுத்தும் கோடை வெயிலில் தொப்பி, கண்ணாடி இல்லாமல் வெளியில் போகமுடியாது. ஏனெனில் கோடையில் கண்களை பாதுகாப்பது அவசியம். என்றைக்காவது வெளியில் சென்றால் பாதிப்பு அதிகம் இருக்காது. ஆனால் அடிக்கடி வெளியில் சுற்றுபவர்கள் புறஊதாக்கதிர்களினால் பாதிக்கப்பட்டு கண் எரிச்சல், கண்சிவந்து போதல் ஏற்படும். இதனை தவிர்க்க சன்கிளாஸ் அணிந்து செல்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.
கண்ட கண்ட கூலிங்கிளாஸ்களை வாங்கி அணிவதை விட தரமான கண்ணாடிகளை வாங்கி அணிவதே கண்ணிற்கு பாதுகாப்பானது என்றும் மருத்துவர்களும், அழகியல் நிபுணர்களும் தெரிவிக்கின்றனர். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.
உஷ்ணத்தில் பாதுகாப்பு
வெளியில் பயணம் செய்யும்போது ‘சன் கிளாஸ்’ அணிவதனால் உஷ்ணத்தில் இருந்து கண்களை பாதுகாக்கும். இதனால் கண்கள் சோர்வடையாமல் புத்துணர்ச்சியாக இருக்கும். முக்கியமாக கறுப்புக் கண்ணாடிகளே கண்களுக்கு குளிர்ச்சி. கோடைகாலங்களில் கறுப்பு கண்ணாடிகளே பெஸ்ட். ஏனென்றால் சூரிய வெளிச்சத்தில் இருக்கும் அல்ட்ரா கதிர்கள் 50 சதவீதம் 60 சதவீதம் வரை தாக்காமல் பாதுகாக்கின்றது.
சன் கிளாஸ் அணிந்து கண்ணாடியில் பார்த்தால் கண்கள் தெரிய கூடாது. அப்படி தெரிந்தால், அந்த லென்ஸ் உங்கள் கண்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்காது. எனவே கண்களை முற்றிலும் கவர் செய்யக்கூடிய சன் கிளாஸ் அணிவதே ஏற்றது. கண்களில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளவர்கள் அதற்கேற்ற கண்ணாடிகளை அணிய வேண்டும்.
சரியான சன் கிளாஸ்
சன் கிளாஸ் லென்ஸ் நிறத்தை தேர்தெடுக்கும் போது கவனம் தேவை. அதோபோல் சன் கிளாசிற்கு நாம் கொடுக்கும் விலை சரியானதுதானா என்பதை பார்க்கவேண்டும். லென்ஸ் மீது கீறல் விழாமல் இருப்பதற்கு என கோட்டிங் பூசப்பட்டிருக்கிறதா? என கவனிக்க வேண்டும். அதேபோல் தண்ணீர் மூலம் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கோட்டிங் எதுவும் உள்ளதாக என கவனிக்க வேண்டும். புற ஊதாக்கதிர்களில் இருந்து கண்களை பாதுகாக்கக் கூடிய கண்ணாடிதானா என்பதை கண்டறிந்து வாங்குவது நல்லது.
முகத்திற்கு ஏற்ற ப்ரேம்
முக்கியமாக சன் கிளாஸ் ப்ரேம் முக அமைப்பிற்கு ஏற்றதாக இருக்கிறதா என ஒருமுறைக்கு இருமுறை போட்டுப்பார்த்து வாங்கவேண்டும். அதேபோல் லென்ஸ் வடிவம் ஓவல், சதுரம் முக்கோணம், வட்டம் என பலவடிவங்களில் உள்ளது அதில் எந்த வடிவம் நம்முகத்திற்கு ஏற்புடையதாக இருக்குமோ அதனை தேர்ந்தெடுத்து வாங்கவேண்டும் என்று ஆலோசனை கூறுகின்றனர் அழகியல் நிபுணர்கள்.
கோடை காலம் தொடங்கிவிட்டாலே கண் இமைகளின் மேல் வாரம் ஒருநாள் இரவு நேரத்தில் வாசலின் கொண்டு மென்மையாக மசாஜ் செய்து விட்டுப் படுக்கவும். இது கண் இமைகள் வறண்டு போகாமல் தடுக்கும்.

இளநரையா? கவலைப்படாதீங்க!


கூந்தல் கருமையாக இருப்பதுதான் இந்தியர்களுக்கு அழகு. இளமையிலேயே கூந்தல் நரைக்க ஆரம்பித்தாலோ, செம்பட்டையாக காணப்பட்டாலே தாழ்வுமனப்பான்மையில் தவித்து போகின்றனர் இளைய தலைமுறையினர். உடம்பில் பித்தம் அதிகரித்தால் முடி நரைக்கத் தொடங்குகிறது.
நமது தலைமுடியின் நிறம், பிறப்பிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. முடிஉறை அடியிலிருக்கும் மெலானோசைட்ஸ் நம்முடிக்கு நிறமளிக்கும் செல்கள். இவை மெலானின் என்ற நிறமியை தயாரிக்கின்றன. மெலானின் அளவுப்படி தோல், முடி நிறங்கள் அமைகின்றன. வயதாகும் போது மெலானின் உற்பத்தி குறைந்து பின் நின்று விடும். வயதால் முடி நரைத்தால் அதற்கு மாற்று இல்லை. நரைமுடியை மீண்டும் கறுப்பாக மாற்ற வழி இல்லை. ஆனால் இளம் வயதிலேயே தலை நரைத்தால் அதை குணப்படுத்தலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்
வைட்டமின் பற்றாக்குறை
பரம்பரை – பெற்றோர்களுக்கு, முடிக்கு நிறம் தரும் மெலானின் குறைபாடு இருந்தால், அவர்களின் மக்களுக்கும் இளநரை தோன்றும் வாய்ப்புகள் அதிகம். உடல் ஆரோக்கிய பாதிப்புகளும், உணவுச்சத்து குறைபாடுகளும் காரணமாகலாம். குறிப்பாக வைட்டமின் பி குறைபாடுகளும், தைராய்டு பிரச்சினையும் நரை தோன்ற காரணமாகும்.
வைட்டமின் பி உணவுப்பொருட்களை உண்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள். வைட்டமின் கே குறைபாடும் நரை வர காரணமாகலாம். இந்த வைட்டமின் கறிவேப்பிலை, நெல்லிக்காய், சுண்டைக்காய், பாகற்காய், பீர்க்கங்காய், பீட்ரூட், நாவல் பழம் இவற்றில் உள்ளது அவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இளநரையை தவிர்க்கலாம்.
இளநரையை தடுக்க
மருதாணி, செம்பருத்தி, கறிவேப்பிலை மூன்றையும் சம அளவில் கலந்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் ஊறவைத்து அலசி குளித்தால் இளநரை முடி, கறுப்பாகும்.
இதே போல கறிவேப்பிலை, கரிசிலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி கீரைகளை பயன்படுத்தலாம். மேற்சொன்ன கீரைகளுடன், கீழாநெல்லியையும் சேர்த்துக் கொள்ளலாம்.
ஒரு கைப்பிடி அளவு பச்சைத்துளசி இலையை எடுத்து ஒரு கப் தண்ணீரில் இட்டு காய்ச்சி பின்னர் இந்த நீரை எடுத்து இளம் சூட்டோடு தலையில் உரசி முடி வேர்க்கால் முதல் நுனிவரை தினசரி தடவி வந்தால் நரை நீங்கும். முடி கறுமை நிறம் பெறும்.
மருதாணி தைலம்
ஒரு கைப்பிடி அளவு மருதாணி இலையை எடுத்து மைபோல அரைத்து அத்துடன் 50 மிலி தேங்காய் எண்ணெயையும் 25 மிலி தண்ணீரும் சேர்ந்து காய்ச்சி எண்ணெயை எடுத்து வடிகட்டி வைத்துக் கொண்டு தினசரி குளிக்கும் முன்பு தலையில் அரைமணி முன்பாக தடவி பின்பு குளித்து வர, நரை நீங்கும்.
மருதாணி பொடி – 1 டீஸ்பூன், தயிர் – 1 டீஸ்பூன், வெந்தயப்பொடி – 1 டீஸ்பூன், காபி – 1 மேஜைக்கரண்டி, புதினா சாறு – 2 மேஜைக்கரண்டி, துளசி சாறு – 2 மேஜைக்கரண்டி, இந்த விழுதை தலையில் 2 லிருந்து 4 மணி நேரம் வைத்து ஊறவும். பிறகு இயற்கை ஷாம்புவால் அலசவும்.
ஊட்டச்சத்துணவுகள்
கறிவேப்பிலையை தினசரி உணவில், சாம்பார், ரசம் தாளிக்கையில், சட்னியாக, துவையலாக சேர்த்துக் கொள்ள வேண்டும். கறிவேப்பிலையை பச்சையாக அரைத்து உபயோகித்தால் அதன் முழுப்பலன் கிடைக்கும். கறிவேப்பிலையை பச்சையாகவே பெறும் வயிற்றில், காலையில் சாப்பிட்டு வரலாம்.
கரிசிலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி கீரைகளும், முடி கருமையாக வளரவும், நரை வராமல் தடுக்கவும் செய்யும். இந்த மூன்று கீரைகளையும் இரண்டு மாதம் பயன்படுத்தினால் உடற்சூடு தணிந்து, கண்கள் குளிர்ந்து, முடியும் ஆரோக்கிய மடையும்.
இஞ்சியை சீவி, தேனுடன் கலந்து வைத்துக்கொள்ளவும். தினமும் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வரவும். இதேபோல் வைட்டமின் பி சத்து நிறைந்த உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும் இதனால் இளநரையை தவிர்க்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

உண்ணும் உணவு ஜீரணமாகலையா? வீட்டிலேயே மருந்திருக்கு!



நாம் உண்ணும் உணவு நன்றாக ஜீரணமாகி, சத்துக்களாக மாற்றப்பட்டு உடலில் சேர வேண்டும். அதேபோல் கழிவுகள் வெளியேற்றப்பட வேண்டும். இதற்கு ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுவது அவசியம். உணவு ஜீரணமாகாவிட்டால் வயிறு உப்புசம், சங்கடமான உணர்வு, சில சமயங்களில் வலி, பசியின்மை போன்றவை ஏற்படுகிறது.
நாம் உட்கொள்ளும் உணவை உடலுக்கேற்றதாக மாற்றி அமைப்பதை ஜீரண சக்தி என்கிறோம். இதற்கு வயிற்றில் உள்ள ‘சூடு’தான் உணவு ஜீரணமாக உதவும். நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளும் கடுகு, மிளகு, கொத்தமல்லி, மிளகாய் முதலான பொருட்கள் இந்த சூட்டை குறையவிடுவதில்லை.
அஜீரணத்தை போக்க
அதிக உணவை உண்ணுதல், காலம் தவறி உண்ணுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அடிக்கடி அதிகமாக உண்பது, மனஅழுத்தம் போன்றவையும் அஜீரணத்தை ஏற்படுத்தும் எனவே இவற்றை தவிர்க்க வேண்டும்.வயிறு முட்ட உண்ணுவதை தவிர்க்க வேண்டும். உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். முதல் கவளத்தை நெய்யுடன் கலந்து உண்ணவும். கனமான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த பானங்கள் நீர் அருந்துவதை தவிர்த்து சுடுநீரில் எலுமிச்சை கலந்து குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இஞ்சி, எலுமிச்சை
ஜீரண சக்தியை அதிகரிக்க எலுமிச்சம் பழம் சிறந்தது. அரை மூடி எலுமிச்சம் பழத்தின் சாற்றை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து சிறிது உப்பு போட்டு குடிக்கவும். தண்ணீர் சூடாக இருந்தால் நல்லது.
இஞ்சியும் ஜீரணத்திற்கு உதவும். உப்பில் தோய்த்த இஞ்சித் துண்டுகளை உணவிற்கு முன் சாப்பிடவும். இஞ்சி சாற்றையும், எலுமிச்சை சாற்றையும் கலந்து ஒருஸ்பூன் அளவு குடிக்கலாம்.
சீரகம், பெருங்காயம்
ஒரு டம்ளர் தண்ணீரில் சீரகம் ஒரு டீ ஸ்பூன் ஒரு டீ ஸ்பூன் கொத்தமல்லி சாற்றை கலந்து, உப்பு போட்டு குடிக்கலாம். ஓமம் தண்ணீர் நல்லது. ஓமத்தை மோரில் கலந்தும் குடிக்கலாம்.
பெருங்காயமும் ஒரு ஜீரண பெருக்கி, நெய்யும் பெருங்காயம் பொடி சேர்த்த அன்னத்தை ஒரு கவளம் உண்ணலாம். பெருங்காய பொடி கலந்த மோரும் நல்லது.
கரு மிளகு, உலர்ந்த புதினா, மல்லி விதை, இஞ்சிப் பொடி, ஜீரகம், பெருங்காயம் இவற்றை சரிசம அளவில் எடுத்து அரைத்து பொடி செய்து கொள்ளவும். இந்தப் பொடியை ஒரு தேக்கரண்டி பொடியை தினமும் உணவிற்கு பின் உட்கொள்ளவும்.
கோதுமை உணவிற்குப் பின் குளிர்ந்த நீரும், மாவுப் பண்டங்களை உண்டபின் சூடான நீரையும், பயறு வகைகளை உண்டால் நீர் மோரும் உட்கொள்ள வேண்டும் என்று ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
வயிற்று உப்புசம்
ஒரு பெரிய கரண்டி இலவங்கப்பட்டை கலந்த தண்ணீர். வயிற்றில் வாய்வு தொல்லை ஊறவைத்து குடித்தால் வயிற்று உப்புசம் குறையும்.
புதினாவும் ஜீரணத்திற்கு நல்லது. பச்சடி செய்து சாப்பிடலாம். இஞ்சிப் பொடி, கிராம்பு, கொத்தமல்லி விதை, ஏலக்காய் பொடி இவற்றை கலந்து உட்கொண்டால் அஜீரணம் ஏற்படாது. கறிவேப்பிலை சாறும் எலுமிச்சை சாற்றுடன் கலந்து ஜீரணத்திற்கு உதவும்.
திராட்சை, அன்னாசி, மாதுளம், கேரட் இவையெல்லாம் அஜீரணத்தை ஜீரணத்தை அதிகரிக்கும். பொருட்கள் இவை கலந்து தயாரித்த பழ ரசம் குடித்தால் பசி ஏற்படும்.
சரியான நேரத்தில் உணவை உட்கொள்ளவும். அரக்க, பரக்க சாப்பிடாதீர்கள்.உணவை வாயிலிருக்கும் போது தண்ணீர் குடிக்காதீர்கள். தண்ணீரால் உணவை உள்ள தள்ள வேண்டாம். நார்ச்சத்து உணவுகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். மகிழ்ச்சியான சூழ்நிலை, சூடான, சுவையான உணவு, நெய் சேர்ந்த உணவு இவை ஆரோக்கியமாக உண்ண உதவும் என்கின்றனர் மருத்துவர்கள்.

சூர்யாவின் அறிவு பூர்வமான கேள்விகளுக்கு(?) பதிலளிக்க நீங்களும் வெல்லாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் ஸ்ருதி !



விஜய் டிவியில் நடிகர் சூர்யா தொகுத்து வழங்கும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியைப் பற்றி அனைவருக்கும் தெரியும்.
இந்த நிகழ்ச்சியில் சூர்யா கேட்கும் கேள்விகளுக்கு சரியான விடையளிப்பதன் மூலம் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர் ஒரு கோடியை வெல்வார். இந்நிகழ்ச்சியில் (03.04.12) நடிகை ஸ்ருதிஹாஸன் கலந்து கொள்ள இருக்கிறார்.
இதை பற்றி தனது ட்விட்டர் சமூக இணையதளத்தில் ட்வீட் செய்த்திருக்கும் ஸ்ருதிஹாஸன் � நாளை 8 மணிக்கு சூர்யாவின் NVOK நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் போகிறேன்.
எனக்கு பிடித்த நடிகரான சூர்யாவின் அறிவுப்பூர்வமான(!) கேள்விகளுக்கு அரட்டையடித்துக் கொண்டு பதிலளிக்கப் போகிறேன்.
மறக்காமல் பாருங்கள்� என்று கூறியுள்ளார். சூர்யாவும் ஸ்ருதிஹாஸனும் இதற்கு முன்னர் ஏழாம் அறிவு படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
ஸ்ருதிஹாஸன் கூறியுள்ளவாறு சூர்யா கேட்கப்போகும் அறிவுப்பூர்வமான கஷ்டமான(!) கேள்விகளுக்கு ஸ்ருதி எவ்வாறு பதிலளிக்கப் போகிறார்? என்பது தான் வியப்பாக உள்ளது. பொருத்திருந்து பார்ப்போம்.

படக்கவிதைகள்