Sunday, April 15, 2012

மறந்துவிட்டதாய் மறந்துகூட நினைத்துவிடாதே




பணிகளின் நடுவே
மறந்துவிட்டதாய் கருதாதே?
இரவில் சுவரொட்டி ஒட்ட
தெருவில் இறங்கி நடக்கும்
பொழுதுகூட என் மேல் விழும்
ஒவ்வொரு பனித்துளியும்
உன் அணைப்பின் கதகதப்பை
நினைவுப்படுத்திக் கொண்டேயிருக்கிறது
ஊருக்குத்தான் நான் சமூகப்போராளி
ஆனால், என் காதலி நீதானடி
என் உள்ளத்தை உளவு பார்க்கும்
உளவாளி.
ஒரு உடல் 
இரண்டு உயிர் காதல் 
இரண்டு  உடல் 
ஒரு உயிர் 
கல்யாணம் 
எனக்குள் இருக்கும்
உன்னையே உன்னால்
புரிந்து கொள்ள
முடியாத போது!

உனக்குள் இருக்கும்
என்னை எப்படியடி
புரிந்து கொள்வாய்..........

 உயிர்\


உள்ளுக்குள்

நீ 

இருப்பதால் ..........
தான்

உயிரோடு

நான்

இருக்கிறேன்

உலகில் அதிகம் பரவும் மார்க்கம் இஸ்லாம் எனபோப் பெனிடிக்ட் 16 அறிவுப்பு..


 உலகில் அதிகம் பரவும் மார்க்கம் இஸ்லாம் எனபோப் பெனிடிக்ட் 16 அறிவுப்பு..


உலகில் அதிகம் பரவும் மார்க்கம் இஸ்லாம் என பாப்பரசர் விடுத்த அறிக்கையை மேற்கோள்காட்டி வத்திக்கான் இணையதளம் செய்திவெளியிட்டுள்ளது. அதிகம் பரவிவரும் மார்க்கங்களில் இஸ்லாம் முன்னிலை வகிப்பதாகவும் கிரிஸ்தவ மதம நம்பிக்கையாளர்களைவிட மூன்று மில்லியன் அதிக எண்ணிக்கையுடையோராக முஸ்லிம்கள் உள்ளனர் என்றும் உலக சனத்தொகையில் நூற்றில் 17.5 விகிதத்தினர் கிரிஸ்தவர்களென்றால் அதில் 19 வீதமானோர் முஸ்லிம்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.வருடாந்தம் 40 ஆயிரம்பேர் இஸ்லாத்தில் இணைவதாகவும் கிறிஸ்தவ, யூத மற்றும் பிற மதத்தினர் இவ்வாண்டின் இறுதிப் பகுதியாகும்போது அதிகமாக இஸ்லாத்தில் இணையும் வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார்.