| உலகின் முன்னணிப் பணக்கார முஸ்லிம் நாடுகள் இவை. நாம் இணையத்தில் நடத்திய தேடுதல் வேட்டையில் இவ்விபரங்கள் கிடைக்கப் பெற்று உள்ளன. இவற்றை உங்கள் இரசனைக்கு தருகின்றோம்.
01. Qatar
GDP (PPP) per capita: $ 88,919 (2011)
(Photo by Robert Cianflone/Getty Images)
02. Kuwait
GDP (PPP) per capita: $54,654 (2011)
(AFP PHOTO/Roberto SCHMIDT)
03. Brunei
GDP (PPP) per capita: $50,506 (2010)
(Getty Images)
04. United Arab Emirates
GDP (PPP) per capita: $48,222 (2011)
(Photo by Julian Finney/Getty Images)
05. Oman
GDP (PPP) per capita: $28,880 (2011)
(AFP PHOTO/ MOHAMMED MAHJOUB)
06. Saudi Arabia
GDP (PPP) per capita: $24,434 (2011)
(AFP PHOTO/PATRICK BAZ)
07. Bahrain
GDP (PPP) per capita: $23, 690 (2011)
(ThinkStock Images)
08. Turkey
GDP (PPP) per capita: $16,885 (2011)
(Getty Images)
09. Libya
GDP (PPP) per capita: $16,855 (2009)
(Note: The figures are before the popular uprising in the country)
(Photo by Daniel Berehulak/Getty Images)
10. Malaysia
GDP (PPP) per capita: $15,589 (2011)
(Photo by Chris Hondros/Getty Images)
11. Lebanon
GDP (PPP) per capita:$14,709 (2011)
(AFP PHOTO/JOSEPH EID)
12. Kazakhstan
GDP (PPP) per capita:$13,189 (2011)
(AFP PHOTO / VYACHESLAV OSELEDKO)
13. Iran
GDP (PPP) per capita: $11,479 (2009)
AFP PHOTO/BEHROUZ MEHRI
14. Azerbaijan
GDP (PPP) per capita: $10,136 (2011)
(AFP PHOTO / VANO SHLAMOV)
15. Tunisia
GDP (PPP) per capita: $9,415 (2011)
(Getty Images)
| |
ASSALAMUALAIKUM நீங்கள் விரும்பும் தமிழ் புத்தகங்களை இ-புத்தகங்களாக தர ஒரு சின்ன முயற்சி ..... நிறைய படியுங்க ...நண்பர்களுக்கும் சொல்லுங்க ...கருத்துரையும் எழுதுங்க .....வாழ்த்துக்கள்
HEADLINES [தலைப்புகள் ]
Tuesday, October 30, 2012
உலகின் பணக்கார முஸ்லிம் நாடுகள் இவை
உலகிலேயே அதிக தடவைகள் புகைப்படங்கள் பிடிக்கப்பட்ட நகரங்கள்
உலகிலேயே அதிக தடவைகள் புகைப்படங்கள் பிடிக்கப்பட்ட நகரங்களை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கின்றோம்.
நாம் இணையத்தில் நடத்திய தேடுதல் வேட்டையில் இவ்விபரங்கள் கிடைக்கப் பெற்று உள்ளன.

நாம் இணையத்தில் நடத்திய தேடுதல் வேட்டையில் இவ்விபரங்கள் கிடைக்கப் பெற்று உள்ளன.
இவற்றை உங்கள் பார்வைக்கு தருகின்றோம்.
அடிக்கடி செக்ஸ் உணர்ச்சி ஏற்படுவது எதனால்??
காமம் பற்றி சிந்தனைகள் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு விதமாய் இருக்கும். பறவைகளின் சிந்தனையும், செயலும் ஒருமாதிரியானது. விலங்குகளின் தேவை வேறு
மாதிரியானது. அதே சமயம் மனிதர்களின் காம உணர்வுகளும், சிந்தனைகளும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருமாதிரியாக இருக்கும். சிலருக்கு கூடுதலாக இருக்கும், சிலருக்கு குறைவாக இருக்கும். இதற்குக் காரணம் அவரவர் உடலில் சுரக்கும் செக்ஸ் ஹார்மோன்களின் அளவைப் பொருத்தது என்கின்றனர் நிபுணர்கள்.
ஆணோ, பெண்ணோ தினசரி ஏதாவது ஒரு தருணத்தில் பாலியல் பற்றிய சிந்தனை ஏற்படுவது இயல்பானதுதான். தக்க துணையுடன் இணையும் போது அவர்களுக்கு ரிலாக்ஸ் கிடைக்கும். மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பாலியல் செயல்பாடுகளும், பாலுணர்வும் ஏற்படுவது இயல்பானதுதான். அது அளவாக இருக்கும் பட்சத்தில் எந்த சிக்கலும் இல்லை. அதேசமயம் அதுவே அளவு மீறி போகும் போதுதான் சிக்கல்கள் எழுகின்றன. எந்த நேரத்திலும் பாலியல் எண்ணங்கள் தலை தூக்குகிறதா? அவற்றை கட்டுப்படுத்தவும், திசை திருப்பவும் சில ஆலோசனைகளை கூறியுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.
காம உணர்வுகளை கட்டுப்படுத்துவது கடினமானது என்று மனிதர்கள் எண்ணிக்கொண்டிருக்கின்றனர். ஏனெனில் காமத்தின் தாக்குதலிலிருந்து தப்ப முடியாது என்று பரவலாக ஓர்அபிப்பிராயம் இருக்கிறது. காமத்தின் காரணமாக பெரிய குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. காம உணர்வுகளை தடுக்க தடுக்க பின்னால் அது பெரிய வெடிபோல் வெடிக்கத்தான் செய்கிறது.
உணவுக்கும் நமக்கு எழும் உணர்வுகளுக்கும் தொடர்பு உண்டு என்று கூறுவார்கள். எனவே செக்ஸ் உணர்வை அதிகரிக்கும் முருங்கை கீரை, முருங்கைக் காய், வெள்ளைப்பூண்டு, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை உணவுகளில் சேர்த்துக்கொள்வதை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
அதேபோல் பாலியல் உணர்வை குறைக்கும் உணவுகளை உட்கொள்வதன் மூலம் இதுபோன்ற எண்ணங்களை கட்டுப்படுத்தலாமாம். சோயாவிலிருந்து தயாரிக்கப்படும் "டோஃபு". சோயா பால் மற்றும் டோஃபூ, உடல் துத்தநாகத்தை கிரகிப்பதை தடுக்கிறது. அதேபோல் வெள்ளரிக்காய், டர்னிப், முட்டைக்கோஸ் போன்றவைகளும் செக்ஸ் ஆசையை குறைக்கிறது. கொத்தமல்லி, புதினா இலைகள் அதிகம் சேர்த்துக்கொள்வதால் டெஸ்ட்டோஸ்ட்ரன் அளவு கட்டுப்படுத்தப்படுகிறதாம்
காமம் நிலையானது அல்ல என்பதை மனதளவில் உணர வேண்டும். காம உணர்வுகள் தலைதூக்கும் வகையில் அந்த எண்ணத்தை திருப்பும் செயல்களை செய்யலாம். மனதை அடக்க தியானம் செய்வதே சிறந்தது என சில நூல்களில் கூறப்பட்டுள்ளது. தியானம் செய்ய இயலாதவர்கள் கடுமையான உடற்பயிற்சி, பயணம் மேற்கொள்ளலாம்.
உடற்பயிற்சிக்காக தனியாக நேரம் ஒதுக்க முடியாதவர்கள் அன்றாடப் பணிகளின் மூலம் தனது வேலைப்பளுவை அதிகரித்துக் கொள்ளலாம். தோட்டம் அமைக்கலாம், உளவாரப் பணிகளை மேற்கொள்ளலாம். இதனால் அவர்களுடைய உடலில் ஏற்படும் இச்சைகளும், மனதில் ஏற்படும் மாசுகளும் குறையும்
மனதிற்கு பிடித்த இசையை கேட்கலாம், மனதை லயிக்கச் செய்யும் புத்தகம் படிக்கலாம். இந்த எண்ணம் தவறானது. இதனால் யாரும் தப்பாக நினைத்து விடுவார்களோ என்று எண்ணாமல் மனதிற்கு நெருக்கமானவர்களிடம் இதனை பேசி விளக்கம் பெறலாம்.
பிறரிடம் சொல்வதற்கு அச்சமாக இருந்தால் மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளுக்கு சில பணிவிடைகளைச் செய்வதுடன், அவர்கள் படும் அவஸ்தைகளை பார்த்தால் உடல் நிலையற்றது என்ற எண்ணம் அவர்கள் மனதில் ஆணித்தரமாக பதிவாகிவிடும். பாலுணர்வுகளை மன தளவில் அடக்கி உடலளவில் அதன் தேவையையும் அடக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
|
Wednesday, October 24, 2012
இந்த ஆம்பளைங்களே இப்படித்தான்பா!
மனித மனதில் எண்ணற்ற ஆசைகள் குடியேறி ஆட்டிப்படைக்கின்றன. பணம், பொருள் மட்டுமல்ல பாலியல் உணர்வுகளும் தூண்டிவிடப்பட்டு ஆண்களையும், பெண்களையும் ஆட்டிப்படைக்கிறது. இதனால் மரபு மீறிய செயல்களும், இலக்கணப்பிழைகளும் ஆங்காங்கே நேர்கிறது.
எது கிடைத்தாலும் இன்னும் கொஞ்சம் கூடுதலாக கிடைத்தால் நல்லாருக்குமே என்ற மனதின் அடித்தள ஆசைதான் இதற்கெல்லாம் காரணம். இது செக்ஸுக்கும் பொருந்தும்.
என்னதான் தேவதை மாதிரி மனைவி இருந்தாலும், பிசாசு மாதிரி ஒரு எக்ஸ்ட்ரா பிட்டிங் வேண்டும் என்பது ஆண்களின் ஆசையாக இருக்கிறது. இது உண்மைதான் என்கிறார் இங்கிலாந்தின் பிரபல நாவலாசிரியரும், திரைக்கதை எழுத்தாளருமான வில்லியம் நிக்கல்சன். எவ்வளவு அழகான மனைவி இருந்தாலும் அல்லது காதலி இருந்தாலும், ஆண்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் வேறு பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ளத் தயங்க மாட்டார்களாம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஆண்களைப் பொறுத்தவரை போதும் என்ற மனமே இல்லை. ஆண்களின் ஆசையும், செக்ஸ் ஆசையும் முற்றுப்புள்ளி இல்லாத தொடர் கதையாகவே உள்ளது. எவ்வளவு செக்ஸ் கிடைத்தாலும் அதை அனுபவிக்கவே அவர்கள் முயலுகிறார்கள். போதும் என்று நிறுத்திக் கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. வேடிக்கைக்காகவும், ஆசைக்காகவும்தான் இந்த கள்ள உறவுகளை அவர்கள் நாடுகிறார்கள்.
செக்ஸ் விஷயத்தில் என்னதான் அழகான மனைவி இருந்தாலும் அல்லது காதலி இருந்தாலும், வாய்ப்பு கிடைத்தால், பின்விளைவுகள் இருக்காது என்று உறுதியாகத் தெரிந்தால் இன்னொரு பெண்ணுடன் உறவு வைக்க அவர்கள் தயங்க மாட்டார்கள்.
ஆண்களைப் பொறுத்தவரை செக்ஸ் உணர்வு என்பது புற நிகழ்வுகளாகவே உள்ளதாக செக்ஸாலஜிஸ்டுகள் கூறுகிறார்கள். உணர்வுப்பூர்வமான செக்ஸ் உணர்வு அவர்களுக்கு வருவதில்லை. வெளி நிகழ்வுகளின் தூண்டுதலால் செக்ஸ் உணர்வை அவர்கள் அடைகிறார்கள். அந்த உணர்வை உடனடியாக வெளிப்படுத்தி விடவும் துடிக்கிறார்கள். இந்த போலியான உணர்வுகளுக்கு அவர்கள் காதல் என்றும் பெயர் வைக்கத் தயங்குவதில்லை. எனக்கு வாய்ப்பு கிடைத்தது, அந்தப் பெண்ணே சம்மதித்தாள், அதனால்தான் உறவு வைத்துக் கொண்டேன் என்று கூறும் ஆண்களே அதிகம். அதாவது பழியை பெண்கள் பக்கம் நைசாக திருப்பி விட்டு விடுகிறார்கள்.
இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்கள்தான். குறிப்பாக மனைவிகள். தங்களது கணவர்கள் நல்லவர்கள், ஒழுக்கமானவர்கள், பிறன் மனை நோக்காதவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் ஆண்களின் புத்தியை பெண்கள் அத்தனை சீக்கிரம் புரிந்து கொள்வதில்லை.
இது குறித்து எழுதியுள்ள எழுத்தாளர் நிக்கல்சன், நானும் ஒரு சராசரி ஆண்தான். எனது மனமும் அதுபோன்ற எண்ணங்களில் அலை பாய்ந்ததுண்டு. எனக்கும் வாய்ப்பு கிடைத்தால் நானும் அந்தத் தவறைச் செய்வேன்தான்-பின்விளைவுகள் இல்லாவிட்டால். ஆனால் நான் தவறு செய்தால் அதற்கான பின்விளைவுகள் உடனே என்னைத் தேடி வந்து விடும். எனவேதான் இதுவரை நான் அந்தத் தவறைச் செய்யவில்லை. செய்யும் வாய்ப்பும் இல்லை என்றே கருதுகிறேன் என்கிறார் நிக்கல்சன்.
நிக்கல்சன் தொடர்ந்து கூறுகையில், ஆண்களுக்கும், பெண்களுக்கும் செக்ஸ் விஷயத்தில் நிறைய வேற்றுமை இருக்கிறது பெண்களின் நம்பிக்கையை குழி தோண்டிப் புதைப்பதைத்தான் ஆண்கள் முதலில் செய்கிறார்கள். யாருடனும் நாம் உறவு கொள்ளலாம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்து விடுகிறார்கள். அதை உரிமையாகாவும் கருதிக் கொள்கிறார்கள்.
ஆனால் பெண்கள் நம்பிக்கை அடிப்படையிலும், நீண்ட கால உறவின் அடிப்படையிலும்தான் பிறரிடம் தங்களை உடல் ரீதியாக ஒப்படைக்க முன்வருவார்கள். இவனை நாம் நம்பலாம், இவனிடம் நம்மைக் கொடுத்தால் நலமாக இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் அவர்கள் ஒரு ஆணிடம் தங்களைக் கொடுக்க முன்வருகிறார்கள் என்கிறார் எழுத்தாளர்.
எது எப்படி இருந்தாலும், செக்ஸ் என்பது உடல் வேட்கைக்காக மட்டுமல்ல, அதில் சற்று உண்மையான உணர்வும் இருக்க வேண்டும் என்பதை இரு பாலினரும், குறிப்பாக ஆண்கள் புரிந்து கொள்வதுதான் நல்லது என்கிறார் எழுத்தாளர் நிக்கல்சன்.
இதற்கான எல்லா ஆண்களுமே தப்பு செய்பவர்கள் என்று சொல்ல வரவில்லை. சந்தர்ப்பமும், சூழ்நிலையும் அமைந்தால் யார் வேண்டுமானாலும் தவறு செய்வார்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க நினைத்து இஸ்லாத்தை ஏற்ற( டாக்டர் ஜாரி மில்லர் )
கனடா நாட்டைச் சேர்ந்த கிறித்தவ பிரசார பீரங்கி டாக்டர் ஜாரி மில்லர். பைபிளைக் கரைத்துக் குடித்தவர். அதே நேரத்தில் கணக்குப் பிரியர். இதனால் எதையும் தர்க்கரீதியாக அணுகுவதையே விரும்புவார். இவர் ஒருநாள் திருக்குர்ஆனை வாசிக்கநினைத்தார். அவரது எண்ணமெல்லாம் குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க வேண்டும்; முஸ்லிம்களைக் கிறித்தவ ம
தத்திற்கு
அழைக்க இத்தவறுகள் தனக்கு உதவும் என்பதுதான். பதினான்கு நூற்றாண்டுகளாக
ஓதப்பட்டுவரும் ஒரு பழைய நூலில் என்ன இருந்துவிடப் போகிறது? பாலைவனம்
பற்றியும் அது போன்ற செய்திகள் பற்றியுமே அது பேசும் என்பதே அந்தக்
கணக்கரின் கணக்காக
இருந்தது
ஆனால், என்ன ஆச்சரியம்! உலகத்தில் வேறு எந்த நூலிலும் காணக்கிடைக்காத அற்புதத் தகவல்களை குர்ஆனில் கண்ட மில்லர், திகைப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார். நபி(ஸல்) அவர்களின்துணைவியார் கதீஜா (ரலி) அவர்களின் இறப்பு, அல்லது நபிகளாரின் புதல்வியர், புதல்வர்கள் ஆகியோர் மறைவு போன்ற சோகச் செய்திகள் குர்ஆனில் இருக்கக்கூடும் என எதிர்பார்த்திருந்தவருக்கு ஏமாற்றமே விடையானது.
நபியின் குடும்பத்தார் குறித்த தகவல்கள் இல்லாததுமட்டுமல்ல; குர்ஆனில் ஒரு முழு அத்தியாயமே அன்னை மர்யம் (அலை) அவர்களின் பெயரால் இடம்பெற்றிருந்தது மில்லரை திகைப்பில் ஆழ்த்தியது. அன்னை மர்யம் குறித்து கிறித்தவ நூல்களிலோ பைபிளிலோ கூறப்படாத அருமை பெருமைகள் இந்த அத்தியாயத்தில் சிறப்பாகக் கூறப்பட்டிருப்பதை மனிதர் கண்டார். ஆயிஷாவின் பெயரிலோ ஃபாத்திமாவின் பெயரிலோ ஓர் அத்தியாயம்கூட இடம்பெறாததையும் அவர் உணர்ந்தார்
நபி ஈசா (அலை) அவர்களைப் பற்றி குர்ஆனில் 25 இடங்களில் பெயரோடு குறிப்பிடப்பட்டிருந்த அதே வேளையில், நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பெயர் ஐந்தே ஐந்து இடங்களில் மட்டுமே கூறப்பட்டிருந்தது மில்லரின் வியப்பைக் கூட்டியது. குர்ஆனைச் சற்று ஆழமாகப் படிக்கத் தொடங்கினார். ஏதேனும் குறைகள் கிடைக்காமலா போய்விடும்! ஆனால், திருக்குர்ஆனில் ஒரு வசனம் அவரைத் தூக்கிவாரிப் போட்டது
இந்தக் குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிட மிருந்து வந்திருப்பின், இதில் அதிகமான முரண்பாடுகளை அவர்கள் நிச்சயம் கண்டிருப்பார்கள் (4:82)
என அந்த வசனம் அறைகூவல் விடுக்கிறது. இத்திருவசனம் குறித்து ஜாரி மில்லர் கூறுகிறார்: இன்றைய அறிவியல் அடிப்படைகளில் ஒன்று என்னவெனில், சிந்தனைகளில் தவறு இருக்கும்; தவறு இல்லை என்பது நிரூபிக்கப்படும்வரை. குர்ஆனோ, தன்னில் தவறுகளைக் கண்டுபிடியுங்கள் என முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதோருக்கும் சவால் விடுக்கிறது. அவர்களால்தான் அது முடியவில்லை. உலகில் எந்தப் படைப்பாளனுக்கும், ஒரு புத்தகத்தை எழுதிவிட்டு, அதில் தவறுகளே இல்லை என்று அறைகூவல் விடுக்கும் துணிவு இருந்ததில்லை. குர்ஆனோ இதற்கு நேர்மாறாக, தன்னில் தவறுகளே கிடையாது; இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம் என்று சொல்வதுடன், காட்ட முடியாது என்று பறைசாற்றவும் செய்கிறது. டாக்டர் மில்லரை நீண்ட நேரம் சிந்திக்கவைத்த மற்றொரு வசனம்
இறைமறுப்பாளர்கள் சிந்திக்க வேண்டாமா? வானங்களும் பூமியும் ஒன்றாக இணைந்திருந்தன. நாம்தான் அவற்றை வெடித்துச் சிதறவைத்தோம். உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரால் உருவாக்கினோம். அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (21:30)
1973ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றுத் தந்த அறிவியல் ஆய்வே இந்தப் பொருள்தான். பெருவெடிப்பு’ (Big Bang) எனும் பிரபஞ்சக் கோட்பாடுதான் அது. மிகமிக அதிகமான வெப்ப நிலையும் அடர்வும் மிகுந்த ஒரு வெடிபொருள், பலகோடி ஆண்டுகளுக்குமுன் வெடித்துச் சிதறியதால் உண்டானதே இந்தப் பிரபஞ்சம்என்கிறது இக்கொள்கை
‘இணைந்திருத்தல்’ என்பதைக் குறிக்க ‘ரத்க்’ எனும் சொல் வசனத்தின் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது. இது, ஒன்றோடொன்று நன்கு இணைந்த பொருளைக் குறிக்கும். ‘சிதறல்’ என்பதைக் குறிக்க மூலத்தில் ‘அல்ஃபத்க்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. வெடித்துச் சிதறுவதை இது குறிக்கும். (ரத்க், ஃபத்க் – சுப்ஹானல்லாஹ்!)
நபி (ஸல்) அவர்களுக்கு இந்த குர்ஆனை ஷைத்தான்கள்தான் சொல்லிக்கொடுக்கின்றன என்று பலர் விமர்சித்தனர். டாக்டர் மில்லரும் கிட்டத்தட்ட இதை நம்பியிருந்தார்போலும். இவ்வாதத்தைத் திருக்குர்ஆன் தவிடுபொடியாக்குவதைக் கண்டு திகைத்துப்போனார் மில்லர்
“இதை ஷைத்தான்கள் இறக்கிவிடவில்லை. அது அவர்களுக்குத் தகுந்ததும் அல்ல;அதற்கு அவர்களால் இயலவும் செய்யாது.” (26:210,211)
என்று கூறும் குர்ஆன்,”(நபியே!) நீர் குர்ஆனை ஓதுவதானால், விரட்டப்பட்ட ஷைத்தானைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீராக!” (16:98) என்று கட்டளையிடுகின்றது. ஷைத்தானே ஒரு வேதத்தை அருளிவிட்டு, அதை ஓதுவதற்குமுன் என்னைவிட்டுப் பாதுகாப்புக் கோருவீராக என்று எப்படிச் சொல்வான்?
டாக்டர் ஜாரி மில்லரை யோசிக்கவைத்த நிகழ்வுகள் பல குர்ஆனில் இடம்பெறுகின்றன. அவற்றை அற்புதங்கள்’ என்கிறார் அற்புதக் கூட்டங்கள் பல நடத்திய அவர். அவற்றில் ஒன்று, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் அபூலஹப் தொடர்பான நிகழ்ச்சி. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு சொல்லையும் மறுப்பதே அபூலஹபின் வேலை. அபூலஹப் மரணிப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே, அவரைச் சபிக்கும் அத்தியாயம் ஒன்று (தப்பத் யதா அபீலஹப்) அருளப்பட்டிருந்தது. அபூலஹப் நரகம் செல்வான் என அந்த அத்தியாயம் வெளிப்படையாகவே கூறுகிறது.
அபூலஹப் நினைத்திருந்தால், குர்ஆனைப் பொய்யாக்க ஒரே ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். அதுதான் கலிமா. கலிமாவைச் சொல்லி வெளிப்படையிலேனும் தன்னை அவன் முஸ்லிமாகக் காட்டிக்கொண்டு, அதன் மூலம் குர்ஆனின் கூற்றை -தான் நரகவாசி என்பதை- பொய்யாக்கியிருக்கலாம். ஆனால், அவன் அப்படிச் செய்யவில்லை
ஏனெனில், குர்ஆன் நாலும் அறிந்த நாயகனால் அருளப்பெற்றது...!!
இருந்தது
ஆனால், என்ன ஆச்சரியம்! உலகத்தில் வேறு எந்த நூலிலும் காணக்கிடைக்காத அற்புதத் தகவல்களை குர்ஆனில் கண்ட மில்லர், திகைப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார். நபி(ஸல்) அவர்களின்துணைவியார் கதீஜா (ரலி) அவர்களின் இறப்பு, அல்லது நபிகளாரின் புதல்வியர், புதல்வர்கள் ஆகியோர் மறைவு போன்ற சோகச் செய்திகள் குர்ஆனில் இருக்கக்கூடும் என எதிர்பார்த்திருந்தவருக்கு ஏமாற்றமே விடையானது.
நபியின் குடும்பத்தார் குறித்த தகவல்கள் இல்லாததுமட்டுமல்ல; குர்ஆனில் ஒரு முழு அத்தியாயமே அன்னை மர்யம் (அலை) அவர்களின் பெயரால் இடம்பெற்றிருந்தது மில்லரை திகைப்பில் ஆழ்த்தியது. அன்னை மர்யம் குறித்து கிறித்தவ நூல்களிலோ பைபிளிலோ கூறப்படாத அருமை பெருமைகள் இந்த அத்தியாயத்தில் சிறப்பாகக் கூறப்பட்டிருப்பதை மனிதர் கண்டார். ஆயிஷாவின் பெயரிலோ ஃபாத்திமாவின் பெயரிலோ ஓர் அத்தியாயம்கூட இடம்பெறாததையும் அவர் உணர்ந்தார்
நபி ஈசா (அலை) அவர்களைப் பற்றி குர்ஆனில் 25 இடங்களில் பெயரோடு குறிப்பிடப்பட்டிருந்த அதே வேளையில், நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பெயர் ஐந்தே ஐந்து இடங்களில் மட்டுமே கூறப்பட்டிருந்தது மில்லரின் வியப்பைக் கூட்டியது. குர்ஆனைச் சற்று ஆழமாகப் படிக்கத் தொடங்கினார். ஏதேனும் குறைகள் கிடைக்காமலா போய்விடும்! ஆனால், திருக்குர்ஆனில் ஒரு வசனம் அவரைத் தூக்கிவாரிப் போட்டது
இந்தக் குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிட மிருந்து வந்திருப்பின், இதில் அதிகமான முரண்பாடுகளை அவர்கள் நிச்சயம் கண்டிருப்பார்கள் (4:82)
என அந்த வசனம் அறைகூவல் விடுக்கிறது. இத்திருவசனம் குறித்து ஜாரி மில்லர் கூறுகிறார்: இன்றைய அறிவியல் அடிப்படைகளில் ஒன்று என்னவெனில், சிந்தனைகளில் தவறு இருக்கும்; தவறு இல்லை என்பது நிரூபிக்கப்படும்வரை. குர்ஆனோ, தன்னில் தவறுகளைக் கண்டுபிடியுங்கள் என முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதோருக்கும் சவால் விடுக்கிறது. அவர்களால்தான் அது முடியவில்லை. உலகில் எந்தப் படைப்பாளனுக்கும், ஒரு புத்தகத்தை எழுதிவிட்டு, அதில் தவறுகளே இல்லை என்று அறைகூவல் விடுக்கும் துணிவு இருந்ததில்லை. குர்ஆனோ இதற்கு நேர்மாறாக, தன்னில் தவறுகளே கிடையாது; இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம் என்று சொல்வதுடன், காட்ட முடியாது என்று பறைசாற்றவும் செய்கிறது. டாக்டர் மில்லரை நீண்ட நேரம் சிந்திக்கவைத்த மற்றொரு வசனம்
இறைமறுப்பாளர்கள் சிந்திக்க வேண்டாமா? வானங்களும் பூமியும் ஒன்றாக இணைந்திருந்தன. நாம்தான் அவற்றை வெடித்துச் சிதறவைத்தோம். உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரால் உருவாக்கினோம். அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (21:30)
1973ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றுத் தந்த அறிவியல் ஆய்வே இந்தப் பொருள்தான். பெருவெடிப்பு’ (Big Bang) எனும் பிரபஞ்சக் கோட்பாடுதான் அது. மிகமிக அதிகமான வெப்ப நிலையும் அடர்வும் மிகுந்த ஒரு வெடிபொருள், பலகோடி ஆண்டுகளுக்குமுன் வெடித்துச் சிதறியதால் உண்டானதே இந்தப் பிரபஞ்சம்என்கிறது இக்கொள்கை
‘இணைந்திருத்தல்’ என்பதைக் குறிக்க ‘ரத்க்’ எனும் சொல் வசனத்தின் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது. இது, ஒன்றோடொன்று நன்கு இணைந்த பொருளைக் குறிக்கும். ‘சிதறல்’ என்பதைக் குறிக்க மூலத்தில் ‘அல்ஃபத்க்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. வெடித்துச் சிதறுவதை இது குறிக்கும். (ரத்க், ஃபத்க் – சுப்ஹானல்லாஹ்!)
நபி (ஸல்) அவர்களுக்கு இந்த குர்ஆனை ஷைத்தான்கள்தான் சொல்லிக்கொடுக்கின்றன என்று பலர் விமர்சித்தனர். டாக்டர் மில்லரும் கிட்டத்தட்ட இதை நம்பியிருந்தார்போலும். இவ்வாதத்தைத் திருக்குர்ஆன் தவிடுபொடியாக்குவதைக் கண்டு திகைத்துப்போனார் மில்லர்
“இதை ஷைத்தான்கள் இறக்கிவிடவில்லை. அது அவர்களுக்குத் தகுந்ததும் அல்ல;அதற்கு அவர்களால் இயலவும் செய்யாது.” (26:210,211)
என்று கூறும் குர்ஆன்,”(நபியே!) நீர் குர்ஆனை ஓதுவதானால், விரட்டப்பட்ட ஷைத்தானைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீராக!” (16:98) என்று கட்டளையிடுகின்றது. ஷைத்தானே ஒரு வேதத்தை அருளிவிட்டு, அதை ஓதுவதற்குமுன் என்னைவிட்டுப் பாதுகாப்புக் கோருவீராக என்று எப்படிச் சொல்வான்?
டாக்டர் ஜாரி மில்லரை யோசிக்கவைத்த நிகழ்வுகள் பல குர்ஆனில் இடம்பெறுகின்றன. அவற்றை அற்புதங்கள்’ என்கிறார் அற்புதக் கூட்டங்கள் பல நடத்திய அவர். அவற்றில் ஒன்று, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் அபூலஹப் தொடர்பான நிகழ்ச்சி. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு சொல்லையும் மறுப்பதே அபூலஹபின் வேலை. அபூலஹப் மரணிப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே, அவரைச் சபிக்கும் அத்தியாயம் ஒன்று (தப்பத் யதா அபீலஹப்) அருளப்பட்டிருந்தது. அபூலஹப் நரகம் செல்வான் என அந்த அத்தியாயம் வெளிப்படையாகவே கூறுகிறது.
அபூலஹப் நினைத்திருந்தால், குர்ஆனைப் பொய்யாக்க ஒரே ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். அதுதான் கலிமா. கலிமாவைச் சொல்லி வெளிப்படையிலேனும் தன்னை அவன் முஸ்லிமாகக் காட்டிக்கொண்டு, அதன் மூலம் குர்ஆனின் கூற்றை -தான் நரகவாசி என்பதை- பொய்யாக்கியிருக்கலாம். ஆனால், அவன் அப்படிச் செய்யவில்லை
ஏனெனில், குர்ஆன் நாலும் அறிந்த நாயகனால் அருளப்பெற்றது...!!
Wednesday, October 3, 2012
மாற்றான் 4 வருடங்களாக உட்கார்ந்து எழுதப்பட்ட கதை - சூர்யா
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டையராக சூர்யா நடித்திருக்கும் மாற்றான் திரைப்படத்தின் கதை ஆங்கிலப்படத்தின் தழுவல் என பரவலாக பேசப்பட்டு வந்தது இதனை முற்றாக மறுத்துள்ளார் படத்தின் நாயகன் சூர்யா.
இது தொடர்பில் அவர் கூறுகையில், 'இது எனக்கு முக்கியமான காலகட்டம். நான் எடுக்கிற ஒவ்வொரு முடிவையும் மிகக் கவனமாக எடுக்க வேண்டிய கட்டம் இது. அப்படி மிக கவனமாக எடுத்த முடிவுதான் 'மாற்றான்'.
இந்த படத்துக்காக ஒன்றரை வருடம் உழைத்து இருக்கிறேன். ஒன்றரை வருடமும் 'மாற்றான்' படத்துக்காக என்னை நான் அர்ப்பணித்துக்கொண்டேன்.
இதுஇ ஒட்டிப்பிறந்த சகோதரர்களை பற்றிய கதை மட்டுமல்ல. அப்பா-மகன் பாசம் இருக்கிறது. சமூக நலன் சார்ந்த கரு இருக்கிறது. ஒரே கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடிய படமாக இருக்காது. ஆங்கில படமோ அல்லது வேறு எந்த படத்தின் தழுவலோ அல்ல. 4 வருடங்களாக உட்கார்ந்து எழுதப்பட்ட கதை என்றார்.
மாற்றான் படத்தின் செய்தியாளர் சந்திப்பிலேயே சூர்யா இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த், இசையமைப்பாளர் ஹரீஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவாளர் சவுந்தர்இ கலை இயக்குனர் ராஜீவன், எழுத்தாளர்கள் சுபா, பாடலாசிரியர்கள் நா.முத்துக்குமார், விவேகா, தாமரை மற்றும் ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ரங்கராஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நீருக்காக ஓர் உலகப்போர்!
வலியது உயிர்பிழைக்கும் ஆனால் எத்தகைய ஆற்றல் மிக்க ஜீவராசியும் உயிரின் ஆதாரமான நீர் இன்றி உயிர் வாழ்வதென்பது சாத்தியமாகாது என்பது நிதர்சனமானது. அவ்வாறானதொரு நிலையிலேயே இன்று நாம் பூமியில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் வாழப்போகின்றோம்.
ஆனால் இன்று நீரின் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை உலக மக்களிடையே பெரும் அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது. இன்று உலகில் தங்கம், வைரம், வைடூரியம் என மதிப்புமிக்க பல பொருட்களாகக் கருதி அவற்றையெல்லாம் சேமிக்கின்றோம். இருப்பினும் இந்த சேமிப்புக்கள் ஒரு போதும் எமது அடுத்த சந்ததியினைக் காப்பாற்றப்போவதில்லை.
2100இல் உலக தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அப்படி இருக்கும் இப்படி இருக்கும் எனக் கனவு காணும் நாம் 2100 க்கு பின்னர் நீர் இருக்குமா என்று ஒருபோதும் சிந்திப்பதில்லை. பதிலாக நீரை சிந்தவிட்டுக்கொண்டிருக்கின்றோம். 2100ஆம் ஆண்டு காலப்பகுதியில் அதிக விலைமிக்க பொருளாக நீர் அமைந்துவிட்டாலும் ஆச்சரியமில்லை. அந்தளவுக்கு குடி நீரின் அளவு வெகுவாகக் குறைந்து வருவதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகில் ஒரு சில விடயங்களைத் தவிர்த்து ஏனைய அனைத்து விடயங்களுக்கும் மாற்றீட்டினை மனிதனால் உருவாக்கிக்கொள்ள முடியும் என்பது மறுக்கவோ மறைக்வோ முடியாத உண்மை. ஆனால் இயற்கையின் சித்தம் எதுவாக இருந்தபோதிலும் மனிதன் அதனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
கண்டுபிடிப்புக்களின் உச்சத்தில் மனிதன் இருக்கிறான் என நாம் தற்பெருமையில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். உண்மையில் இயற்கையின் கண்டுபிடிப்புக்களுடன் எமது கண்டுபிடிப்புக்கள் ஒன்றும் ஒருபோதும் உயர்ந்து விட வில்லை என்ற உண்மையை மானிடக் கண்டுபிடிப்புக்கள் மறைத்துக் கொண்டிருக்கின்றன.
இதனால் கண்டுபிடிப்புக்கள் அவசியமில்லை என ஒரு போதும் கூறிவிட முடியாது. இயற்கைக்கு சவால் விடும் கண்டுபிடிப்புக்களே அவசியமில்லை. ஆனால் மனித வர்க்கத்தின் கண்டுபிடிப்புக்கள் ஒவ்வொன்றும் இயற்கைக்கு சவால் விட்டுக்கொண்டுதான் இருக்கின்றது. ஏனெனில் இது வரையில் இல்லாத அளவுக்கு தற்போது இயற்கை மனித குலத்துக்கு மாறு செய்கின்றது. காரணம் நாம் இயற்கைக்கு எதிராக விதைத்தது தினைகளை அல்ல வினைகளைத்தான் என்பது எண்ணிப் பார்க்கும் போதே புரிகிறது.
நாம் செய்த வினைகளின் விளைவில் ஒன்றுதான் பூமியில் மனிதன் வாழ மிக முக்கிய காரணிகளில் ஒன்றான நீர் எம்மை விட்டு செல்ல முனைகிறது. புவி எனும் கிரகத்தைத் தவிர்த்து உயிரினங்கள் வாழ இதுவரையில் மனித குலம் வேறு எந்தக் கிரகத்தினையும் கண்டு பிடிக்கவில்லை.
எனவே ஜீவராசிகள் பயன்படுத்தத்தக்க நீர் இந்தப் பூமியில் இல்லாது போனால் ஜீவராசிகளின் நிலை என்ன? தக்கன பிழைத்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை. காரணம் உயிரினங்களின் ஆதாரமே நீர் தான்.
நீரின்றி அமையாது உலகெனில் யார்யார்க்கும்
வானின்றி அமையாது ஒழுக்கு.
என்ற வள்ளுவரின் வரிகளும் எமக்கு எடுத்தியம்புவது உயிர்களின் அடிப்படை நீர் என்பதனையே.
உடலில் மட்டுமல்ல உலகிலும் மூன்றிலிரண்டு பங்கு நீர்தான் காணப்படுகிறது. பூமியில் மொத்தம் 71 சதவீதம் நீரின் பகுதியாகும். இதில் 97.5 சத வீதம் சமுத்திரங்களில் காணப்படுகிறது. எஞ்சிய 2.5 சத வீதமான நீரே நிலத்தடி நீராகவுள்ளது. இதிலும் பனிப்பாறைகள், பனித்தரைகளிலிருந்து மிச்சமான 0.26 வீதமான நீரையே உலகிலுள்ள சுமார் 7 பில்லியன் மக்களும் பயன்படுத்துகின்றனர்.
தற்போது வாழும் சனத்தொகையில் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் மக்கள் சுத்தமான குடிநீர் இன்றித் தவிக்கின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் 2025ஆம் ஆண்டளவில் உலக சனத்தொகை 8 பில்லியன்கள் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அப்போதைய நிலைமையை சிந்தித்துப் பாருங்கள்.
இதனை உணர்த்துவதற்காக 1992 ஆம் ஆண்டு சுற்றுச் சூழல் மற்றும் வளர்ச்சி குறித்த கூட்டத்தில் உலக நீர் தினத்தினை உருவாக்கி மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த திட்டம் வகுத்தது.
நீரின் தேவை அதிகரிக்கின்ற போதி லும் அதன் உற்பத்தி போதுமானதாக இல்லை.
இதற்கு காரணம் இயற்கை அல்ல மனிதர்களாகிய நாமே என்பதில்தான் வருத்தம்.
சொந்த செலவில் சூனியம் வைப்பதில் வல்லவர்கள் நாம். எமது நிலைகளை உயர்த்த தொழிற்சாலைகள், குடியிருப்புக்கள் மற்றும் பல தேவைகளுக்கென ஓங்கி வளர்ந்த மழை தரு காடுகளை அழித்து மழை நீருக்கு முட்டுக்கட்டை போட்டது யார் குற்றம்?
தண்ணீருக்கு மாற்றுப்பொருள் இதுவரையிலும் இல்லை; இனியும் வரப்போவதில்லை என்ற உண்மையை அறிந்திருந்தும் மனிதனின் மழைக்கும் நீருக்கும் எதிரான செயற்பாடுகளை குறைத்ததாகத் தெரியவில்லை. எனவே மனிதனின் தற்போதைய கண்டுபிடிப்புக்கள் மின்சாரம் இல்லாத ஊருக்கு மின்குமிழ் விற்கப்போனவன் கதையாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.
மென்பானங்கள் தயாரிப்புக்கு என நிறுவப்படும் தொழிற்சாலைகளில் நிலத்தடியிலிருந்து குழாய் மூலம் உறிஞ்சப்படும் நீரினால் தொழிற்சாலை அமைந்திருக்கும் குறித்த பிரதேசத்தில் வறட்சி ஏற்படும் என்பது திண்ணம் .இருந்தாலும் மென்பானங்களினால் ஈட்டும் வருமானத்தை நிறுத்த மனிதனுக்கு மனம் இடம் கொடுக்காதது ஏனோ?
இவ்வாறான தொழிற்சாலைகள் உறுஞ்சுவது நீரினை அல்ல மனித இரத்தத்தையும் அடுத்த சந்ததியின் கருமூலங்களையும் என்பதை உணர்ந்தும் இவ்வாறான தொழிற்சாலைகளை தவிர்ப்பதற்கான எவ்வித நடவடிக்கைளும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
இதே போன்று வேறு சில தொழிற்சாலைகள் தங்களது கழிவுகளை ஆறுகள், குளங்களில் வெளியேற்றுவதனால் இரசாயன மாற்றங்களினால் நீரின் தன்மை மாற்றடைகின்றது. இதனால் பயன்பாட்டுக்கு உகந்த நிலையை நீர் இழக்கிறது.
இப்போதுதான் காற்றிலிருந்து நீரினைப் பிரித்தெடுக்கும் இயந்திரம், அசுத்தமான, கடல் நீரிலிருந்து பருகும் நீரினைப் பெற்றுக்கொள்ள இயந்திரம் என எங்களது கண்டுபிடிப்புக்கள் எங்களைப் பாதுகாக்கும். எனவே எப்படியெல்லாம் நீரினை அசுத்தப்படுத்தினாலும் எங்களது கண்டுபிடிப்புக்கள் எங்களைக் காப்பாற்றும் என நிச்சயம் எண்ண வேண்டாம்.
பயன்படுத்தத்தக்க நீரினைக் குறைக்குமளவுக்கு பயன்படுத்த முடியாத நீரினை அதிகரிக்கவும் காரணமாக நாம் அமைந்துவிட்டோமே. இதனால் ஏற்படப்போகும் ஆபத்து மிகப்பெரியது.
உலக வெப்பமயமாதலினால் துருவப்பனிப்பாறைகள் ஒரு நாளல்ல ஒவ்வொரு நாளும் உருகிக்கொண்டிருப்பதனால் கடல் நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.இதனால் அடுத்த 90 ஆண்டுகளில் கடல் நீர் மட்டம் 2 அடி உயரும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அடுத்த 1 தொடக்கம் 2 நூற்றாண்டுகளில் 6 அடி வரை நீர் உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
கடல் நீர் மட்ட உயர்ச்சியின் காரணமாக உலகின் பல தீவுகள் அழியும் அபாயத்தை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறது.
எனவே கால ஓட்டத்தில் வெப்பமயமாதலினால் பனிப்பாறைகளின் உருகுதல் அதிகரித்து மொத்தப் பனிப்பாறைகளும் உருகினால் உலகில் மனிதன் வாழ நிலப்பரப்புக்களே காணப்படாமல் போய்விடும் சாத்தியம் உண்டென்பதால் எமது கண்டுபிடிப்புக்களை எங்கே சுமந்து செல்வது.
செல்வதற்குத் திக்கற்று நிற்கும் எமக்கு எதற்காக இந்த வீணான வீராப்புக்கள். நீரின் மகத்துவங்களை உணர்ந்த நாம் அதனைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.
இனி ஓர் உலகப் போர் ஏற்படுமேயானால் அது நீருக்கான ஒரு போராகவே இருக்குமே அன்றி வேறு எதற்காகவும் அல்ல என கடந்த 20 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் அறிவியலாளர்களும் சமூக அறிஞர்களும் கூறிவருகின்றார்கள் .உண்மையில் இதற்கான அறிகுறிகள் பெரிய அளவில் இன்று காணப்படுகிறது.
முன்னொரு காலத்தில் கோடை காலங்களில் வீட்டுகளுக்கு வெளியே குடங்களில் நீர் நிரப்பி வைப்பார்களாம் தாகத்தில் வரும் வழிப்போக்கர்களுக்காக. இன்றும் வீடுகளுக்கு வெளியே குடங்கள் உள்ளன. ஆனால் இவை எதிர்பார்த்துக்கொண்டிருப்பது வழிப்போக்கர்களை அல்ல நீரின் வருகையை.

இது வீடுகளுக்கு மட்டுமல்ல நாடுகளுக்கும் பொருத்தமாக இருக்கும். 2006ஆம் ஆண்டு ஐ.நா அறிக்கையில் 'அனைவருக்கும் போதுமான நீர் உள்ளது' எனத்தெரிவித்திருந்தது. ஆனாலும் தவறான நிர்வாகம், அரசியல் பின்னணியே தனி நபருக்கான நீரின் அளவை மட்டுபடுத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதுவும் ஒரு வகையில் உண்மையாக இருக்கலாம். இந்தியா என பெயர் வரக் காரணமாக இருந்த சிந்து நதியே இன்று பாகிஸ்தானில் தானே பாய்ந்து கொண்டிருக்கிறது. இந் நதி காஷ்மீர் ஊடாகவும் செல்கின்றது.காஷ்மீரில் ஓடும் முக்கிய 6 நதிகளில் 3 நதிகள் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ளன. மீதி 3 நதிகளுக்காக இரு நாடுகளும் முட்டிக்கொண்டுதான் இருக்கின்றன.
இதே போல ஆபிரிக்காவின் பல நாட்டு வயல்களுக்குச் செழிப்பும், மனிதருக்கு உயிரும் ஊட்டுவதுடன், எகிப்தின் நாகரிக வளர்ச்சிக்குப் பல்லாயிரம் ஆண்டுகள் உறுதுணையும் புரிந்த உலகின் அதி நீளமான நைல் நதிக்காகவும் குறித்த நாடுகளிடையே பிணக்குகள் காணப்படுகின்றன.
சிங்கப்பூர், மலேசியா இடையே, டைக்ரீஸ், யூப்ரடீஸ் நதிகளால் துருக்கிக்கும் சிரியாவுக்குமிடையே என பல நாடுகளிடையே இன்று நீரினால் பிரச்சினைகள் பல முற்றிக்கொண்டு வருகின்றன.அரசியல் ஆசைகளுக்காகவும் தனிமனிதர்களின் ஆசைகளுக்கு நிலங்களைக் கூறு போட்ட நாம் நீரினைக் கூறு போட முனைவதால் எத்தனை உயிர்கள் மாய்க்கப்படுகின்றன.
தனிமனிதர்களுக்கான ஜீவனை வழங்கும் ஜீவ நதிகள் பல இருந்தும் பயன்படுத்த முடியாத துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம். இம்மாதிரியான செயற்பாடுகளினால் நீரின் தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியாமல் இன்று வளரும் நாடுகளில் 80 சதவீதமானோர் நீர் சார்ந்த நோயிகளினால் பலியாகின்றனர். இப்படி ஒரு நாளைக்கு இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 40 ஆயிரம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
காரணங்களை அறிந்த பின்பும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க நாம் முன்வராவிட்டால் மனிதர்களுக்கு ஆறறிவு என மார்தட்டிக் கொள்வதில் அர்த்தம் இல்லை.எம்மை நோக்கி வந்து மட்டுமல்ல விலகிச் சென்றும் அழிக்கும் வல்லமை கொண்ட நீரினை எம்மை விட்டு விலகிச்செல்லாமல் இருக்க இனியாவது வழி சமைப்போம் இன்றே.
உலகம் மனிதனுக்கானதல்ல. உலகில் ஓர் அங்கமே மனிதன் என்பதை ஒவ்வொருவரும் மனதில் கொள்ளவேண்டியதொன்று. உலகை நம்பி வாழும் ஒட்டுண்ணிகளில் நாமும் ஒன்று என்பதால் நாம் உலகுக்கு உதவியாக இல்லாவிட்டாலும் உபத்திரவம் இல்லாமல் இருக்கலாமே.
இனி நாம் எதிர்கால சந்ததிகளுக்காகப் பாதுக்காக்க வேண்டியது பெற்றோல், மூங்கில், இயற்கை இறப்பர் என்று எவற்றையெல்லாமோ வகைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் எதிர்கால சந்ததிக்காக விட்டுச்செல்ல மட்டுமல்ல எதிர்கால சந்ததியையே விட்டுவைக்க நாம் பாதுகாக்க வேண்டியது நீர் என்பதனை நினைவில் வைத்து இன்று முதல் எமது கண்முன்னே குழாய் வழியாகச் சிந்தும் நீரினை அடைப்பது முதல் எமது நீருக்கான சேமிப்புக்களை ஆரம்பிப்போம்.
இனியும் வேண்டாம் ஓர் உலகப்போர். காரணம் ஏற்படப்போவது அணுகுண்டால் அல்ல அதனை விட ஆபத்தை விளைவிக்கக் கூடிய நீரினால் என்பதனால்
சொந்த செலவில் சூனியம் வைப்பதில் வல்லவர்கள் நாம். எமது நிலைகளை உயர்த்த தொழிற்சாலைகள், குடியிருப்புக்கள் மற்றும் பல தேவைகளுக்கென ஓங்கி வளர்ந்த மழை தரு காடுகளை அழித்து மழை நீருக்கு முட்டுக்கட்டை போட்டது யார் குற்றம்?
தண்ணீருக்கு மாற்றுப்பொருள் இதுவரையிலும் இல்லை; இனியும் வரப்போவதில்லை என்ற உண்மையை அறிந்திருந்தும் மனிதனின் மழைக்கும் நீருக்கும் எதிரான செயற்பாடுகளை குறைத்ததாகத் தெரியவில்லை. எனவே மனிதனின் தற்போதைய கண்டுபிடிப்புக்கள் மின்சாரம் இல்லாத ஊருக்கு மின்குமிழ் விற்கப்போனவன் கதையாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.
மென்பானங்கள் தயாரிப்புக்கு என நிறுவப்படும் தொழிற்சாலைகளில் நிலத்தடியிலிருந்து குழாய் மூலம் உறிஞ்சப்படும் நீரினால் தொழிற்சாலை அமைந்திருக்கும் குறித்த பிரதேசத்தில் வறட்சி ஏற்படும் என்பது திண்ணம் .இருந்தாலும் மென்பானங்களினால் ஈட்டும் வருமானத்தை நிறுத்த மனிதனுக்கு மனம் இடம் கொடுக்காதது ஏனோ?
இவ்வாறான தொழிற்சாலைகள் உறுஞ்சுவது நீரினை அல்ல மனித இரத்தத்தையும் அடுத்த சந்ததியின் கருமூலங்களையும் என்பதை உணர்ந்தும் இவ்வாறான தொழிற்சாலைகளை தவிர்ப்பதற்கான எவ்வித நடவடிக்கைளும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
இதே போன்று வேறு சில தொழிற்சாலைகள் தங்களது கழிவுகளை ஆறுகள், குளங்களில் வெளியேற்றுவதனால் இரசாயன மாற்றங்களினால் நீரின் தன்மை மாற்றடைகின்றது. இதனால் பயன்பாட்டுக்கு உகந்த நிலையை நீர் இழக்கிறது.
இப்போதுதான் காற்றிலிருந்து நீரினைப் பிரித்தெடுக்கும் இயந்திரம், அசுத்தமான, கடல் நீரிலிருந்து பருகும் நீரினைப் பெற்றுக்கொள்ள இயந்திரம் என எங்களது கண்டுபிடிப்புக்கள் எங்களைப் பாதுகாக்கும். எனவே எப்படியெல்லாம் நீரினை அசுத்தப்படுத்தினாலும் எங்களது கண்டுபிடிப்புக்கள் எங்களைக் காப்பாற்றும் என நிச்சயம் எண்ண வேண்டாம்.
பயன்படுத்தத்தக்க நீரினைக் குறைக்குமளவுக்கு பயன்படுத்த முடியாத நீரினை அதிகரிக்கவும் காரணமாக நாம் அமைந்துவிட்டோமே. இதனால் ஏற்படப்போகும் ஆபத்து மிகப்பெரியது.
உலக வெப்பமயமாதலினால் துருவப்பனிப்பாறைகள் ஒரு நாளல்ல ஒவ்வொரு நாளும் உருகிக்கொண்டிருப்பதனால் கடல் நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.இதனால் அடுத்த 90 ஆண்டுகளில் கடல் நீர் மட்டம் 2 அடி உயரும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அடுத்த 1 தொடக்கம் 2 நூற்றாண்டுகளில் 6 அடி வரை நீர் உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
கடல் நீர் மட்ட உயர்ச்சியின் காரணமாக உலகின் பல தீவுகள் அழியும் அபாயத்தை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறது.
எனவே கால ஓட்டத்தில் வெப்பமயமாதலினால் பனிப்பாறைகளின் உருகுதல் அதிகரித்து மொத்தப் பனிப்பாறைகளும் உருகினால் உலகில் மனிதன் வாழ நிலப்பரப்புக்களே காணப்படாமல் போய்விடும் சாத்தியம் உண்டென்பதால் எமது கண்டுபிடிப்புக்களை எங்கே சுமந்து செல்வது.
செல்வதற்குத் திக்கற்று நிற்கும் எமக்கு எதற்காக இந்த வீணான வீராப்புக்கள். நீரின் மகத்துவங்களை உணர்ந்த நாம் அதனைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.
இனி ஓர் உலகப் போர் ஏற்படுமேயானால் அது நீருக்கான ஒரு போராகவே இருக்குமே அன்றி வேறு எதற்காகவும் அல்ல என கடந்த 20 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் அறிவியலாளர்களும் சமூக அறிஞர்களும் கூறிவருகின்றார்கள் .உண்மையில் இதற்கான அறிகுறிகள் பெரிய அளவில் இன்று காணப்படுகிறது.
முன்னொரு காலத்தில் கோடை காலங்களில் வீட்டுகளுக்கு வெளியே குடங்களில் நீர் நிரப்பி வைப்பார்களாம் தாகத்தில் வரும் வழிப்போக்கர்களுக்காக. இன்றும் வீடுகளுக்கு வெளியே குடங்கள் உள்ளன. ஆனால் இவை எதிர்பார்த்துக்கொண்டிருப்பது வழிப்போக்கர்களை அல்ல நீரின் வருகையை.
இது வீடுகளுக்கு மட்டுமல்ல நாடுகளுக்கும் பொருத்தமாக இருக்கும். 2006ஆம் ஆண்டு ஐ.நா அறிக்கையில் 'அனைவருக்கும் போதுமான நீர் உள்ளது' எனத்தெரிவித்திருந்தது. ஆனாலும் தவறான நிர்வாகம், அரசியல் பின்னணியே தனி நபருக்கான நீரின் அளவை மட்டுபடுத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதுவும் ஒரு வகையில் உண்மையாக இருக்கலாம். இந்தியா என பெயர் வரக் காரணமாக இருந்த சிந்து நதியே இன்று பாகிஸ்தானில் தானே பாய்ந்து கொண்டிருக்கிறது. இந் நதி காஷ்மீர் ஊடாகவும் செல்கின்றது.காஷ்மீரில் ஓடும் முக்கிய 6 நதிகளில் 3 நதிகள் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ளன. மீதி 3 நதிகளுக்காக இரு நாடுகளும் முட்டிக்கொண்டுதான் இருக்கின்றன.
இதே போல ஆபிரிக்காவின் பல நாட்டு வயல்களுக்குச் செழிப்பும், மனிதருக்கு உயிரும் ஊட்டுவதுடன், எகிப்தின் நாகரிக வளர்ச்சிக்குப் பல்லாயிரம் ஆண்டுகள் உறுதுணையும் புரிந்த உலகின் அதி நீளமான நைல் நதிக்காகவும் குறித்த நாடுகளிடையே பிணக்குகள் காணப்படுகின்றன.
சிங்கப்பூர், மலேசியா இடையே, டைக்ரீஸ், யூப்ரடீஸ் நதிகளால் துருக்கிக்கும் சிரியாவுக்குமிடையே என பல நாடுகளிடையே இன்று நீரினால் பிரச்சினைகள் பல முற்றிக்கொண்டு வருகின்றன.அரசியல் ஆசைகளுக்காகவும் தனிமனிதர்களின் ஆசைகளுக்கு நிலங்களைக் கூறு போட்ட நாம் நீரினைக் கூறு போட முனைவதால் எத்தனை உயிர்கள் மாய்க்கப்படுகின்றன.
தனிமனிதர்களுக்கான ஜீவனை வழங்கும் ஜீவ நதிகள் பல இருந்தும் பயன்படுத்த முடியாத துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம். இம்மாதிரியான செயற்பாடுகளினால் நீரின் தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியாமல் இன்று வளரும் நாடுகளில் 80 சதவீதமானோர் நீர் சார்ந்த நோயிகளினால் பலியாகின்றனர். இப்படி ஒரு நாளைக்கு இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 40 ஆயிரம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
காரணங்களை அறிந்த பின்பும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க நாம் முன்வராவிட்டால் மனிதர்களுக்கு ஆறறிவு என மார்தட்டிக் கொள்வதில் அர்த்தம் இல்லை.எம்மை நோக்கி வந்து மட்டுமல்ல விலகிச் சென்றும் அழிக்கும் வல்லமை கொண்ட நீரினை எம்மை விட்டு விலகிச்செல்லாமல் இருக்க இனியாவது வழி சமைப்போம் இன்றே.
உலகம் மனிதனுக்கானதல்ல. உலகில் ஓர் அங்கமே மனிதன் என்பதை ஒவ்வொருவரும் மனதில் கொள்ளவேண்டியதொன்று. உலகை நம்பி வாழும் ஒட்டுண்ணிகளில் நாமும் ஒன்று என்பதால் நாம் உலகுக்கு உதவியாக இல்லாவிட்டாலும் உபத்திரவம் இல்லாமல் இருக்கலாமே.
இனி நாம் எதிர்கால சந்ததிகளுக்காகப் பாதுக்காக்க வேண்டியது பெற்றோல், மூங்கில், இயற்கை இறப்பர் என்று எவற்றையெல்லாமோ வகைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் எதிர்கால சந்ததிக்காக விட்டுச்செல்ல மட்டுமல்ல எதிர்கால சந்ததியையே விட்டுவைக்க நாம் பாதுகாக்க வேண்டியது நீர் என்பதனை நினைவில் வைத்து இன்று முதல் எமது கண்முன்னே குழாய் வழியாகச் சிந்தும் நீரினை அடைப்பது முதல் எமது நீருக்கான சேமிப்புக்களை ஆரம்பிப்போம்.
இனியும் வேண்டாம் ஓர் உலகப்போர். காரணம் ஏற்படப்போவது அணுகுண்டால் அல்ல அதனை விட ஆபத்தை விளைவிக்கக் கூடிய நீரினால் என்பதனால்
Subscribe to:
Posts (Atom)
















