Sunday, June 24, 2012

பெண்ணின் உடலில் தோன்றும் வாசனை…!!

சிறந்த ஆண்மை பெருக்கி, ஆர்வமுள்ள, ஆசை மிகுந்த அன்பான மனைவி தான்.
உடலுறவு என்பது மிக மகிழ்வான நிகழ்ச்சி. பல வித இன்பங்கள் நிறைந்தது. அதை முழுமையாக அனுபவிக்க அனுபவமில்லாவிட்டாலும், அதைப் பற்றிய பாலியல் அறிவு தேவை. இதில் சொல்லிக் கொடுக்க என்ன இருக்கிறது, எல்லாம் இயற்கையாகவே தெரிந்து விடும் என்பது தவறு.

ஏனென்றால் உடலுறவு என்பது பல சிக்கல்கள் உடைய விஷயம். மனமும் உடலும் கலந்து இழைந்து அனுபவிக்கும் சுகம். இதை முற்றிலும் பெற பெண்களை எப்படி மகிழ்விப்பது என்பது ஆண்களுக்கு தெரிய வேண்டும். அதே போல் பெண்களும் உணர வேண்டும்.

உடலுறவின் முன்பு, இருவருக்கும் ஆர்வத்தை உண்டாக்குவது ‘முன் தொடுதல்’ எனப்படும். உடலுறவின் முடிவு உச்சக்கட்டம் என்றால் ஆரம்ப நிலை முன் தொடுதல். இந்த முன் தொடுதல் ஒன்றே பல சுகங்களை கொடுக்க வல்லது.

உடலுறவை உண்டாக்கும் ‘சமாச்சாரங்கள்’ என்ன? வாசனை. பாலுணர்வு தூண்டுதல் வாசனைகளால் எழுப்பப்படுகிறது. பெண்களின் உடல் வாசனை ஆண்களை ஈர்க்கும்.

உடலுறவை உண்டாக்கும் ‘சமாச்சாரங்கள்’ என்ன? வாசனை. பாலுணர்வு தூண்டுதல் வாசனைகளால் எழுப்பப்படுகிறது. சதாரணமாகவே பெண்களின் உடல் வாசனை ஆண்களை ஈர்க்கும். அதுவும் உடலுறவுக்காக மனைவியை நெருங்கும் கணவனுக்கு மனைவியின் வாசம் – மணக்கும் பர்ஃபியூமாக இருந்தாலும் சரி, தலையில் சூடியிருக்கும் மல்லிகைகைப் பூவின் வாசமாக இருந்தாலும் சரி இவை எதுவும் இல்லாமல் இருந்தால் கூட பெண்ணின் இயற்கையான வியர்வை வாசமேகூட அந்த நேரத்தில் ஆண்களை கிரங்கச்செய்யும்.

அதுபோலதான் பெண்ணுக்கும் தனக்குப் பிடிதமான ஆணின் வாசம் ரொம்பவும் பிடிக்கும். “எங்கேயோ கேட்ட குரல்” எனும் படத்தில் ஒரு காட்சி. ரஜினி காந்த் வயலிலிருந்து வீட்டுக்குள் வியர்வை சொட்டச் சொட்ட நுழைவார். படத்தின் நாயகிகளில் ஒருவரான ராதா ஓடிவந்து அவரை கட்டியணைப்பார். ரஜினியோ சங்கடத்துடன் “ஐய்யே! உடம்பெல்லாம் வியர்வையா இருக்கும்போது கட்டிப் பிடிக்கிறாயே” என்று கூச்சத்துடன் சொல்வார். அதற்கு ராதா, “வியர்வையாய் இருந்தால் என்ன…! என் மாமனின் அந்த (வியர்வை) வாசம் எனக்கு ரொம்பவும் புடிக்கும்” என்று வெட்கத்துடன் சொல்வார். செம “கிக்”கான காட்சி அது.

அதே போல் பெண்களுக்கும் பெண்ணின் உடை, அலங்காரம், பாலுணர்வு இல்லாத அன்பான, அக்கறையான தொடுதல், தடவுதல் இவைகளையும் “முன் தொடுதல்” எனும் இவையெல்லாமே உடலுறவை டாப் கியரில் பறக்கச்செய்யும் “ஸ்விட்ச்” ஆகும்.

முன் தொடுதல், பின்னால் வரும் உணர்ச்சிகளை தட்டி எழுப்பும். முக்கியமாக பெண்ணின் ஆர்வத்தை ஊக்கிவிடும். எனவே உடலுறவின் முக்கியமான அம்சம்.

சிறந்த ஆண்மை பெருக்கி, ஆர்வமுள்ள, ஆசை மிகுந்த அன்பான மனைவி தான்.

ஏதாவது ஒன்றை தூண்டினாலே ஆண்களுக்கு ஆசை பெருகும். பெண்களுக்கு ஐந்தையும் தூண்டினால் முழுமையாக ஆசை வரும். மனதை ஊக்குவிப்பது, முன் தொடுதலின் முதல் முயற்சி. சூழ்நிலைகள் ரம்மியமாக இருக்க வேண்டும். அமைதியான, உணர்ச்சியை தூண்டும் சூழ்நிலை, உல்லாச உணர்வுகளை தூண்டும். முன் தொடுதல் தொடங்க ஏதுவாகும்.

முன் தொடுதலின் முக்கிய அங்கம் தொடுதல் – ஸ்பரிசம். மனித உடல் நரம்புகளால் மூடப்பட்டதாகும். நரம்பு முடிவுகள் ஸ்பரிசத்தால் கட்டழிந்து, உணர்ச்சி வசப்பட்டு, மகிழ்ச்சியை தரும். உடலின் சில பகுதிகளில் நரம்புகள் அதிகமாக இருக்கும். இவற்றை தொட்டால், தடவினால் மகிழ்ச்சி பல மடங்கு அதிகமாகும். இவை மார்பகங்கள், உள்ளங்கால், உதடு, நாக்கு, உள்ளங்கை பிறப்புறுப்புகள் (முக்கியமாக க்ளிடோரிஸ், ஆண்குறி) போன்றவை.

முன் தொடுதலுக்கு தேவையானவை

1. உடல், மனது இணைந்த தூண்டுதல்

2. அக்கறை உள்ள அன்பு, கவனிப்பு. “நான் இருக்கிறேன் உனக்கு பாதுகாப்பாக” என்று சொல்லாமல் சொல்லும் பரிவான தடவல்களால், ஒரு ஆண், ஒரு பெண்ணின் மனதை நெருடி, உணர்ச்சிகளை ஊக்குவிக்க முடியும்.

3. நேருக்கு நேர் பேசிக் கொள்ளுதல் அவசியம். ஏனென்றால் முன் தொடுதல் சிலருக்கு பிடிக்கலாம். சிலருக்கு பிடிக்காமல் போகலாம். மனம் விட்டு பேசிக்கொண்டால் பிரச்சனைகள் தீரும்.

தொடுதல் – ஒரு முக்கிய காரணி

மனித உடல்களில் பல பகுதிகள் பாலுணர்வை தூண்டும் பாகங்களாக இருந்தாலும், உடல் முழுவதுமே ஆசையை உணரும் ஒரு பெரிய பாலியல் அவயம். முன் தொடுதலால் சருமம் மூலம், இன்பமான உணர்ச்சிகள், உடலெங்கும் பரவும். அணைத்தல், தழுவுதல் போன்ற குறிப்பான பாலியல் தொடுதலைப் போலவே, பாலியல் குறிக்கோளாக இல்லாமல், பரிவுடன் செய்யப்படும் ஆதரவான தழுவுதல், தொடுதல் இவையும் பெண்களுக்கு பிடித்தமான செயல்களாகும்.

மிருதுவான ஸ்பரிசம்

மிருதுவான, மென்மையாக தொடுதல் இவைகளே சில சமயங்களில் உணர்ச்சியை தூண்டபோதுமானவை. பின் முதுகை தடவுறல், மசாஜ் செய்தல் இவை சிலருக்கு ஆசை உணர்வை அதிகரிக்கும். கழுத்தை நீவுதல், விரல்களை லேசாக கடித்தல் போன்ற பலவித செயல்கள் இருக்கின்றன. இவற்றை ஆண்கள் தங்களின் மனவிகளுக்கு ஏற்றவாறு கையாளலாம்.

வாய்வழி காதல்

முத்தமிடுவது எல்லோருக்கும் உகந்த ஒரு செயல். முகத்தோடு முகம் வைத்து செய்வதன் இது பல உணர்ச்சிகளை தூண்டும். காதுகள், கீழ்வயிறு, தொடைகள், எங்குவேண்டுமானாலும் தடவுதல், முத்தமிடுதல் ஆசையை தூண்டும். ஆனால் வாய் வழியாக அவயங்களை ஸ்பர்சிப்பது அவரவரின் விருப்பத்தை பொருத்தது.

பெண்களை பொறுத்த வரையில் அவர்களின் விருப்பத்தை அறிந்து செய்ய வேண்டிய செயல், தொடுதல். இந்த வாய்வழ முறைகளை ஒரு நாளும் பலந்தப்படுத்தி செய்யக்கூடாது.

முன் தொடுதலால் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும், குறிப்பாக ஆண்மை குறைபாடுகள் உள்ள ஆண்களுக்கும் பலனளிக்கும். விஷயமறிந்த பெண்களால் பல கோணங்களில் நின்று, உட்கார்ந்து, ஆணின் உணர்வுகள் உசுப்ப முடியும். ஆண்களும் முன் தொடுதலை ஆரம்பிக்கும் முன், பெண்ணை சகஜ நிலைக்கு கொண்டு வர வேண்டும். பாலியல் சம்மந்தமில்லாத விஷயங்களை பேசி, பாராட்டுதல்களை நீடித்து, பாலுறவில் விருப்பமில்லாத பெண்ணை தூண்ட வேண்டும்.

ஒரே மாதிரியாக முன் தொடுதல், உடலுறவு, செய்தால் சுவையிருக்காது. சீக்கிரம் அலுப்பு தட்டிவிடும். பல மாறுதல்களை, மாற்றங்களை கையாண்டு, உடலுறவை இனிமையாக்க வேண்டும். ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் வெறும் உடல் பசியை தீர்ப்பதற்கு மாத்திரம் உடலுறவு இருந்தால், அது முழுமையான காதல் அல்ல.

உடலுறவுடன் உணர்ச்சி பூர்வமான, அன்பான பந்தம் கணவனுக்கும் மனைவிக்கும் இருந்தால் தான் மணவாழ்க்கை முழுமை பெறும்.

பெண்ணுக்கு 28 ,ஆணுக்கு 33 செக்ஸ்க்கு ஏற்ற வயதாம்!




பெண்களின் செக்ஸ் தேவை 28 வயதில் முழுமையாக கிடைப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதேபோல் ஆண்கள் 33 வயதில் தங்களில் செக்ஸ் தேவையை முழுமையாக உணர்கின்றனராம்.

பருவ வயதை எட்டிய ஆண், பெண்ணிற்கு செக்ஸ் தேவை ஏற்படுவது இயல்பானதுதான். உடல்தேவையை நிறைவேற்றிக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே அவர்களுக்கு சரியான பருவத்தில் திருமணம் செய்து வைக்கின்றனர்.

செக்ஸ் பொம்மைகள் விற்பனை செய்யும் இணையதளம் ஒன்று எந்த வயதில் சரியான திருப்தியான செக்ஸ் கிடைக்கிறது என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டது. இதில் 17 வயதில் இருந்து 60 வயதுடைய 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்கள் பங்கேற்றனர். அந்த ஆய்வில் சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன.

40 சதவிகித பெண்கள் 28 வயதில் முழுமையான செக்ஸ் வாழ்க்கையை அனுபவிப்பதாக தெரிவித்துள்ளனர். அதேசமயம் 50 முதல் 60 வயதுடைய பெண்கள் தங்களின் 46 வது வயதில் முழுமையான செக்ஸ் வாழ்க்கையை அனுபவிப்பதாக கூறியுள்ளனர்.

இந்த ஆய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள குடும்ப உறவுகள் நல ஆய்வாளர் ட்ரேசி காக்ஸ், இந்த ஆய்வானது செக்ஸ் பற்றிய பெண்களின் ஆர்வமும், அவர்கள் கூறிய தகவல்களும் வியப்பூட்டும் வகையில் இருந்ததாக தெரிவித்தார். செக்ஸ் பற்றிய முட்டாள்தனமான நம்பிக்கையை உடைப்பதாக இருந்ததாக கூறியுள்ளார். பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்கள் 33 வயதில் முழுமையான செக்ஸ் அனுபவிப்பதாக தெரிவித்துள்ளனர். அந்த வயதில் கடமைகள் ஓரளவிற்கு முடிந்திருக்கும். சுமைகள் இல்லாத காலம் என்பதால் அப்பொழுது அவர்களால் ரசிப்புத்தன்மையோடு அனுபவிக்க முடிவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முதல் முத்தம் எப்படி இருக்கணும் தெரியுமா??




முதல் காதல், முதல் முத்தம் என்பது மறக்க முடியாதது. எங்கு எப்படி அது நிகழ்ந்தது என்பது மனதில் பசுமையாய் இருந்து கொண்டே இருக்கும். காதலிக்கும் போதோ, திருமண நாளின் முதல் இரவிலோ முத்தம் கொடுத்திருக்கலாம் பெற்றிருக்கலாம். காதலிக்கோ, மனைவிக்கோ முதல் முதலாக முத்தம் கொடுக்கும் போது எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளனர் நிபுணர்கள். படியுங்களேன்.
பசுமையான சோலை, அடர்ந்த வனப்பகுதி, தனிமையான சூழ்நிலையை தேர்ந்தெடுங்கள். ஏனெனில் முத்தம் கொடுக்க அதுதான் ஏற்ற இடம். முதல் முதலாக கொடுக்கப்படும், பெறப்படும் முத்தம் சிறப்பு வாய்ந்தது. உங்களின் காதலியோ, மனைவியோ அதை நிச்சயம் எதிர்பார்ப்பார். முத்தம் கொடுக்க நண்பர்களுடன் குரூப்பாக செல்லும் இடங்களில் முத்தம் கொடுக்க முயற்சி செய்ய வேண்டாம். தனியாக இருவரும் செல்லும் இடமே ஏற்றது
முதல் முதலாக முத்தம் கொடுக்கும் போது பதற்றம் ஏற்படுவது இயல்புதான்.

மனதை ரிலாக்ஸ் செய்துகொள்ளுங்கள். வசதியான இடத்தை தேர்ந்தெடுங்கள். அவசரத்தில் உங்களின் துணையை காயப்படுத்திவிடவேண்டாம். அப்புறம் முதலே முடிவாகிவிட வாய்ப்புள்ளது. உங்கள் துணை முத்தம் கொடுக்க விரும்பினால் அவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்களேன்.
முத்தம் கொடுப்பதற்கு முதலில் மூச்சுக்காற்று சுத்தமானதாக, புத்துணர்ச்சியுடையதாக இருக்க வேண்டும். எனவே துணையுடன் டேட்டிங் என்று முடிவு செய்த உடன் சுவாச புத்துணர்ச்சிக்கு வேண்டியவைகளை தயாராக செய்து விட்டு கிளம்புங்கள். புதினா சுவிங்கம் சாப்பிட்டால் மூச்சு புத்துணர்ச்சியோடு இருக்கும்.
தனியாக சந்திக்க இடம் கிடைத்து விட்டதே என்று உடனே தொடங்கிவிட வேண்டாம். கொஞ்சம் நேரம் பேசுங்கள். கண்களின் மூலம் சம்மதம் கிடைத்த உடன் அப்புறம் முத்தமிட தயாராகுங்கள். சரியான உடல் மொழி அவசியம். கொஞ்சம் நெருங்கினாலும் உங்கள் துணைக்கு நீங்கள் முத்தமிட விரும்புகிறீர்கள் என்பது உணர்த்தி விடும்.
முதல் முத்தம் என்பது மென்மையானதாய் மயிலிறகில் வருடுவதைப் போல இருக்கவேண்டும். அதற்காக போராட வேண்டாம். இயல்பாய் இருக்கட்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

Tuesday, June 12, 2012

திருமணம் நிச்சயிக்க‍ப்பட்ட‍ ஆண்களுக்கான சில உளவியல் ஆலோசனைகள்




புதிதாக திருமணமான ஜோரில் என்ன பேசலாம், எப்படி பேசலாம் என்பது தெரியாமல் எதையாவ து உளறிக்கொட்டி முழிப்பது ஆண்களின் வழக்கம். சில விஷயங்கள் அது நன்மையை ஏற்படுத்தினாலும் பெரும்பா லான விஷயங்களில் அதுவே ரிவர்ஸ்சில் திரும்பி விடும். எனவே புதிதாக திருமணமான வர்கள் தங்கள் மனைவியிடம் என்ன பேசலாம் எப்படி பேச லாம் என்று ஆலோசனை கூறியுள்ளனர் உளவியல் வல்லுநர்கள்.

காதலியின் நினைப்பு ஆபத்து

புதிதாக திருமண உடன் தன்னுடைய ஹீரோயிசத்தை காட்டும் வித மாக, பழைய நினைவுகளை எல்லா ம் கொட்டித் தீர்க்க வேண்டாம். ப ழைய காதல் நினைவுகளில் சுவை யான சிரிப்பூட்டும் நிகழ்ச்சிகள் உங் களுக்கும் பழைய காதலிக்கும் இடையில் நடந்திருக்கலாம். ஆர்வ க்கோளாறில் அதையெல்லாம் மனைவியிடம் அவிழ்த்து விடக் கூடாது. அப்புறம் அவங்க அதையெல்லாம் வச்சு ஆயிரக்கணக்கா ன கேள்வி கேட்டு குடைந்து விடுவார்கள் ஜாக்கிரதை.

ஆபத்தாகும் பொக்கிஷங்கள்

நீங்கள் திருமணத்திற்கு முன் வேறு பெண்ணை நீங்கள் காதலித்து இருந்தால் பழைய காதலியின் நினைவுப் பொக் கிஷங்களைப் பாது காக்காதீ ர்கள். அந்தமாதிரி பொருள் ஏதாவது வீட்டிலிருந்தால் உட னே அழித்து விடுங்கள்! புகை ப்படம், வீடியோ, சிடியிலிருந் து பல பிறந்தநாள் பரிசுவரை காலி பண்ணிடுங்க. ஏனென்றால் உங் கள் மனைவி எப்போது சி.பி.ஐ அதிகாரியா மாறுவாங்கன்னு தெரி யாது.

நண்பர்களை பற்றி மூச்

நம்ம நல்ல பேர் வாங்குவதற் காக நம் நண்பர்களின் குறை களை மனைவியிடம் சொல் லக்கூடாது. முக்கியமாக உங் களுக்கு கம்பெனி கொடுக்கு ம் ”குடி” நண்பர்களைப் பற்றி பேச்சே கூடாது!!

கையேந்துவது ஆபத்து

கிடைக்கும் எல்லாப் பணத்தை யும் மனைவியிடம் கொடுத்து விட்டுக் கையேந்தக்கூடாது. சம்பளம் இவ்வளவு என்று காத லிக்குத் தெரியலாம். ஆனால் மனைவி என்று வந்தபின்னர் செய்யும் எல்லா செலவுக்கும் சின்னப் பையன்போல் கணக் குச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்.

எவ்வளவு நண்பர்களுக்கு, அப்பா அம்மாவுக்கு, சுற்றுலாவுக்கு, செலவழிக்கிறீர்கள் என்று விலாவரியாக சொல்ல வே ண்டாம்!. புதிய உறவுகள் ஆர ம்பிக்கும்போது திறந்த மனது டன் ஒளிவு மறைவு இல்லா மல் எல்லாவற்றையும் சொல் வது நல்லது என்பார்கள். உண்மைதான்!! ஆனால் அது வே பின்னாளில் பெரிய பிரச் சினை ஆகாமல் பார்த்துக் கொ ள்ளவேண்டும். ஏனெனில் ஆசை அறுபதுநாள் என்பது போல் ஆரம்பத்தில் எல்லாமே நல்லதாகத் தெரியும். பின்னாளில் பிரச்சி னை என்று வரும்போது முன்னர் செய்த சிறு தவறையும் பெரிய விசயமாக்குவார்கள்.

தைரியசாலியாக காட்டிக்கொள்ளுங்கள்

உங்களுடைய பலவீனங்களை அவர்களே தெரிந்து கொள்ளட்டும். பலம் நிறைந்த மனிதனாக இருக்க முயலுங்கள். தைரிய ம் என்பது பயத்தை மறைத்துக் கொள்வது ன்னு சொல்லுவாங்க…எல்லா பயத்தையு ம் சொன்னால் பாடி ஸ்ட்ராங் பேஸ் மட்டம் வீக் என்று நினைக் க ஆரம்பித்து விடுவர். எனவே எல்லவற்றையும் சொல்லத்தே வையில்லை. தொடக்கத்தில் இருந்தே இ தைக் கடைப்பிடித்தால் நீங்கள்தான் ராஜா.

உங்களை சொந்தக்காலில் நிற்பவர், நீங்களே தைரியமாக முடிவெ டுப்பவர் என்று உங்களின் மனைவி எண்ணுவார்கள். அதைத்தான் அவர்கள் விரும்புவார்கள். ஆனாலும் வயதில் மூத்தவர்களின், அப்பா, அம்மா வின் ஆலோசனை உதவி எப்பொழுதும் தேவை. சில நேரங்களில் உங்கள் கைச் செலவு, சாப்பாடு, பெட்ரோல் எல்லாமே பெற்றோர் தயவில்தான் ஓடும். ஆனால் இதைப்பற்றியெல்லாம் வாய் திறக்கக் கூடாது என்ன சரியா?

ஓவர் செல்லம் ஆகாது

வாழ்க்கையை தொடங்கும்போதே ல கானை சரியாக பிடிக்க வேண்டும். ஆர ம்பத்தில் எதற்கெடுத்தாலும் சரி சரி என் று தலையாட்டி விட் டு பின்னர் திடீரென்று முரண்டு பிடித்தால்தான் வாழ்க்கையில் பிரச்சினைகள் எழும். எனவே எதற்கு சரி சொல்லு வது என்பதே முதலியே முடிவு செய்து விடுவது நல்லது. அப்புறம் பாருங்கள் வாழ்க்கை உங்களுக்கு வசப்படும்.

Monday, June 11, 2012

விதி

வானங்களையும் பூமிகளையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் எல்லா விதிகளையும் அல்லாஹ் தீர்மானித்து விட்டான். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு(ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி

    மனிதன் படைக்கப்பட்டு தாயின் கருவரையில் ஒட்டிக் கொண்டிருக்கின்ற நிலையினில் இறைவனது ஏவலால் வானவர்கள் உயிரை ஊதுகிறார். அப்பொழுது நான்கு விபரங்கள் எழுதப்படுகிறது. செல்வம், அவரது தவணை, செயல்பாடு, குணங்கள் இவைகள் பதியப்பட்ட நிலையில்தான் மனிதன் உருப்பெறுகிறான். நூல் திர்மிதி

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ”விதியைப் பற்றி மட்டும் சர்ச்சை செய்யாதீர்கள்! உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயத்தினர் அழிந்தது விதியில் சர்ச்சை செய்த காரணத்தினாலேயே” என்று கூறியுள்ளார்கள். (நூல்: அஹ்மத்)

    அல்லாஹ் ஒவ்வொரு உயிரையும் படைத்து அதன் ஆயுளையும் அதன் உணவையும் அதற்கேற்படும் சோதனைகளையும் பதிவு செய்கிறான் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னுமஸ்வூது(ரலி) நூல்: திர்மிதி

    அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் செய்கின்ற செயல்கள் சுயமாக செய்கிறோமா? அல்லது விதிப்படி நடக்கிறதா? என்று உமர்(ரலி) அவர்கள் கேட்டார்கள்.

    கத்தாபின் மகனே! எல்லாமே ஏற்கனவே எழுதப்பட்ட விதிப்படியே நடக்கின்றன. ஒருவர் பாக்கிய சாலியாக இருந்தால் பாக்கியம் பெறுவதற்கே செயல்படுகிறார், துர்பாக்கியசாலியாக இருந்தால் துர்பாக்கியமடையும் வகையில் செயல்படுகிறார் என்று நபி அவர்கள் விடையளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: திர்மிதி

    அப்படியெனில் நாங்கள் எல்லாம் விதிப்படியே நடக்கிறது என்று எண்ணி செயல்படாமல் இருக்கலாம் அல்லவா? என்று சஹாபாக்கள் நபி அவர்களிடத்தில் கேட்டார்கள்.

   அதற்கு நபி அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள். “நீங்கள் செயல்படுங்கள்! ஒவ்வொரு வரும் எதற்காக படைக்கப்பட்டுள்ளனரோ அவற்றை செய்ய வேண்டும். நூல்: புகாரி, திர்மிதி

   பிரார்த்தனையை தவிர வேறு எதுவும் விதியை மாற்றாது. என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸல்மான்(ரலி) நூல்: திர்மிதி

    இதேபோல் ஒருவர் நரகத்திற்கும், தனக்கும் இடையே ஒரு முழம் மட்டுமே உள்ள அளவிற்கு நரகவாசிகளின் செயல்களை செய்து வருவார். விதி அவரை வென்று சொர்க்கவாசிகளின் செயல்களை செய்து சொர்க்கம் நுழைவார் என்று நபி அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி) நூல்: புகாரி, திர்மிதி

    மனிதனுக்குரிய நன்மை அல்லாஹ்வுடைய விதியின் மீது திருப்தியுறுவதாகும். மனிதனுக்குறிய தீமை அவன் அல்லாஹ்விடம் நன்மையைக் கோருவதைக் கைவிடுவதாகும். மேலும் மனிதனுக்குறிய தீமை அவன் அல்லாஹ்வுடைய விதியைக் கொண்டு அதிருப்தியுறுவதாகும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃதுப்னு அபீவக்காஸ் (ரலி) நூல்: திர்மிதி

அல்லலூயாவின் அர்த்தம் என்ன? – அஹ்மத் தீதாத்



இன்று உலகில் சுமார் 120 கோடி கிறித்தவர்கள் பைபிளை வேதமாக நம்பி அதன்படிச் செயல்படுகின்றனர். ஆனால் அவர்கள் நம்புகின்ற அந்த வேதம், இன்றைய நிலையில் அது உண்மையான இறை வேதமா என்று அவர்கள் சிந்திக்கத் தவறி விட்டனர்.

ஒரு நூலை வேதம் என்று நம்ப வேண்டுமென்றால், அது இறை வாக்கு என்று ஒப்புக் கொள்ள வேண்டுமென்றால் அவ்வேதத்தில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் ஒன்றுடன் மற்றொன்று மோதக் கூடாது; முரண்படக்கூடாது. இது தான் வேதத்தின் முழு முதல் இலக்கணம். அது கடவுளின் வார்த்தை என்பதற்கான அடிப்படை விதி.

இந்த இலக்கணம் அடிபட்டுப் போனால் அது மனித மூளையில் உற்பத்தியான மலிவுச் சரக்கு, மனித அறிவு பிரசவித்த ஓர் அற்பக் கருத்து என்பது உறுதியாகி விடும்.

இந்த அடிப்படை விதிக்கும் வேதியியல் பரிசோதனைக்கும் பைபிள் உள்ளாக்கப்படும் போது அது மனிதச் சொற்கள் அதிகமதிகம் கலந்த ஒரு கலப்படம்; மனிதக் கற்பனைகளின் சங்கமம்; உண்மையை விடப் பொய்கள் மிகைத்து நிற்கும் ஒரு சாதாரண புத்தகம் என்பது மிகத் தெளிவாகப் புலப்படும்.

இன்று உலகில் எந்த ஒரு வேதியியல் பரிசோதனைக்கு உட்படுத்தினாலும் உடையாமல், ஒரு சிறு காயம் கூடத் தன் மேனியில் படாமல் சிலிர்த்துக் கொண்டு வருவது திருக்குர்ஆன் மட்டுமே! அறிவியல் உலகின் சிந்தனை சக்திக்கு ஒரு சிம்ம சொப்பனமாக, சந்திக்க முடியாத சவாலாக, சாகசமாகத் திகழ்ந்து கொண்டிருப்பது அல்குர்ஆன் எனும் அற்புதம் தான்.

இறை வார்த்தைகளைத் தன்னோடு கொண்டிருக்கும் தனித்தன்மையின் காரணத்தால் தான் அது உலக மக்களை நோக்கி அறைகூவல் விடுகின்றது.

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாத வரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 4:82)

அபார அறிவியல் புரட்சியின் சிகரத்தில் இருக்கும் இந்த இருபத்தோறாம் நூற்றாண்டில் கூட இந்த அறைகூவலை ஏற்பவர், எதிர் கொள்பவர் எவருமில்லை என்பது நிதர்சனமான உண்மையாகும்.

இத்தகைய தூய வேதம், தனக்கு முந்தைய வேதங்கள் இறைவனிடமிருந்து வந்தவை தான் என்று சான்று கூறும் அதே வேளையில் அவற்றில் கலந்து விட்ட கலப்படத்தை, கற்பனையை, கறையை அடையாளம் காட்டி அம்பலப்படுத்துகின்றது.

என்ன தான் ஒரு வேதம் சின்னாபின்னமாக்கப்பட்டாலும், சிதைக்கப்பட்டாலும் அந்த உண்மை வேதம் உருத் தெரியாமல் ஆக்கப்பட்டாலும் அதில் ஒரு சில உண்மைகள் ஒட்டிக் கொண்டிருக்கத் தான் செய்கின்றன. அவ்வேதங்கள் இறைவனிடமிருந்து வந்தவை தான் என்று உரைக்கின்ற தடயங்கள், சான்றுகள் உடைக்கப்படாமல் ஒழிக்கப்படாமல் இருக்கின்றன. அதில் ஒன்று தான் இன்று கிறித்தவர்கள் தங்கள் திருச்சபைகளிலும் தெருச் சபைகளிலும் உரத்தக் குரல்களில் ஒலி பெருக்கிகளில் ஆர்ப்பரிக்கின்ற “அல்லலூயா” என்ற முழக்கமாகும். இதனுடைய அர்த்தம் என்ன? அதைக் காண்பதற்கு இந்த ஏகத்துவத்தின் பயணம் தொடர்கின்றது.

கிறித்தவர்களின் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த அஹ்மத் தீதாத் அவர்கள் செய்த ஆய்வு, “அவனது பெயர் என்ன?” - What is his name? என்ற தலைப்பில் வெளியானது. அதன் தமிழாக்கத்தைத் தான் இந்த ஏகத்துவ இதழில் நீங்கள் நுகர்கின்றீர்கள்.

இதன் இறுதியில் அல்லலூயா என்பதன் பொருளைச் சுவைக்கின்ற போது, அல்லாஹ்வின் வேதமாக இருந்த பைபிள் சிதைக்கப்பட்டுள்ளது என்பதை மெய்ப்படுத்தி சத்தியக் குர்ஆன் கூறுகின்ற சான்றாண்மையையும் சேர்த்தே பார்க்கலாம். அதிலும் திருக்குர்ஆன் இறங்கிய அருள்மிகு ரமளான் மாதத்தில் இதைப் பார்ப்பது மிகவும் சாலப் பொருத்தமான ஒன்று!

அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் தன் ஆயுள் முழுவதும் கிறித்தவத்தை மட்டுமே குறியாகக் கொண்டு விவாதம் மற்றும் எழுத்து ரீதியான ஆயுதங்கள் தாங்கி இறுதி வரை அதை எதிர்த்துப் போரிட்டவர். அதன் காரணமாக அவர்களது ஆய்வுகள் அனைத்துமே கிறித்தவத்தை மையமாகக் கொண்டு அமைந்திருந்தன. அதற்காக அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக! அவரது ஆய்வு அந்தத் திசையை நோக்கி மட்டும் சென்றதற்கு மற்றொரு காரணம், அவர் வாழ்ந்த தென்னாப்பிரிக்கப் பகுதி, சூழல் அனைத்தும் கிறித்தவ வயமாக இருந்தது தான்.

கிறித்தவ அழைப்பாளர்கள் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது ஓர் அவதூறு யுத்தத்தையே துவக்கியிருந்தனர். எனவே அவர்களின் ஆதிக்கம் அஹ்மத் தீதாதின் முழுக் கவனத்தையும் ஈர்த்தது. அவரது மொத்த உழைப்பையும் அது உறிஞ்சி விட்டது. அதனால் முஸ்லிம் சமூகத்திலேயே மலிந்து கிடக்கும் இணை வைப்பை நோக்கி அவரது கவனம் திரும்ப வாய்ப்பில்லை. அல்லது அவர் வாழ்ந்த அந்தப் பகுதியில் அதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் அவருக்கு இருக்கவில்லை.

இதை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், தமிழகத்திலுள்ள ஏகத்துவவாதிகள் இங்கு இணை வைப்பாளர்களை எதிர்த்துப் பல்வேறு களங்களைக் கண்டிருக்கின்றனர். இங்குள்ள அறிஞர்கள் அந்த ஆய்வில் ஒரு கரையும் கண்டிருக்கிறார்கள். எனவே இணை வைப்பு தொடர்பாக அஹ்மத் தீதாதின் ஆய்வு ஏகத்துவவாதிகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையாமல் இருக்கலாம். அதே நேரத்தில் அவரது துறை கிறித்தவத்திற்கு எதிரானது மட்டுமே என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

அவரது ஆய்வுகள், ஒப்பீடுகள் போன்றவை நமது சிந்தனைக்குச் சற்று அந்நியமாகத் தெரிந்தால் அது மனித அறிவுக்குட்பட்டது என்று பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். அவரது ஆய்வுகள், கொள்கைகள் அனைத்தும் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாட்டுக்கு உட்பட்டது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. இதனால் தான் இதை ஒரு மொழி பெயர்ப்பாக அல்லாமல், இயன்ற வரை ஜமாஅத்தின் தூய கடவுள் கொள்கை நிலைபாட்டுக்கு எதிராக உள்ளவற்றைத் தணிக்கை செய்து, இந்நூலை ஒரு கருத்தாக்கத் தழுவலாக அளித்திருக்கிறோம்.

காரணம், கிறித்தவத்திற்கு எதிராக மாபெரும் போர்க்கொடி தூக்கி புரட்சி செய்த அவர் மீலாத் விழாவை ஆதரிக்கின்றார். இது குறித்து அவரிடம் ஒரு சகோதரர் கேள்வி எழுப்பும் போது, மில்லியன் கணக்கான மக்கள் மீலாது கொண்டாடுகின்றனர் என்று காரணம் கூறுகின்றார். இதே காரணம் கிறித்தவத்திற்கும் பொருந்துமல்லவா? “இயேசு கிறிஸ்துவை ஏன் வணங்குகிறீர்கள்?’ என்று கிறித்தவர்களிடம் கேட்டால் அவர்கள் இதே பதிலைத் தான் கூறுகிறார்கள். இதை அஹ்மத் தீதாத் ஏற்றுக் கொள்வாரா?

இந்த அளவுக்குத் தான் பித்அத்துக்கள் விஷயத்தில் அஹ்மத் தீதாத் அவர்களின் நிலைப்பாடு அமைந்துள்ளது என்பதை இங்கே வாசகர்களின் பார்வைக்குத் தருகிறோம்.

எனினும் நாம் இந்த ஆய்வின் கருத்தாக்கத்தை இங்கு தருவதற்குக் காரணம், ஒரு ஏகத்துவவாதி கிறித்துவத்தைப் பற்றி எதையும் அறியாமல் இருக்கக் கூடாது. அவர்கள் எடுத்து வைக்கும் வாதத்திற்குப் பதில் சொல்லாமல் இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் அஹ்மத் தீதாத் அவர்களின் ஆய்வை எடுத்துக் கொள்வோமாக!

அவன் பெயர் என்ன?

“அல்லாஹ் என்று அழையுங்கள்! அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள்! நீங்கள் எப்படி அழைத்த போதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன” என்று கூறுவீராக! உமது பிரார்த்தனையைச் சப்தமிட்டும் செய்யாதீர்! மெதுவாகவும் செய்யாதீர்! இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட வழியைத் தேடுவீராக! (அல்குர்ஆன் 17:110)

பொதுக் கடவுள் கொள்கை.

அஹ்மத் தீதாத் கூறுகின்றார்:

முஹம்மத் (ஸல்) அவர்கள் இயேசு கிறிஸ்துவின் இயற்கையான அடுத்த வாரிசு என்ற தலைப்பின் கீழ் நான் ஆற்றிய உரைக்குப் பின்னால் நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது ஒரு கிறித்தவப் பிரச்சாரகர் என்னிடம் ஒரு கேள்வியைத் தொடுத்தார்.

அவனது பெயர் என்ன? என்பது தான் அவரது கேள்வி.

பதிலளிப்பதற்காக எழுந்தேன். நான் வாயைத் திறப்பதற்கு முன் அவர் கேள்வி கேட்பதற்காக வைக்கப்பட்டிருந்த மைக்கின் முன் வந்து, தானே பதிலளிப்பதாகக் கூறினார்.

“கேள்வி கேட்டது நீங்கள்; பதிலளிப்பது என் கடமை தானே” என்று சொன்னேன்.

“அது சரி தான். எனினும் இந்தக் கேள்விக்கு நானே பதிலளிக்கிறேன்” என்று சொன்னார். அவையில் சிரிப்பலை எழுந்தது.

உண்மையில் அவர் தனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று கெஞ்சுகிறார். ஒரு பெரும் கூட்டம் உள்ள இந்த சபையில் பிரச்சாரம் செய்யும் வாய்ப்பு இனி எங்கே கிடைக்கப் போகின்றது? அதுவும் முஸ்லிம்களுடைய செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட பெரும் கூட்டம்.

தொடருங்கள் என்றேன். ஒரு சிறிய தடுமாற்றத்திற்குப் பிறகு, கடவுளின் பெயர் இயேசு கிறிஸ்து என்று கூறி முடித்தார்.

இயேசு கடவுள் தானா? என்று அந்தக் கூட்டத்திலேயே விவாதிப்பதற்கு அது உரிய தருணமில்லை. இந்த இடத்தில் அதை அலசுவது உகந்ததும் அல்ல.

இப்போதைக்கு மூஸா (அலை), ஈஸா (அலை), முஹம்மத் (ஸல்) ஆகியோரது வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் அந்த ஆற்றல் மிகக் கடவுளின் பெயர் அல்லாஹ் என்பது தான். இதற்கான ஆதாரம் பின்னர் தரப்படும்.

கடவுள் மீதுள்ள நம்பிக்கை, மனிதனின் இயற்கை குணத்துடன் ஒன்றியது; இரண்டறக் கலந்தது. அவனிடமிருந்து அந்த நம்பிக்கை ஒரு போதும் பிரியாது. மனிதன் இந்தப் புவியில் இருக்கும் வரை எல்லாம் வல்ல இறைவனின் ஞானமும் அவன் கூடவே இருந்து கொண்டு தான் இருக்கும்.

அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.

நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் உண்மையுடன் உம்மை நாம் அனுப்பினோம். எந்த ஒரு சமுதாயமானாலும் எச்சரிக்கை செய்பவர் அவர்களுக்கு வராமல் இருந்ததில்லை. (அல்குர்ஆன் 35:24)

“இவரது இறைவனிடமிருந்து இவருக்கு ஏதேனும் சான்று அருளப்பட வேண்டாமா?” என்று (ஏக இறைவனை) மறுப்போர் கேட்கின்றனர். நீர் எச்சரிப்பவரே. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு வழி காட்டி உண்டு. (அல்குர்ஆன் 13:7)

பகுதிக் கடவுள் இல்லை.

தூய காற்று, மழை, சூரிய ஒளி போன்ற மனித வாழ்வுக்கு அத்தியாவசியமான பொருள் வளங்களில் பாரபட்சம், பாகுபாடு காட்டாத வல்ல இறைவன், ஆன்மீக அருள் வளங்களில் பாரபட்சம் காட்ட வேண்டிய அவசியம் என்ன? அவ்வாறு பாரபட்சம் காட்ட வேண்டிய அவசியமே இல்லை. காரணம் அவன் பகுதிக் கடவுள் இல்லை. ஏதாவது ஒரு பெயரில் கடவுளை அறியாத எந்த ஒரு இனமும், சமுதாயமும் இப்பூமியில் இல்லை என்று தெளிவாகக் கூறலாம்.

படைத்த இறைவனே இந்த அறிவை, தேர்ந்தெடுக்கப்பட்ட தூதர்களின் வாயிலாக மக்களுக்கு வழங்கினான்.

நாம் தெரிந்து வைத்திருப்பது மிகக் குறைவான தூதர்களின் பெயர்களைத் தான். மற்ற பெயர்கள் தொலைந்து போயிருக்கின்றன, அல்லது ஆதாரமற்ற செய்திகளில் அமிழ்ந்து கிடக்கின்றன. கடவுளைப் பற்றிய அறிவு கடவுளிடமிருந்து வந்தாலும் மனித இனம் அந்தத் தூய, புனிதக் கடவுள் கொள்கையில் கவனமற்ற முறையில் கண்மூடித்தனமாக விளையாட ஆரம்பித்தது. அதனால் அவற்றில் கவர்ச்சிகரமான, அலங்காரக் கருத்துக்கள் கலந்து விட்டன.

“வேதத்தின் வரிகளை எளிதாக்குகிறோம் என்று கருதிக் கொண்டு, கற்றவர்கள் சில கட்டங்களில் அதன் வார்த்தைகளை மாற்றி விடுகின்றார்கள். ஆனால் உண்மையில் எளிதான வார்த்தைகளை இவர்கள் குழப்பி விடுகின்றனர்” என்று செவன்த் டே அட்வென்டிஸ்ட் என்ற கிறித்தவ இயக்கத்தின் பெண் தீர்க்கதரிசி எலன் ஜி ஒயிட் கூறுகின்றார்.

இவர்களின் இந்தக் கைவரிசை அந்த வேதம் கூற வந்த கருத்தையே குலைத்து விட்டது.

உலகத்தின் மத வரலாறுகளில் புனித பைபிள் என்று அழைக்கப்படுகின்ற யூத, கிறித்தவ வேதங்கள், கடவுளை மனிதத் தன்மையில் சித்தரிக்கும் அதிகமான உதாரணங்களைக் கொண்டிருக்கின்றன.

உலை வைக்கும் வர்ணனைகள்.

கீழே இடம் பெறுகின்ற இந்த பைபிள் வசனங்கள், கடவுள் தன்மைக்கு ஊறு விளைவிக்கின்ற, உலை வைக்கின்ற வர்ணனைகள் ஆகும். கடவுளை மனிதனாகச் சித்தரிக்கின்ற வசனங்களாகும்.

மனிதன் போன்ற கடவுள்.

மானிடர் கட்டிக்கொண்டிருந்த நகரையும் கோபுரத்தையும் காண்பதற்கு ஆண்டவர் கீழே இறங்கி வந்தார்.

(ஆதியாகமம் 11:5)

பின்பக்கத்தைப் பார்க்கும் மூஸா.

பின்பு, “நான் என் கையை அகற்றுவேன். நீ என் பின்புறத்தைக் காண்பாய். என் முகத்தையோ காணமாட்டாய்” என்றார்.

(விடுதலைப் பயணம் 33:23)

யாக்கோபுடன் குத்துச் சண்டை.

அவர்; “நான் யாக்கோபு” என்றார். அப்பொழுது அவர், “உன்பெயர் இனி யாக்கோபு எனப்படாது, “இஸ்ரயேல்” எனப்படும். ஏனெனில், நீ கடவுளோடும் மனிதரோடும் போராடி வெற்றி கொண்டாய்” என்றார். (ஆதியாகமம் 32:28)

குடிகாரனைப் போல..

அப்பொழுது, உறக்கத்தினின்று எழுவோரைப்போல், திராட்சை மதுவால் களிப்புறும் வீரரைப்போல் எம் தலைவர் விழித்தெழுந்தார். (திருப்பாடல்கள் 78:65)

கவலைப்படும் கடவுள்?

மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார். அவரது உள்ளம் துயரமடைந்தது.

(ஆதியாகமம் 6:6)

வாசனையை முகரும் கடவுள்?

ஆண்டவர் நறுமணத்தை நுகர்ந்து, தமக்குள் சொல்லிக் கொண்டது; “மனிதரை முன்னிட்டு நிலத்தை இனி நான் சபிக்கவே மாட்டேன். ஏனெனில் மனிதரின் இதயச் சிந்தனை இளமையிலிருந்தே தீமையை உருவாக்குகின்றது. இப்பொழுது நான் செய்ததுபோல இனி எந்த உயிரையும் அழிக்கவே மாட்டேன்” (ஆதியாகமம் 8:21)

மடங்கிப் படுத்த சிங்கம்?

அவன் துயில் கொண்டான்; சிங்கம் போன்றும் பெண் சிங்கம் போன்றும் படுத்துக்கொண்டான்; அவனை எழுப்பி விடுவோன் யார்? உனக்கு ஆசி கூறுவோன் ஆசி பெறுவான்; எனவே உன்னைச் சபிப்போன் சாபமடைவான்! (எண்ணாகமம் 24:9)

பற்றி எரியும் நெருப்பு.

மலை உச்சியில் ஆண்டவரது மாட்சியின் காட்சி, பற்றியெரியும் நெருப்புப்போன்று இஸ்ரயேல் மக்களின் கண்களுக்குத் தெரிந்தது. (விடுதலைப் பயணம் 24:17)

கடவுளை மனித நிலைக்குத் தரம் தாழ்த்துகின்ற மலிவான, மட்ட ரகமான வசனங்கள் 73 அத்தியாயங்களைக் கொண்ட ரோமர் கத்தோலிக்க கலைக் களஞ்சிய பைபிளிலும், 66 அத்தியாயங்களைக் கொண்ட புராட்டஸ்டண்ட் கலைக் களஞ்சிய பைபிளிலும் ஏராளமாக இடம் பெற்றுள்ளன.

இவ்வாறு கடவுளை மனித நிலைக்கு இறக்குகின்ற வர்ணனைகளை பைபிளிலிருந்து காட்ட வேண்டுமென்றால் அதற்கென தனியாக ஒரு நூல் வெளியிட வேண்டும். ஆனால் மேலே குறிப்பிட்ட அந்த உதாரணங்களே இந்தத் தலைப்புக்குப் போதும்.

ஆன்மீக சாம்ராஜ்யத்தில் இஸ்ரவேலர்களைப் போன்று திருந்துவதற்குரிய வாய்ப்புகளையும், சூழ்நிலைகளையும் வழங்கப் பெற்றவர்கள் வேறு யாரும் இல்லை என்று அடித்துச் சொல்லலாம்.

இது தொடர்பாக திரும்பத் திரும்ப எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் தங்கத்தினால் செய்யப்பட்ட மாட்டை வணங்கினார்கள். மீண்டும் சிலை வணக்கத்தின் பக்கம் திரும்பினார்கள்.

நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர்.

என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது.

மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம்.

நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக் கொள்ள மாட்டேன்; என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் தண்டித்துத் தீர்ப்பேன். (விடுதலைப் பயணம் 20:2-5)

இதுபோல் கிறித்தவ சமுதாயத்தின் பெரும் பகுதியினர் இந்த இணை வைப்பு எனும் களங்கத்திலிருந்து விடுபடவில்லை. லண்டனிலுள்ள செயின்ட் பால் தேவாலயத்திற்கும், ரோமிலுள்ள செயின்ட் பீட்டர் தேவாலயத்திற்கும் சென்று பாருங்கள். அதற்கும் இந்தியாவிலுள்ள சோம்நாத் கோயிலுக்கும் எந்த வித்தியாசத்தையும் வேறுபாட்டையும் காண முடியாது.

கொள்கை, கோட்பாடுகள்.

உலகத்தின் மதம் தொடர்பான சொல்லியலில் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்கே உரிய பாணியில், அவனுக்கே உரிய சொல் வழக்கில் வானம், பூமியின் ரட்சகனைக் குறிப்பதற்காக அழகிய பெயர்களை வழங்கியிருக்கிறார்கள்.

ஜுலு இனத்தின் கடவுள் கொள்கை.

தென் ஆப்பிரிக்காவில் வாழ்கின்ற ஜுலு இன மக்கள் உடல் வலிமை மிக்கவர்கள்; போர்க் குணம் கொண்டவர்கள்; அறியாமைக் காலத்திலும் அல்லாஹ்வைத் தெரிந்து வைத்திருந்த குறைஷி சமுதாயத்தைப் போன்றவர்கள். அவர்கள் எல்லாம் வல்ல இறைவனுக்கு மஙயஊகஒசணஆசஏஒ என்ற பெயரை வழங்கியிருக்கிறார்கள். இந்த வார்த்தை அதனுடைய சரியான பொருளில் உச்சரிக்கப்படும் போது “அல்லாஹ் செல்வந்தன்’ என்ற அர்த்தத்தைக் கொண்ட “வல்லாஹு கனி’ என்ற அரபி வார்த்தையை ஒத்திருக்கின்றது.

வட அமெரிக்காவில் அல்கனி (ஆப்ப்ங்ஞ்ஹய்ஹ்) என்ற செவ்விந்தியர்கள் உள்ளனர். அந்த வார்த்தைக்கும் இது ஒத்திருக்கின்றது. ஆப்ப்ங்ஞ்ஹய்ஹ் அல்கனி என்ற வார்த்தையின் மூலச் சொல் பொதுவாக அமெரிக்கர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் ஜுலு இனத்தைச் சார்ந்த ஒருவரிடம் மஙயஊகஒசணஆசஏஒ யார் என்று கேட்டுப் பாருங்கள். அவர் தெளிவாக தனது மொழியில், “அவன் தூய்மையானவன்; புனித ஆன்மா; அவன் பெறவுமில்லை; பெறப்படவுமில்லை. மேலும் அவனுக்கு நிகராக எதுவுமில்லை” என்று குறிப்பிடுவார்.

இஸ்லாமியக் கொள்கை.

இதை அப்படியே அல்குர்ஆன் 114வது அத்தியாயத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். இரண்டிற்கும் இடையே பெரிய வித்தியாசத்தைக் காண முடியாது. தென் ஆப்பிரிக்காவில் ஸம்பாஸி ஆற்றுக்குத் தெற்கே உள்ள ஒவ்வொரு இனமும் இறைவனுக்குப் பல்வேறு பெயர்களைக் கொடுக்கின்றன. எடுத்துக்காட்டாக, பஒலஞ, ஙஞஉஒஙஞ, மசஃமகமசஃம ஆகிய பெயர்களைக் குறிப்பிடலாம். இந்த வார்த்தைகளுக்கு ஆப்பிரிக்க மொழியைச் சார்ந்த எவரும் ஜுலு இனத்தினர் கூறும் அதே தூய கடவுள் பண்புகளைத் தான் கூறி விளக்குவர்.

இவர்களுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்களின் பெயர்களை அவர்களால் பட்டியல் போட முடியாது. காரணம் அவர்களது மொழியில் எழுத்துப்பூர்வமான ஆவணங்கள் இல்லை. வெள்ளையர்கள் வருகின்ற வரை அந்த இனத்தவர்களில் ஒருவர் கூட சிலைகள் அல்லது மனித, விலங்குகளின் உருவப் படங்களைப் பார்த்து ஒருபோதும் குனிந்தது கிடையாது. ஆங்கிலேயர்கள் வந்த பிறகு தங்களது கிறித்தவ மதத்தை அங்கு அறிமுகப்படுத்தினர்.

தந்தை, மகன், புனித ஆவி என்று கடவுளுக்கு மனிதத் தன்மையைக் கற்பிக்கின்ற கடவுள் கொள்கையையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினர். இதன் காரணமாக அவர்களை இயேசு, மேரி, செயின்ட் ஜோசப், செயின்ட் கிறிஸ்டோபர் இன்னும் மற்றவர்களின் சிலைகளுக்கு முன்னால் வணங்கும்படி செய்தனர்.

உலகத்தில் வாழ்கின்ற பல்வேறு ஆப்பிரிக்க இனத்தவர்களில் எவரும் தங்களுடைய கடவுள் உருவத்தை வரைந்ததே இல்லை. இதனால் அவர்களுக்கு இந்தக் கலை தெரியாது என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.

மரத்திலிருந்து யானை, சிங்கம் போன்றவற்றைப் படைக்கின்ற, களி மண்ணிலிருந்து ஆண் பெண் சிலைகளை வடிக்கின்ற கலை வண்ணமும் கலை நுணுக்கமும் நன்கு தெரிந்தவர்கள். உலோகத்திலிருந்து வடிவமைக்கும் உலோகத் தொழிற்கலையும் ஓரளவு அவர்கள் தெரிந்திருக்கிறார்கள்.

நீங்கள் ஏன் உங்களுடைய கடவுளர்களின் சிலைகளைச் செய்வதில்லை? உருவமாக வடிப்பதில்லை என்று ஒரு வயது முதிர்ந்த ஜுலுவிடம் வினவிய போது அவர் தெரிவித்த பதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. “அவன் (கடவுள்) ஒரு மனிதனைப் போன்றவனல்லன். அவன் ஒரு குரங்கைப் போன்று அல்லது ஒரு பாம்பைப் போன்றவனல்லன். அவன், நாம் கற்பனை செய்கின்ற அல்லது சிந்திக்கின்ற எந்த உருவத்தையும் தோற்றத்தையும் போன்றவனல்லன். அவன் தூயவன்; ஒரு புனித ஆத்மா! இத்தகைய பண்பைக் கொண்ட அவனை எப்படி வடிவமைக்க முடியும்?” என்று பதிலளித்தார்.

உலகில் வாழும் மக்கள் தாங்கள் வணங்கும் கடவுளுக்கு ஒவ்வொரு பெயரைக் கொடுத்திருந்தாலும் நம்மை மிக அதிகமாகத் திகைக்க வைத்த, திக்குமுக்காடச் செய்த பெயர் ஆபசஆபம என்ற பெயர் தான். இந்த வெளியீட்டிற்கு ரட்ஹற் ண்ள் ட்ண்ள் ய்ஹம்ங்? என்று தலைப்பிடுவதற்குப் பதிலாக ஆபசஆபம என்றே தலைப்பிடலாம்.

அப்படியென்ன ஆபசஆபம என்ற பெயரில் ஒரு வினோதம்? புதுமை?

தென் ஆஸ்திரேலியாவின் பூர்வீகக் குடிமகன் தன்னுடைய கடவுளை ஆபசஆபம என்று அழைக்கிறான். இதற்குக் காரணம் என்ன?

வானத்தில் உள்ள தந்தை (இறைவன்), முழுமையாக, முற்றிலும் அனைத்துத் தேவைகளை விட்டும் நீங்கியவன்; அனைத்துத் தேவைகளை விட்டும் தூய்மையானவன்; அவன் தனித்தவன்; அவன் உணவு அல்லது குடிநீர் சாப்பிட மாட்டான்.

இவ்வாறு அவனுக்கு ஓர் இறைத் தூதர் பாடம் படித்துக் கொடுத்திருக்கலாம்; போதித்திருக்கலாம்.

தன்னுடைய முற்றிலும் பழமை வாய்ந்த, தங்கு தடையற்ற மொழியில் இந்தத் தூய தன்மைகளைக் குறிப்பதற்கு ஒரு வார்த்தையைத் தேர்வு செய்கிறான். அது தான் ஆபசஆபம.

ஆய்ன்ள் ஏனஸ் (மலக் கழிவு வாய்) இல்லாதவன்; அசுத்தம் ஏற்படாதவன்; மாசு, தவறு இல்லாதவன்.

இந்தப் புதுக் கருத்தை இந்து, முஸ்லிம், கிறித்தவ நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட போது அவர்களது உடனடியான எதிர் விளைவு (இது ஒரு முட்டாள்தனமான கருத்து என்பது போல்) மகிழ்ச்சியுடன் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்தனர். பாவம்! பரிகாசத்திற்குரியவர்கள் அவர்கள் தான் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.

ஆய்ன்ள் (மல வாய்) என்ற நான்கு எழுத்துக்களைக் கொண்ட ஒரு சிறிய வார்த்தையாக இருந்தாலும் அதிகமான மக்கள் அதைக் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். இதற்குப் பகரமாக பேச்சு நடையில் உள்ள ஒரு வார்த்தையைப் பயன்படுத்த எனக்குப் பிடிக்கவில்லை. காரணம் மக்களின் அதிகப்பட்ச தவறான உணர் திறன் தான்.

அப்துல்லாஹ் யூசுப் அலீ அவர்களின் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், “ஒரு கட்டத்தில் அழகாயிருந்த தங்களது மொழியை வெறும் கவர்ச்சி மிகு பிதற்றலாகவும் அர்த்தமற்ற உளறலாகவும் மாற்றி விட்டனர்” என்று தான் குறிப்பிட வேண்டும்.

எனவே இந்தச் சொல் பிரயோகத்தின் மூலம் ஏற்படும் பிரச்சனையைத் தவிர்க்க, பதட்டத்தைத் தணிக்க சுற்றி வளைத்து ஒய்ல்ன்ற் (உள்ளிடுகை), ஞன்ற்ல்ன்ற் (வெளியிடுகை) என்று ஒரு நாகரீக வார்த்தையில் குறிப்பிடலாம்.

உணவு உட்கொண்ட ஒருவர் கண்டிப்பாக தனது இயற்கைத் தேவையை நிறைவேற்றியாக வேண்டும்; கழிவறைக்குச் சென்றே தீர வேண்டும். மனிதனின் இன்றியமையாத தன்மையை உணர்ந்து தான் பழங்கால நண்பன் (தென் ஆஸ்திரேலிய குடிமகன்) இந்த குறைத் தன்மையை இறைவனுக்குக் கொடுக்கக் கூடாது என்று முடிவெடுத்து ஆபசஆபம அதாவது மலம் கழிக்கும் தன்மை இல்லாத நாயன் என்று அழைக்கிறான்.

உண்ணாத உன்னதக் கடவுள்.

பூர்வீக மனிதனின் கடவுள் பற்றிய இந்தப் புதுமைக் கொள்கை உண்மையில் புதுமையில்லை. இந்த உண்மையை இறைவன் தன்னுடைய இறுதி வேதமான புனிதக் குர்ஆனில் மனித குலத்திற்குத் தெரிவிக்கின்றான். தனித் தகுதியுள்ள, தன்னிகரில்லாத அந்த ஆசிரியனின் தகுதிக்கேற்ப அதை உயர்தர நடையில் தெளிவுபடுத்துகின்றான்.

அதன் அழகு, நயம் காரணமாக அதை ரசிப்பதுடன் மட்டும் நின்று விட்டு அதனுடைய செய்தியின் ஆழத்தை ஏனோ நாம் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டோம்.

உண்மையான அந்த ஓர் இறைவனை வணங்குவதை விட்டும் மறக்கடிக்கச் செய்ய முயல்வோருக்கு எதிராகத் திருக்குர்ஆன் நம்மை முழங்கச் சொல்கிறது.

“வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு பொறுப்பாளனை ஏற்படுத்திக் கொள்வேனா? அவனே உணவளிக்கிறான். அவன் உணவளிக்கப்படுவதில்லை” என்று கூறுவீராக! “கட்டுப்பட்டு நடப்போரில் முதலாமவனாக இருக்குமாறும் இணை கற்பித்தோரில் ஒருவனாக ஆகிவிடக்கூôது என்றும் கட்டளையிடப்பட்டுள்ளேன்” எனவும் கூறுவீராக! (அல்குர்ஆன் 6:14)

ஆம்! வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு யாரையும் பொறுப்பாளனாக ஆக்க மாட்டோம் என்று பிரகடனப்படுத்துமாறு நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம்.

யாருக்கேனும் மனிதக் கடவுள்கள் விஷயத்தில் நம்பிக்கை இருக்குமானால் அவர்களைக் கூட்டி வாருங்கள். சோதித்துப் பார்ப்போம். எங்கள் கடவுள் உணவளிப்பவன்; பிறரால் உணவளிக்கப்படுபவன் அல்லன். அவன் உணவு சாப்பிடுகின்ற தேவையில் இல்லை. உங்களுடைய மனிதக் கடவுள்கள் சாப்பிடுகிறார்களா? இல்லையா? அப்படிச் சாப்பிட்டால் அவர் தனது இயற்கைத் தேவையை நிறைவேற்ற வேண்டிய அவசியம் ஏற்படும். எங்களுடைய கடவுளுக்கு அந்த அவசியம் இல்லை. காரணம் எங்கள் கடவுள் சாப்பிட மாட்டான்.

எவ்வளவு அழகிய, எளிய வாதம். ஆனால் அதே சமயம் திகைக்க வைக்கின்ற வாதம். வேதனைக்குரிய விஷயம்! நாம் பெற்றிருக்கின்ற இந்த ஆயுதத்தின் வலிமையை நமக்கு தென் ஆஸ்திரேலியாவின் பூர்வீகக் குடிமக்கள் நினைவுபடுத்த வேண்டிய பரிதாபத்திற்குரிய நிலையில் இருக்கிறோம்.

பிரச்சாரக் கலையை, அழைப்புப் பணியின் திறமையை நாம் முற்றிலும் இழந்து விட்டோம். காரணம், பல நூற்றாண்டுகளாக நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு இஸ்லாத்தைப் போதிப்பதையே நிறுத்தி விட்டோம்.

கிறித்தவர்கள் நம்முடைய வாசல் கதவுகளை வரிசையாக வந்து தட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆன்மீகக் குருட்டுத்தனத்தால் நம்மிடையே உள்ள எதிரிகளை எதிர் கொள்வதற்குப் பயப்படுகின்ற பயந்தாங்கொள்ளிகளை அந்தக் கிறித்தவர்களிடம் பார்க்க முடியவில்லை. 50 ஆண்டுகளுக்கு முன்னால் குவைத்தில் ஒரேயொரு கிறித்தவக் குடும்பம் தான் இருந்தது. இன்றைய தினம் அந்தச் சின்னஞ்சிறு நாட்டில் 35 கிறித்தவ தேவாலயங்கள் உருவாகி விட்டன.

நூறு ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்காவில் உருவான “யேஹோவா சாட்சிகள்’ என்றழைக்கப்படுகின்ற ஒரு கிறித்தவ அமைப்பினர், அமெரிக்காவுக்கு வெளியே இரண்டாவது பெரிய சமுதாயமாக வாழ்கின்ற நாடு நைஜீரியா எனும் முஸ்லிம்களின் நாடு தான் என்று பெருமையடித்துக் கொள்கின்றனர்.

உலகத்திலேயே முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்ற நாடான இந்தோனேஷியாவில் மட்டும் 6,000 முழுநேர கிறித்தவப் பிரச்சாரகர்கள் இருக்கின்றனர். அவர்கள் தத்தமது தேவாலயங்களுக்குக் கீழ் இயங்கும் பாதிரியார்கள் கிடையாது. மாறாக, கிறித்தவர் அல்லாதவர்களை, அதாவது ஐங்ஹற்ட்ங்ய் ஹீதன் என்று அழைக்கப்படுபவர்களை சதாவும் தொந்தரவு செய்கின்ற, அவர்களுடன் புனிதப் போர் தொடுக்கின்ற போராளிகள்.

இந்தோனேஷியா அரசாங்கத்திடம் இருப்பதை விட இவர்களிடம் அதிகமான தனியார் விமானத் தளங்கள் உள்ளன. இவர்களிடம் பிரச்சாரக் கப்பல்கள் உள்ளன. இந்தோனேஷியா இண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட நாடு. அந்த நாட்டில் கப்பல்களை நிறுத்துவதற்குத் துறைமுகங்கள் ஏதுமில்லை என்பதால் இந்தப் பிரச்சாரக் கப்பல்கள் எந்தத் தீவில் வேண்டுமானாலும் நங்கூரம் பாய்ச்சி நிற்கின்ற வசதியைப் பெற்றிருக்கின்றன.

கப்பல்களை அந்தத் தீவுகளில் கொண்டு போய் நிறுத்திக் கொண்டு அங்குள்ள மக்களை கப்பலில் வந்து உணவு சாப்பிடுவதற்கும் உல்லாசம் அனுபவிப்பதற்கும் அழைக்கின்றார்கள். அங்கே தங்களின் இஸ்லாத்திற்கு எதிரான நிந்தனைப் பிரச்சாரத்தையும் இகழாரத்தையும் ஆரம்பித்து விடுகிறார்கள். தங்களுடைய கள்ளப் பிரச்சாரத்தை, கள்ளங்கபடமற்ற மக்களின் மூளையில் இறக்குமதி செய்கிறார்கள். அவர்களது இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஞல்ங்ழ்ஹற்ண்ர்ய் ஞஸ்ங்ழ்ந்ண்ப்ப் “உச்சக்கட்ட ஒழிப்பு’ அல்லது “அதிகப்பட்ச அழிப்பு’ என்று ரகசியப் பெயர் வைத்திருக்கிறார்கள்.

இந்த நூற்றாண்டின் இறுதிக்குள்ளாக இந்தோனேஷியாவை ஒரு கிறித்தவ நாடாக மாற்றி விட வேண்டும் என்பது அவர்களின் குறியிலக்கு!

உலகம் முழுவதும் புழுதி பரப்புகின்ற அறுபதாயிரம் போராளிகளில் பாதிக்கும் அதிகமானோர் ஆப்பிரிக்காவில் தான் மையம் கொண்டிருக்கின்றனர். ஆப்பிரிக்கா இன்று முஸ்லிம் கண்டம். இந்த நூற்றாண்டின் இறுதிக்குள்ளாக அதைக் கிறித்தவக் கண்டமாக மாற்றுவதற்காக இந்தப் போராளிகள் போர் விமானங்களிலும் போர்க் கப்பல்களிலும் வந்திறங்கி புனிதத் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

நம்பிக்கை என்ற போரில் நம்முடைய வாளும் கேடயமும் என்ன? அவை அல்குர்ஆனில் தான் இருக்கின்றன. நன்மைகளை வேட்டையாடுவதற்கு மட்டும் திருக்குர்ஆன் வசனங்களைப் பயன்படுத்திய நாம், அந்த வசனங்களை இந்தப் போர்க்களத்திற்கும் கொண்டு வர வேண்டும்.

இயேசு உணவு உண்டாரா?

மர்யமின் மகன் மஸீஹ் தூதரைத் தவிர வேறில்லை. அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர். அவரது தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர். இவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக! பின்னர் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் சிந்திப்பீராக!

(அல்குர்ஆன் 5:75)

மர்யமின் மகனான இயேசு கிறிஸ்து கடவுளின் தூதர்களில் வலிமை மிக்க ஒரு தூதர் என்று இஸ்லாமிய மார்க்கம் ஒப்புக் கொள்கின்றது. எந்த ஓர் ஆடவரின் தொடர்பும் இன்றி ஓர் அற்புதமாக அவரை, அவரது தாயார் மர்யம் (அலை) பெற்றெடுத்தார்கள். அவர் தான் மஸீஹ். அல்லாஹ்வுடைய அனுமதியுடன் இறந்தவருக்கு அவர் உயிர் கொடுத்தார். அல்லாஹ்வின் அனுமதியுடன் குருடர்களைப் பார்க்கச் செய்தார். அல்லாஹ்வின் அனுமதியுடன் குஷ்டரோகிகளுக்குக் குணமளித்தார் என்று இஸ்லாம் ஒப்புக் கொள்கின்றது. ஆனால் அவர் உணவு உண்ணவில்லையா?

அவர்கள் வேக வைத்த மீன்துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள். அதை அவர் எடுத்து அவர்கள் முன் அமர்ந்து உண்டார். (லூக்கா 24:42, 43)

அத்துடன் இயேசுவின் தாயார் உண்மை பேசுகின்ற, பக்தி மிக்க தூய பெண் என்று இஸ்லாம் ஒப்புக் கொள்கிறது. ஆனால் அவர் உணவு உண்ணவில்லையா?

இதன் அர்த்தம் என்ன என்று உங்களுக்குப் புரிகிறதா? நமக்கு தெற்கு ஆஸ்திரேலியாவின் பூர்வீகக் குடிமகன் வந்து இது தொடர்பாக நினைவூட்ட வேண்டுமா? அவனது நினைவூட்டல் அவசியம் தேவை தான். இந்தப் போர்க்களத்தில் நம்முடைய உள்ளத்திற்கும் அறிவுக்கும் ஆபசஆபம என்ற ஆயுதம் நமக்குத் தேவைப்படுகின்றது.

அவனுடைய எளிய கிராமத்து மொழியில், அவனுடைய சிறு பிள்ளைத்தனமான குழந்தை மொழியில் தன்னுடைய கடவுள் உண்ண மாட்டான்; சாப்பாடு சாப்பிட மாட்டான் என்று தெரிவிக்கின்றான்.

உணவு சாப்பிடுபவன் கடவுளாக இருக்க முடியாது. காரணம் அவன் ஆபசஆபம இல்லை. இதைச் சொல்வதற்கு இந்தப் பூர்வீகக் குடிமகனுக்கு எந்தத் தடையும் தயக்கமும் இல்லை. உலக மக்களுக்கு அவன் எந்தவொரு ஒளிவு மறைவுமற்ற உண்மையைப் போட்டு உடைக்கின்றான்.

முஹம்மதியர்?

பெயர்களை இட்டுக் கட்டிப் புனைவதில் மேற்கத்தியவர்கள் கைதேர்ந்தவர்கள். அவன் ஒளி வீசுகின்ற மின் விளக்கைக் கண்டு பிடித்தவுடன் அதற்கு ஙஹக்ஷ்க்ஹ கஹம்ல்ள் – மஜ்டா விளக்கு என்று சொன்னான். பார்சி மதத்தவர்களின் ஒளிக் கடவுள் தான் மஜ்டா.

ஐரோப்பியர்கள், தென்னாப்பிரிக்காவில் செயற்கை வெண்ணைக்கு தஹம்ஹ ஙஹழ்ஞ்ஹழ்ண்ய்ங் என்று பெயரிட்டு அதன் விற்பனையில் பெரும் வெற்றி கண்டு விட்டான். இந்தியாவில் கணிசமான மக்கள் தொகையினர் ராமரை மனிதக் கடவுள் என்று கூறுகின்றனர்.

இந்த வெள்ளையன் தன்னை கிறிஸ்தவன் என்று அழைத்துக் கொள்கிறான். காரணம் அவன் கிறிஸ்துவை வணங்குவதால்! புத்தரை வணங்குபவர்களை புத்திஸ்ட் என்று குறிப்பிடுகிறான். இதே வாதத்தின் அடிப்படையில், முஸ்லிம்கள் முஹம்மது நபியை வணங்குகிறார்கள் என்று கருதிக் கொண்டு முஹம்மதியர் என்று அழைக்கின்றான். ஆனால் உலகில் வாழும் ஆயிரம் மில்லியன் முஸ்லிம்களில் ஒருவர் கூட முஹம்மதை வணங்குபவர் அல்ல என்பது தான் உண்மை.

முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கக்கூடிய முட்டாள் ஒருவன் இருக்கின்றான் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டால் அவனை வேண்டுமானால் முஹம்மதியன் என்று அழைக்கலாம். ஆர்வக் கோளாறில் முஹம்மதை வணங்கும் ஒரு முட்டாள், தெற்கு ஆஸ்திரேலியா பூர்வீகக் குடிமகனிடம் போய் தனது கடவுள் முஹம்மது என்று சொல்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பூர்வீகக் குடிமகனின் பதில் என்னவாக இருக்கும்? நீங்களே சிந்தித்துப் பாருங்கள். குழந்தைத் தன்மையை ஒத்த அந்தப் பூர்வீக மக்கள் இந்த முஹம்மதியரிடம் கேட்கப் போகும் கேள்வி, முஹம்மது ஆபசஆபமவா? அதற்கு இந்த முட்டாளிடமிருந்து வரப் போகும் பதில், இல்லை என்பது தான்.

இது தான் உண்மை நிலை எனும் போது படித்த, பண்டித, நாகரீகமிக்க பல மில்லியன் மக்களால் வழிபாடு செய்யப்படுகின்ற கதாநாயகர், கதாநாயகிகளின் நிலைமை என்ன?

நீங்கள் கடவுளாக வழிபடுகின்ற ஆண், பெண் கடவுளர்களை, தேவர்களை, தேவிகளை இந்தப் பூர்வீகக் குடிமகனுக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்துங்கள். தங்களிடம் வருகின்ற கடவுளர்களிடம் ஆபசஆபம என்ற மட்டையால் அடித்து ஒரு சிக்ஸர் விளாசி விடுவான்.

உண்மையில் இந்தப் பூர்வீகக் குடிமகன், தன்னுடைய கடவுள் கொள்கையில் ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா கண்டங்களில் வாழ்கின்ற மில்லியன் கணக்கான மக்களின் கடவுள் கொள்கையை விட உயர்ந்து நிற்கவில்லையா?

பின்னடைவில் ஒரு முன்னேற்றம்.

சந்திரனில் இறங்கி தடம் பதித்து, நடை பயில்கின்ற அமெரிக்கனையும் செயற்கைக் கோள்கள் போன்ற சாதனங்கள் வாயிலாக அங்குள்ள நிலப்பரப்பில் நடக்கும் நிகழ்வுகளை தன் வீட்டிலிருந்து கொண்டே கண்காணித்துக் கொண்டிருக்கும் அவனுடைய இனத்தாரையும் பாருங்கள். அருமையிலும் அருமை தான்.

வங்காள விரிகுடா துயரச் சம்பவத்தை நினைத்துப் பாருங்கள். கடலில் நிகழவிருக்கின்ற சுனாமி அலைத் தாக்குதலைப் பற்றி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்ததை நினைத்துப் பாருங்கள். அரபுகள் விரைவில் உங்கள் நாட்டைத் தாக்கப் போகிறார்கள் என்று இஸ்ரேலை அமெரிக்கா எச்சரிக்கை செய்ததை எண்ணிப் பாருங்கள். 1973ல் ரமளானில் நடக்கவிருந்த போரைப் பற்றி அமெரிக்கா முற்கூட்டியே எச்சரித்ததை சிந்தித்துப் பாருங்கள்.

பல்வேறு சீர்கேடுகளைக் கொண்டிருந்தாலும் இந்த அமெரிக்கர்கள் ஒட்டு மொத்த அனைத்து மனிதக் கடவுள்களை விடவும் மாபெரும் அதிகாரம், ஆதிக்கம் மிக்கவர்களாகத் திகழ்கின்றனர். இத்தகைய பலமான, வலிமையான இந்த அமெரிக்கர்களும், இவர்களுடைய ஐரோப்பா மற்றும் இதர நாடுகளின் கூட்டாளிகளும் மனிதனையும் குரங்கையும் வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். இல்லை! அந்த ஷைத்தானை வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் இப்படி?

அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:

அல்லாஹ்வின் மீது ஆணையாக! உமக்கு முன் சென்ற சமுதாயங்களுக்குத் தூதர்களை அனுப்பினோம். அவர்களது செயல்களை ஷைத்தான் அழகாக்கிக் காட்டினான். இன்னும் அவனே இன்று அவர்களின் உற்ற நண்பன். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 16:63)

தனி நபர் வழிபாடு மனிதனுடைய உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து கிடக்கும் ஓர் உணர்வு. உண்மையான கடவுளை வணங்கவில்லையெனில் வேறு எதையாவது அவன் வணங்குவான். கண்டிப்பாக வணங்கியே தீருவான்.

கண்டதையும் வணங்குவதை விட தன் இனத்தைச் சார்ந்த அழகிய ஆண் அல்லது பெண்ணைக் கடவுளாக்கி வணங்குவது அவனுக்கு முன் சிறந்த வழிமுறையாகத் தெரிகின்றது. கடவுளுக்கு மனிதப் பண்பு அல்லது வடிவம் கற்பிக்கும் கொள்கை (ஆய்ற்ட்ழ்ர்ல்ர்ம்ர்ழ்ல்ட்ண்ள்ம்) அதாவது தன்னுடைய விருப்பத்திற்குத் தக்கவாறு மனிதன் கடவுளைக் கற்பனை செய்கின்ற வழிமுறை மனித சமுதாயத்தில் தொன்று தொட்டு இருந்து வருகின்றது. இதில் நவீன காலம், பழைய காலம் என்ற வேறுபாடு இல்லை. தன்னைப் போலவே, தன்னுடைய உருவத்தைப் போன்றே மனிதன் கடவுளைப் பற்றிச் சிந்திக்கிறான்.

அப்பொழுது கடவுள், “மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்” என்றார். (ஆதியாகமம் 1:26)

மேலே நாம் மேற்கோள் காட்டியிருக்கும் பைபிளின் ஆரம்ப அத்தியாயத்தில் உள்ள வசனத்தில் இடம் பெறுகின்ற உருவம் மற்றும் நாம் என்ற வார்த்தைகளை பரிதாபத்திற்குரிய, இருளில் மூழ்கிக் கிடக்கின்ற கிறித்தவர்கள் தவறாக விளங்கிக் கொண்டனர்.

பிதா, மகன், புனித ஆவி ஆகிய மூவரும் ஒன்றாகச் சங்கமிப்பதால் தான் நாம் என்று வருகின்றது என்று ஒரு கிறித்தவர் விளக்கமளிக்கின்றார். அரபியிலும் ஹிப்ருவிலும் இரண்டு விதமான பன்மைகள் இருக்கின்றன என்பதை அவர் விளங்கத் தவறி விட்டார். ஒன்று, ஒருவருக்கு மேற்பட்டவரை (நாம் என்று குறிக்கும்) பன்மையாகும். மற்றொன்று, ஒருவரை மட்டுமே குறிக்கின்ற மரியாதைப் பன்மையாகும்.

“இவர்களுக்கு சான்றுகளை (நாம்) எவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக” என்று திருக்குர்ஆன் 5:75 வசனத்தில் வருகின்ற “நாம்’ என்ற வார்த்தையைக் கவனியுங்கள். உண்மையில் இது மரியாதைப் பன்மையாகும்.

நாம் என்று வருவதால் கடவுள் தன்மையில் பலர் இருப்பதாக எந்தவொரு முஸ்லிமும், அரபுக் கிறித்தவரும், யூதரும் ஒருபோதும் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்.

தவ்ராத்தின் (பழைய ஏற்பாட்டின்) ஆரம்பத்தில் வருகின்ற “நாம்’ என்ற வார்த்தை எத்தனை கடவுள்களைக் குறிக்கிறது என்று ஹிப்ரு மொழி தெரிந்த ஒரு யூதரிடம் கேட்டால் அவர் நாம் சொல்வதைப் போன்று தான் எந்தவொரு தயக்கமும் இல்லாமல் பதில் சொல்வார்.

இன ஒதுக்கீடு கடவுள்கள்.

மனித சமுதாயத்தில் தவறான சிந்தனையுடையவர்கள் கடவுளைத் தங்கள் உடல் அமைப்பு ரீதியில் மட்டும் கற்பனை செய்யவில்லை. கடவுளுக்கும் இன ஒதுக்கீடு அடிப்படையிலான பாகுபாட்டையும் வித்தியாசத்தையும் கற்பித்து விட்டனர்.

எத்தியோப்பிய கடவுளுக்கு எத்தியோப்பியர்களைப் போன்ற உதடுகள், வெண்கலக் கன்னங்கள், கம்பளி மயிர் போன்றவற்றைக் கொடுத்தார்கள். கிரேக்கக் கடவுள்கள் கிரேக்கர்களைப் போன்றே கூரிய கண்கள், பழமை மிக்க, பார்ப்பதற்கு அழகு மிக்க தோற்றம் கண்டார்கள்.

இப்படிக் கடவுளுக்கு மத்தியிலும் இன ஒதுக்கீட்டுக் கொள்கை கொண்டு வந்து விட்டனர்.

கிரேக்கர்களும் ரோமர்களும் தங்களுடைய அறிவுக் கடவுள் (ஙண்ய்ங்ழ்ஸ்ஹ) ஒளி மற்றும் சூரியக் கடவுள் (ஆல்ர்ப்ப்ர்) மகத்தான சாதனை புரிந்த ஹெர்குலிஸ் போன்றவர்களைக் கழற்றி விட்டு விட்டு, கைவிட்டு விட்டு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதக் கடவுளான இயேசு கிறிஸ்துவைக் கடவுளாக ஏற்றுக் கொள்ள முன்வந்து விட்டனர்.

தங்களுடைய புராணக் கடவுளர்களை மேற்கத்திய ஐரோப்பாவிற்கு இறக்குமதி செய்தவர்களின் முன்னணி வகித்தவர்கள் ரோமானியர்கள் தான். அவர்களில் ஸ்காண்டிநேயர்கள் போர் மற்றும் உழவுக்குரிய இடி மின்னல் தெய்வத்தை (பட்ர்ழ்) வணங்கிக் கொண்டிருந்தனர். ஆங்கில சாக்சானியர்களின் கடவுள் தான் எல்லாக் கடவுள்களுக்கும் தலைமைக் கடவுள். அறிவு மற்றும் போருக்குரிய கடவுளான இவர் ஒற்றைக் கண் கொண்ட ஆண் கடவுள். இவரது பெயர் ஓடின் (ரர்க்ங்ய்) என்பதாகும். அவர்கள் தோர், ஓடின் போன்ற கடவுள்களை விட்டு விட்டு, அந்த மனிதக் கடவுளை (இயேசுவை) மிக்க மகிழ்ச்சியுடன் விரைந்து ஏற்றுக் கொண்டனர். இதற்குப் பதிலாக ஐரோப்பியர்கள் தாங்கள் ஆதிக்கம் செலுத்திய ரோமானிய காலனிகளில் முக்கடவுள் கொள்கையை அறிமுகம் செய்தனர். மண்ணின் மைந்தர்கள் வணங்கிய, கண்ட கண்ட கடவுள்களை விட அழகு நிறைந்த மனிதக் கடவுள்களைக் கொடுத்தனர்.

படங்களிலும் சிற்பங்களிலும் திரைப்படங்களிலும் எப்படி இயேசுவை மாற்றிக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று பாருங்கள்.

கிங் ஆஃப் கிங்ஸ் என்ற படத்தில் ஜெஃப்ரி ஹன்டர் என்ற நடிகர் வருவது போன்ற ஓர் அழகிய கோணத்தில் தங்க நிறத் தலைமுடிகளுடனும், நீல நிறக் கண்களுடனும் அவரைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு யூதரைப் போன்று அவரது தோற்றம் இல்லை. யூதருக்கு மூக்கு சற்று வித்தியாசமாக அமைந்திருக்கும். ஆனால் அவர்கள் காட்சிப்படுத்திய கடவுள் உடல் அமைப்பில் எலும்பு கட்டமைப்பில் ஓர் ஆங்கில, ஜெர்மானிய, ஸகாண்டிநேவிய தோற்றத்தில் தான் தெரிகிறாரே தவிர ஓர் யூதரைப் போல் காட்சியளிக்கவில்லை.

வெள்ளையர்களின் மனிதக் கடவுள் நீல நிற மனிதக் கடவுளுக்கு மாற்றமாக அமைந்திருப்பார். (இந்து மதக் கடவுள் படங்களில் ராமர், கிருஷ்ணர் ஆகியோரை நீல நிறத்தில் வரைந்திருப்பார்கள்.)

இப்படி இவர்களது கதை, சட்டியிலிருந்து அடுப்பில் விழுந்த கதையாக, ஏற்கனவே இருந்த இணை வைப்பை விடக் கொடூரமான இணை வைப்பிற்கு மாறி விட்டிருக்கிறார்கள்.

முஸ்லிம்களின் கடமை.

இருளில் கிடக்கின்ற பல மில்லியன் கிறித்தவர்கள் விஷயமாக நாம் எதுவுமே செய்யவில்லை. நாம் அவர்களை அவர்களது இணை வைப்புக் கொள்கையிலிருந்து கரையேற்ற வேண்டும். அல்லது அவர்கள் நம்மை இவ்வுலகிலும் மறு உலகிலும் நாசத்தில் கொண்டு போய் தள்ளி விடுவார்கள்.

அல்லாஹ்வின் பூமியில் உண்மையான அந்த இறைவனை வணங்குபவர்களை விட மிக அதிகமான கோடிக்கணக்கான மக்கள் மனிதக் கடவுள்களையே வணங்குகின்றனர். அல்லாஹ்வுடைய மார்க்கத்தை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் நாம் காட்டுகின்ற அலட்சியத்தினால் தான் முஸ்லிம் நாடுகளில் துன்பங்கள் தொடர்கின்றன.

தூய இஸ்லாத்தின் நம்பிக்கையைப் பரப்புவது தான் ஒரு முஸ்லிமுடைய கடமையாகும். இந்த இஸ்லாத்தை நாம் குறைத்து மதிப்பீடு செய்தால் அது நமது அழிவுக்குக் காரணமாகும். அல்லாஹ்வின் சாட்டை எந்தச் சப்தமும் இல்லாமல் நம்மைச் சாய்த்து விடும்.

இந்தத் தூய அழைப்புப் பணியில் உங்கள் பங்கு என்ன? பணி என்ன? அது மிக எளிது தான்.

மர்யமின் மகன் மஸீஹ் தூதரைத் தவிர வேறில்லை. அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர். அவரது தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர். இவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக! பின்னர் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் சிந்திப்பீராக! (அல்குர்ஆன் 5:75)

இந்த வசனத்தை மனனம் செய்து கொள்ளுங்கள். ஒரு சிறிய அட்டைத் துண்டில் இந்த வசனத்தை எழுதி சட்டைப் பையில் வைத்துக் கொள்ளுங்கள். பார்க்கும் போதெல்லாம் அதை, இறைவன் கொடுத்த இயற்கை கம்ப்யூட்டரான மூளையில் பதிய வையுங்கள்.

இந்த ஒரு வசனத்தை ஆபசஆபம என்ற ஆயுதத்தைக் கொண்டு, கடவுளுக்கு மனிதப் பண்பு கற்பிக்கும் (ஆய்ற்ட்ழ்ர்ல்ர்ம்ர்ழ்ல்ட்ண்ள்ம்) கொள்கையின் அடிவேரை, ஆணி வேரை அறுத்தெறியுங்கள். இது உங்களுடைய உரிமையும் இஸ்லாமிய மார்க்கத்தின் விதியும் ஆகும். அல்லாஹ் சொல்கின்றான்:

நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோரை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அல்லாஹ்வின் உண்மையான வாக்குறுதி. அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யார்? (அல்குர்ஆன் 4:122)

அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?

அல்லாஹ்வை அழைக்கும் கிறித்தவர்கள்.

யூதர்களும் கிறித்தவர்களும் தத்தமது பங்கிற்கு, தங்களுக்கு அருளப்பட்ட வேதங்களில் திணிக்க வேண்டியதைத் திணித்தும், தணிக்கை செய்ய வேண்டியதைத் தணிக்கை செய்தும் கொண்டனர். ஆனால் அவர்களது அத்தனை திருகுதாளங்களையும் தில்லுமுல்லுகளையும் தாண்டி, அவர்களது கத்தரிக்கோல்களையும் கடந்து “அல்லாஹ்’ என்ற வார்த்தை பைபிளில் மட்டுமல்ல! அவர்களது அன்றாட ஜெபங்களிலும் பிரச்சாரத்திலும் பிரார்த்தனையிலும் ஆழமான, அழுத்தமான ஓர் இடத்தைப் பிடித்திருக்கின்றது.

இப்போது அவர்களுக்கு முன்னால் இருப்பது இரண்டே இரண்டு வழிமுறைகள் தான். ஒன்று, அல்லாஹ் என்ற வார்த்தையை இவர்கள் தவிர்க்க வேண்டும். அது ஒரு போதும் இவர்களால் முடியாது. அல்லது இஸ்லாத்தைத் தழுவ வேண்டும். இதைத் தவிர வேறு வழியில்லை.

அவர்கள் எப்படி, எங்கே அல்லாஹ் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள் என்று பார்ப்போம்.

பைபிள் என்பது இரண்டு ஏற்பாடுகளைக் கொண்டது. ஒன்று பழைய ஏற்பாடு! இதன் மூல மொழி ஹிப்ரு மொழியாகும்.

மற்றொன்று புதிய ஏற்பாடு! இதன் மூலமொழி கிரேக்க மொழியாகும்.

ஹிப்ரு மொழியில் தோரா என்றழைக்கப்படும் தவ்ராத் வேதத்தில் யூதர்கள் செய்த திருத்தத்தைப் பார்ப்போம். அதற்கு முன், ஹிப்ரு மொழிக்கும் அரபு மொழிக்கும் இடையேயுள்ள சில ஒற்றுமையைப் பார்ப்போம்.

1. வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாக எழுதுதல்

2. யூதர்கள் இஸ்ஹாக் நபியின் வழியில் வந்தவர்கள்; அரபிகள் இஸ்மாயீல் நபியின் வழியில் வந்தவர்கள். இரு இனங்களுமே இப்ராஹீம் நபி அவர்களின் வழி வந்தவர்கள்.

3. இரு மொழிகளிலும் படர்க்கை மற்றும் முன்னிலையில் மரியாதைப் பன்மை இல்லாவிட்டாலும் தன்னிலையில் மரியாதைப் பன்மை உண்டு. உதாரணத்திற்கு அல்லாஹ் ஒருவன், அவன் தனித்தவன். குர்ஆனை இறக்கியதைப் பற்றிக் குறிப்பிடும் போது, “நான் இறக்கினேன்’ என்று சில இடங்களிலும், “நாம் இறக்கினோம்’ என்று சில இடங்களிலும் திருக்குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இங்கு நாம் என்றால் அல்லாஹ்வுடன் கூட யாரும் இருப்பதாக விளங்க மாட்டோம். மாறாக மரியாதைப் பன்மையில் “நாம்’ என்று அல்லாஹ் தன்னை அழைக்கிறான் என்று விளங்கிக் கொள்வோம். இதே போன்ற மரியாதைப் பன்மை ஹிப்ரு மொழியிலும் உண்டு.

அடுத்து, இந்த இரு மொழிகளிலும் ஒரே விதமாக, சிறிய மாற்றங்களுடன் அமைந்த வார்த்தைகளைப் பார்ப்போம்.

ஹிப்ரு எலாஹ் அரபி  இலாஹ் ஆங்கிலம் God- கடவுள்

ஹிப்ரு எகுத் அரபி அஹத் ஆங்கிலம் One- ஒருவன்

ஹிப்ரு யவ்ம் அரபி  யவ்ம் ஆங்கிலம் Day- நாள்

ஹிப்ரு சாலோம் அரபி  ஸலாம் ஆங்கிலம் Peace- அமைதி

ஹிப்ரு யாஹுவா அரபி  யாஹுவா ஆங்கிலம் OhB He- அவனே

இதில் யா ஹு வஹு (வ.ஐ.ர.ஐ.) என்ற வார்த்தை இடம் பெறுகின்றது. இதிலுள்ள யா என்பது அழைப்புக் குறியாகும். நாம் ஒரு நண்பனை அழைக்கும் போது, “நண்பனே!’ என்று அழைக்கின்றோம். நண்பன் என்ற வார்த்தையுடன் “ஏ’காரம் சேர்ந்து விட்டால் அது அழைப்பு வார்த்தையாகி விடுகின்றது. தமிழில் ஒரு வார்த்தையின் பின்னால் அழைப்புக்குறி வருவது போன்று அரபியில், “யா’ என்ற வார்த்தையை முன்னால் சேர்க்க வேண்டும்.

அல்லாஹ் என்ற வார்த்தையுடன் “யா’ என்பதை முன்னால் சேர்த்து “யா அல்லாஹ்’ என்றால் “அல்லாஹ்வே!’ என்று அழைப்புக் குறியாக மாறி விடும். ஹிப்ரு மொழியிலும் இவ்வாறு “யா’ என்பதை முன்னால் சேர்ப்பது தான் அழைப்புக்குறியாகப் பயன்படுத்தப்படுகின்றது.

இதன் படி ஹுவ என்றால் அவன் என்று பொருள். யா என்பது அழைப்புக் குறி! இரண்டையும் இணைத்துப் (யாஹுவ) பொருள் கொள்ளும் போது, “அவனே!’ என்ற அழைப்புச் சொல்லாகி விடுகின்றது. சிலர் இதற்கு, எங்கள் கடவுள் என்றும் பொருள் கொள்கின்றனர்.

யாஹுவ என்பதற்கு என்ன அர்த்தமும் இருந்து விட்டுப் போகட்டும். இங்கு நாம் கவனிக்க வேண்டியது இந்த யாஹுவ என்ற வார்த்தையை மொழியக் கூடாது என்று யூத குருமார்கள் தடை விதித்திருக்கிறார்கள் என்பதைத் தான். ஏனெனில் அது கடவுள் பெயராகும்; எனவே அதை மொழியக் கூடாது. அவ்வாறு மொழிந்தால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும். கடவுளுடைய வேதத்தில் கடவுள் பெயரைச் சொல்வதற்கு உரிமையில்லை என்பது வேடிக்கைக்குரிய விஷயமாகும்.

இவ்வாறு அல்லாஹ்வின் பெயரைச் சொல்வதற்குத் தடை என்பதால் யாஹுவ என்பதற்கு முன்னால் அடோனாய் அல்லது எலோஹிம் என்ற வார்த்தையை இடையில் திணித்துள்ளார்கள். இலாஹ் என்றால் கடவுள். இம் என்றால் மரியாதைப் பன்மையாகும். அதாவது “கடவுள் அவர்கள்’ என்று சொல்லலாம். ஐரோப்பிய மொழிகளில் மரியாதைப் பன்மை கிடையாது. அதனால் கிறிஸ்துவை இதை ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்க்கும் போது பன்மையாகவே மொழிபெயர்த்து உண்மையிலேயே மூன்று கடவுள்கள் இருப்பதாக நம்பி விட்டனர். யாஹுவா என்பதை எழுத்தளவில் தணிக்கை செய்யாவிட்டாலும் வாயளவில் சொல்வதைத் தடை செய்து விட்டனர்.

பத்துக் கட்டளைகள்.

செய்! செய்யாதே! என்ற பத்துக் கட்டளைகள் வெற்றி பெற்றதை விட இந்தக் கட்டளை வெற்றி பெற்று விட்டது என்று தான் சொல்ல வேண்டும். யாஹுவா என்பது கடவுள் பெயர். அது கடவுள் பெயர் எனும் போது பழைய ஏற்பாட்டில் இடம் பிடித்தது போன்று புதிய ஏற்பாட்டிலும் இடம் பிடித்திருக்க வேண்டும். ஏனெனில் புதிய ஏற்பாடு என்ற பெயரில் 27 நூல்களும் பழைய ஏற்பாட்டுடன் இணைக்கப்பட்ட கடவுளின் வெளிப்பாடு தான். தெய்வீக அறிவிப்பு தான். இதை இறைவனிடமிருந்து வந்த புத்தம் புதிய கடவுள் வார்த்தை என்று கிறித்தவர்கள் மார் தட்டிக் கொள்கின்றனர்.

அத்துடன் அவர்கள் நிற்கவில்லை. தங்கள் கைவசம் கிரேக்க மொழியிலுள்ள புதிய ஏற்பாட்டின் 24 ஆயிரம் மூல ஏடுகள் இருப்பதாகவும் பீற்றிக் கொள்கின்றனர். ஆனால் அந்த ஏடுகளில் ஒரு இடத்தில் கூட கடவுளின் பெயரான யாஹுவா இடம்பெறவில்லை. மாறாக அந்தப் பெயர் ஃஹ்’ழ்ண்.ர்ள் மற்றும் பட்ங்.ர்ள்’ என்றே குறிப்பிடப்படுகின்றது. இதன் பொருள் ஏர்க் கடவுள், கர்ழ்க் எஜமான் என்பதாகும்.

இவர்களுடைய ஆந்தைப் பார்வையிலிருந்தும் அடித்தல் வேலையிலிருந்தும் அல்லாஹ் என்ற வார்த்தை மட்டும் தப்பி விட்டது.

ஜே கலாச்சாரம்.

அரபி, ஹிப்ரு மொழியில் யா என்ற தொடங்கும் வார்த்தைகளை ஜே என்று மாற்றும் கலாச்சாரம் மேற்கத்தியர்களிடம் முளைத்தது.

யூனுஸ் – ஜோனா

யூசுப் – ஜோசப்

யஹுதா – ஜுதா (ஜுடாஸ்)

ஏஸஸ் – ஜீஸஸ்

என்று மாற்றினர். இந்த அடிப்படையில் பழைய ஏற்பாட்டில் வந்த யாஹுவாவை ஜேஹுவா என்று மாற்றி, கடவுள் பெயர் ஜேஹுவா என்று அமெரிக்காவிலுள்ள கிறித்தவர்களில் ஒரு சாரார் அழைக்கத் துவங்கினர். அவன் பெயர் என்ன? என்று கடவுளின் பெயரைப் பற்றி சாதாரணமாக ஒரு கிறித்தவரிடம் கேட்டால் ஏர்க் கடவுள் என்று பதில் சொல்வான். இப்படிப் பதில் சொல்லும் அந்தக் கிறித்தவனை நோக்கி, “கடவுள் என்றால் வழிபடும் ஒரு பொருள்” என்று கூறி அந்தக் கூட்டத்தினர் அதை மறுத்தனர். அடுத்து அந்தக் கிறித்தவன், Fatherதந்தை என்று சொன்னதும், உன்னுடைய தந்தை என்ன கடவுளா? என்று கேட்டுக் கிண்டல் பேசினர். இதுவெல்லாம் கடவுள் பெயர் கிடையாது; கடவுள் பெயர் ஜேஹுவா தான் என்று இவர்கள் குறிப்பிட்டனர்.

பழைய ஏற்பாட்டில் யாஹுவா (ஜேஹுவா) 6823 இடங்களில் தனியாகவும், ஏங்ய்ங்ள்ண்ள்ல் மட்டும் எலோஹிம் என்ற வார்த்தையுடன் சேர்ந்து 156 இடங்களிலும் இடம்பெறுகின்றது என்று இவர்கள் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர்.

கடவுளின் பெயர் அல்லாஹ் என்ற வார்த்தை பைபிளில் இடம் பெற்றுள்ளது. இது தெரியாத குருடர்களாக இவர்கள் எப்படித் தட்டழிகின்றனர்?

அத்துடன் புதிய ஏற்பாடும் கடவுளின் வாக்கு தான் என்பது கிறித்தவர்களின் நிலைப்பாடு. ஆனால் இந்த சாரார் பழைய ஏற்பாட்டில் வருகின்ற கடவுள் பெயரை ஏற்றுக் கொண்டு புதிய ஏற்பாட்டில் வருகின்ற கடவுள் பெயரை ஏற்க மறுக்கின்றார்கள். இரண்டில் எது கடவுளின் வாக்கு? எது சரி? என்பதை வினவுவதற்காக இதை இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது.

பழைய ஏற்பாட்டில் அல்லாஹ்.

இங்கே Rev. C.I. Scofield, D.D. (இறைமையியல் முனைவர்) அவர்களால் தணிக்கை செய்யப்பட்ட ஆங்கில பைபிளில் உள்ள ஒரு பக்கத்தை இங்கே அளிக்கின்றோம். இவர் கிறித்தவ உலக அறிஞர்களால் பாராட்டப்பட்டவர். அவரது புதிய, திருத்தப்பட்ட பதிப்புக்குக் கீழ்க்கண்ட கிறித்தவ இறைமையியல் முனைவர்கள் குழுமம் தங்கள் முழு ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்கள்.

Rev. Henry G. Weston, D.D., LL.D., President Crozer Theological jeminary.

Rev. W. G. Moorehead, D.D., President Xenia (U.I,) Theological Seminary.

Rev. lames M. Gray, D.D., President Moody Bible Institute.

Rev. Elmore Harris, D.D., President Toronto Bible Institute.

Rev. William !. Erdman, D.D., Author “The Gospel of John,” etc.

Rev. Arthur T. Pierson, D.D., Author, Editor, Teacher, etc.

Rev. William L. Pettingill, D.D., Author, Editor, Teacher.

Arno C. Gaebelein, Author “Harmoney of Prophetic Word,” etc.

இதை நாம் இங்கு வெளியிட்டிருப்பது அவர்களது பட்டங்களைக் கண்டு உங்கள் புருவத்தை உயர்த்துவதற்காக அல்ல! இந்தத் திருத்தப்பட்ட பைபிளில் அவர்கள் கொண்டிருக்கும் ஏகோபித்த கருத்தொற்றுமையைத் தெரிவிப்பதற்காகத் தான் இவர்களது பட்டியலை வெளியிட்டுள்ளோம்.

Elohim – எலோஹிம் சில வேளைகளில் El – எல் அல்லது Elah -  எலாஹ் என்று உச்சரிக்கப்படும். இவற்றின் பொருள் God கடவுள் என்பதாகும். மாற்றாக Alahஅலாஹ் என்று உச்சரிக்கப்படும். (அதாவது அல்லாஹ் என்பதில் ஒரேயொரு “ல்’ என்பதை மட்டும் நீக்கியிருக்கின்றார்கள்.)

அலாஹ் என்பதற்கும் அல்லாஹ் என்பதற்கும் இவர்கள் ஓர் எழுத்து தூரத்தில் தான் இருக்கின்றார்கள்.

இந்த பக்கம் அண்மையில் The New scofield Reference Bible என்ற பெயரில் வெளியான, மன்னர் ஜேம்ஸின் அதிகாரப்பூர்வ பைபிள் பதிப்பில் “அலாஹ்’ என்ற வார்த்தையைக் கன கச்சிதமாக, படு கவனமாகத் தூக்கி விட்டார்கள். மேலே நாம் எடுத்துக் காட்டியிருக்கும் இறைமையியல் முனைவர்களை விட அதிகம் பட்டம் பெற்ற முனைவர்கள் ஒன்று சேர்ந்து முந்தைய பதிப்பில் இடம் பெற்றிருந்த அலாஹ் என்ற வார்த்தையை நீக்கி விட்டார்கள்.

மூலப் பிரதியில் Elohim  அல்லது El அல்லது Elah அல்லது அலாஹ் என்றிருந்ததை இவர்கள் ஏர்க் என்று மொழிபெயர்ப்புச் செய்தனர்.

முஸ்லிம்கள் “அல்லாஹ்’ என்று அழைக்கின்றனர். அதற்கு இது ஒத்திருந்து, உண்மை வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அதை இவர்கள் உருத் தெரியாமல் ஆக்கினாலும் அதை ஒரு போதும் மூடி மறைத்து விட முடியாது. இந்த உண்மையைப் படம் பிடித்துக் காட்டுவதற்காக அரபி பைபிளின் பதிப்பையும் இதே புத்தகத்தின் ஆங்கிலப் பக்கத்தின் பதிப்பையும் தருகின்றோம்.

1:1 In the beginning, when God created the heavens and the earth,

1:2 the earth was a formless wasteland, and darkness covered the abyss, while a mighty wind swept over the waters.

1:3 Then God said, “Let there be light,” and there was light.

1:4 God saw how good the light was. God then separated the light from the darkness.

Genesis 1:1-4

பாதிரிகளுக்குப் பகிரங்க அழைப்பு.

6823 தடவை யாஹுவா என்று தனியாகவும், எலோஹிம் என்ற வார்த்தையுடன் சேர்த்து 156 தடவையும் ஹிப்ரு மொழியில் பழைய ஏற்பாட்டில் வருவதை ஸ்காஃபீல்டு தலைமையிலான முனைவர்களின் குழுமம் “அல்லாஹ்’ என்று ஒப்புக் கொள்கின்றது. முஸ்லிம்கள், கிறித்தவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரே ஒரு நாயனை வணங்கும் அந்த நாள் வெகுதூரத்தில் இல்லை.

நீங்கள் ஒப்புக் கொள்கின்ற அந்த அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுவது போல் பாதிரிகளாகிய உங்களையும் உங்களை நம்பியிருக்கின்ற ஒட்டு மொத்த கிறித்தவர்களையும் நோக்கி இந்த அழைப்பை விடுகின்றோம்.

“வேதமுடையோரே! நாம் அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்கக் கூடாது; அவனுக்கு இணையாக எதையும் கருதக் கூடாது; அல்லாஹ்வையன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக் கூடாது என்ற எங்களுக்கும், உங்களுக்கும் பொதுவான கொள்கைக்கு வாருங்கள்!” என்று கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் “நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக இருங்கள்!” எனக் கூறி விடுங்கள்!  (அல்குர்ஆன் 3:64)

தனி நாயனுக்கு ஒரு தனிப் பெயர்.

அல்லாஹ் என்பதற்கு ஏர்க் கடவுள் என்று மொழி பெயர்க்கிறார்கள். இந்த ஏர்க் என்ற வார்த்தை எப்படியெல்லாம் தவறாகவும் தப்பாகவும் பயன்படுத்தப்படுகின்றது என்று பாருங்கள்.

உதாரணத்திற்கு இந்துக்களின் கோயில்களில் உள்ள சிலைகளைப் பற்றி நம்முடைய குழந்தைகளுக்கு நாம் சொல்லும் போது, ஏர்க்ள் ர்ச் ஐண்ய்க்ன்ள் இந்துக் கடவுள்கள் என்று குறிப்பிடுகின்றோம். இதை ஓர் இந்து கேட்டால் அதைக் குறையாக எடுத்துக் கொள்வதில்லை. காரணம் அவர்களுடைய நம்பிக்கையைத் தான் அப்படிச் சொல்கிறோம்.

இதுபோல் கிரேக்க ஆண் கடவுள் (God) பெண் கடவுள் (ஏர்க்க்ங்ள்ள்) ஆகியோரை எடுத்துக் கொண்டால் குடித்து விட்டுக் கும்மாளம் போடும் ஏர்க்களும் இருக்கின்றனர். இவ்வளவு ஏன்? சதி செய்து, சூழ்ச்சி வலைகள் பின்னி சூட்சுமமாக அடுத்த Godகளின் மனைவிகளைக் கடத்திக் கொண்டு போகும் Godகளும் இருக்கின்றனர்.

God Father.

ஒரு குழந்தையை ஒருவர் எடுத்து வளர்க்கின்றார் என்றால் அவருக்குத் தமிழில் வளர்ப்புத் தந்தை – பொறுப்பாளர் என்று குறிப்பிடுவோம். இதுபோல் ஒரு குழந்தையை ஒரு பெண் எடுத்து வளர்த்தால் வளர்ப்புத் தாய் என்று சொல்வோம். இதுபோல் அந்தக் குழந்தைக்கு வளர்ப்புப் பிள்ளை, வளர்ப்பு மகன் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் ஆங்கிலத்தில் இதற்கு ஏர்க் எஹற்ட்ங்ழ், ஏர்க் ஙர்ற்ட்ங்ழ், ஏர்க் ஈட்ண்ப்க் என இதற்கும் கடவுளை இழுத்து விடுகின்றனர்.

Tin – God.

இல்லாத தகுதிகளை இருப்பதாகக் காட்டிக் கொள்வோருக்கு தமிழில் பந்தா பேர்வழி என்போம். இதற்கு ஆங்கிலத்தில் கடவுளைத் தான் வம்புக்கு இழுக்கின்றனர். இந்தப் போலிப் பேர்வழிகளை Tin – God என்று அழைக்கின்றனர்.

இதுவே கடவுள் தன்மையில் பல தரங்கள் இருப்பதாக, கடவுளில் பல கூறுகள் இருப்பதாக உணர்த்துகின்றது. இதே வார்த்தைக்குப் பின்னால் ஒரு “S’ சேர்த்து, அதாவது ஏர்க்ள் என்றால் கடவுள்கள் என்று பன்மையாக்கி கடவுளுக்கு இணை கற்பிக்கலாம். God என்பதற்குப் பின்னால் dess சேர்த்து விட்டால் கடவுளைப் பெண்ணாக்கி விடலாம்.

God என்பதற்குப் பின்னால் ling என்று சேர்த்து விட்டால் கடவுளுக்கு ஒரு குட்டிக் கடவுளை உருவாக்கி விடலாம். ஆனால் இந்த விளையாட்டுக்களெல்லாம் Allah என்ற வார்த்தையில் அறவே நடக்காது. Allah father, Allah mother, Allah child என்றெல்லாம் சொல்ல முடியாது.

மேற்கத்தியர்கள் கடவுள் தன்மையில் எப்படியொரு காட்டுமிராண்டித்தனமான விளையாட்டை விளையாடுகின்றார்கள் என்று பாருங்கள். கடவுள் என்ற வார்த்தைக்கு ஆக்ஸ்போர்டு அகராதி தரும் பொருளைப் பாருங்கள். கிரேக்கர்களின் கடவுள்களைப் பற்றி அகராதி தரும் பொருள் இதோ:

ஜூபிடர் – வியாழன் – விண் கடவுள்

புளூட்டோ – ஒன்பதாவது கோள் – நரகக் கடவுள்

மார்ஸ் – செவ்வாய் – போர்க் கடவுள்

நெப்டியூன் – ஒரு கோள் – கடல் கடவுள்

சியஸ் – இவை அனைத்திற்கும் தந்தை அல்லது தலைமைக் கடவுள்

அப்போலோ, ஹோரஸ், ஹெர்குலிஸ் என்று கிரேக்கர்களின் கடவுள் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.

ஒரு பெண் புனித மைக்கேலுக்கு ஒரு மெழுகுவர்த்தியும் ஷைத்தானுக்கு ஒரு மெழுகுவர்த்தியும் ஏற்றிக் கொண்டாளாம். சுவனத்திற்குப் போனாலும் ஒரு கூட்டாளி கிடைப்பார்; நரகத்திற்குப் போனாலும் ஒரு கூட்டாளி கிடைப்பார் என்பதற்காக வேண்டி இவ்வாறு செய்தாளாம்.

இந்தப் பெண்ணைப் போன்று இஷ்டத்திற்குக் கடவுள்களைத் தேர்வு செய்கின்ற அளவுக்கு மேற்கத்தியர்களின் நிலை அமைந்துள்ளது.

ஆனால் அல்லாஹ் என்ற பெயரைக் கறைப்படுத்த முடியாது. குறை காண முடியாது. புனித நாயனுக்கு ஏற்ற புனித வார்த்தையாக அமைந்திருக்கின்றது. தனித்த நாயனுக்குரிய தனியொரு பெயராக அமைந்திருக்கின்றது.

அல்லாஹ்வுக்கு அணி சேர்க்கின்ற அழகுப் பெயர்களை திருக்குர்ஆன் தருவதைப் பாருங்கள்.

அவனே அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவன். அவன் அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன்.

அவனே அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. (அவன்) பேரரசன்; தூயவன். நிம்மதியளிப்பவன்; அடைக்கலம் தருபவன்; கண்காணிப்பவன்; மிகைத்தவன்; ஆதிக்கம் செலுத்துபவன்; பெருமைக்குரியவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அல்லாஹ் தூயவன்.

அவனே அல்லாஹ். (அவன்) படைப்பவன்; உருவாக்குபவன்; வடிவமைப்பவன்; அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அவனைத் துதிக்கின்றன. அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

(அல்குர்ஆன் 59:22-24)

அனைத்து பைபிள்களிலும் அல்லாஹ்வின் பெயர்.

படைத்த இறைவனுக்கு அவனது தனித்தன்மையைக் குறிக்கின்ற வகையில் ஒவ்வொரு மொழியிலும் ஒரு பெயரைக் கொடுக்கின்றனர். ஆனால் செமட்டிக் மொழிகளில் அதாவது மோஸே, ஏசு, முஹம்மது ஆகிய தூதர்களின் மொழிகளில் அல்லாஹ் என்று அழகுற அமைந்த வார்த்தையைப் போன்று அமையவில்லை. அல்லாஹ் என்ற இந்த வார்த்தை (அல்லது அதன் வேர்ச் சொல்லாக அமைந்திருக்கும் இலாஹ்) பைபிளின் அனைத்து மொழியாக்கங்களிலும் தனஓக்குரிய இடத்தைப் பிடித்திருக்கின்றது.

உலகத்தில் பேசப்படும் மொழிகளில் 1500 மொழிகளுக்கு மேற்பட்ட மொழிகளில் பைபிளை மொழிபெயர்த்து விட்டதாகக் கிறித்தவ உலகம் மெச்சிக் கொள்கின்றது.

அந்த மொழியாக்கங்களிலெல்லாம் அல்லாஹ் என்ற வார்த்தை நுழைந்து தன்னுடைய ஆளுமையை, அழகை அற்புதமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

மேற்கத்தியர்கள் கூறுவது போன்று இது விவிலிய உண்மை (Gospel Truth). . அப்படியானால் உலகில் வாழும் 120 கோடி கிறித்தவர்களுக்கு இது ஏன் தெரியாமல் போய் விட்டது என்று கேட்கலாம். இதற்குக் காரணம் அவர்களுக்குச் செய்யப்பட்ட மூளைச் சலவை தான்.

அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை; புரிந்து கொள்வதுமில்லை. (மத்தேயு 13:13)

இந்த பைபிள் வசனம் கூறுவது போல் அவர்கள் பார்ப்பதில்லை, செவியுறுவதில்லை, சிந்திப்பதும் இல்லை.

ஏசு உதிர்த்த இனிய வார்த்தைகள்.

சிலுவையில் தொங்கியதாகக் கருதப்படும் ஏசு உதிர்த்த இனிய வார்த்தைகள் இதோ:

பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, “எலோயி, எலோயி, லெமா சபக்தானி?” என்று உரக்கக் கத்தினார். “என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்பது அதற்குப் பொருள். (மாற்கு 15:34)

புனித மார்க்கின் கருத்துப்படி இது எபிரேய மொழியின் மூல, கையெழுத்துப் பிரதியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதாகும். காரணம், மூல நூல்கள் என்றழைக்கப்பட்ட இவ்வேதங்கள் எபிரேய மொழியில் தான் எழுதப்பட்டன.

அதே சமயம் மத்தேயு சொல்வதை சற்றுக் கவனியுங்கள். அவர்கள் யூதர்களை இலக்காகக் கொண்டு பைபிளை எபிரேய மொழியிலேயே எழுதியதாகக் கருதப்படுபவர்.

புனித ஜீரோம் என்பவர் கி.பி. நான்காம், ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறித்தவத் தந்தை ஆவார். இவர் மத்தேயு பற்றிக் குறிப்பிடுவதாவது:

லெவி (கங்ஸ்ண்) என்று அழைக்கப்படக் கூடிய மத்தேயு வரி வசூல் செய்யும் பொது அதிகாரி. அனைத்து நற்செய்தியாளர்களை விடவும் முதன் முதலில் வந்து தூதரானவர். ஏசு கிறிஸ்துவுடைய விவிலியத்தை நம்பிக்கை கொண்ட, விருத்த சேதனம் செய்த யூதர்களின் எபிரேய மொழியிலும் அவர்களது தன்மைக்கு ஒப்பவும் இயற்றினார். உண்மையில் மத்தேயுவின் மொழி உச்சரிப்பு, மார்க்கின் உச்சரிப்பை விட அதிகமாக செமட்டிக் மொழி உச்சரிப்புக்கு ஒத்திருக்கும். இதைப் பின்வரும் வசனத்தை, முன்னால் இடம் பெற்ற வசனத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் புரியும்.

மூன்று மணியளவில் இயேசு, “ஏலி, ஏலி லெமா சபக்தானி?” அதாவது, “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று உரத்த குரலில் கத்தினார். (மத்தேயு 27:46)

ஏலி, ஏலி லெமா சபக்தானி என்ற வார்த்தைகளை தயவு செய்து மனப்பாடம் செய்து கொள்ளுங்கள்.

ஏசு சிலுவையில் அறையப்படும் போது ஜேஹுவா, ஜேஹுவா என்று சொன்னாரா? என்று ஒரு உண்மை கிறித்தவரிடம் கேளுங்கள். இல்லை என்றே பதிலளிப்பார். தந்தையே, தந்தையே என்று சொன்னாரா? என்று கேளுங்கள். அதற்கும் அவர் இல்லை என்றே பதிலளிப்பார். நிச்சயமாக அவரது பிரார்த்தனை இலீ, இலீ – இலாஹ், இலாஹ் என்று தான் அமைந்திருந்தது. ஒரு கண்ணியமிக்க கிறித்தவர் இந்த உண்மையில் உங்களுடன் உடன்படாமல் இருக்க மாட்டார்.

அல்லலூயா.

உங்களுடைய கிறித்தவ நண்பரிடம் அல்லலூயா என்ற வார்த்தையைப் பற்றிக் கேளுங்கள். கிறித்தவர் என்று பெயர் பெற்ற எவரும் இந்த வார்த்தையைத் தெரியாமல் இருக்க மாட்டார். அல்லாஹு அக்பர்; அல்லாஹு அக்பர் என்று முஸ்லிம்கள் தக்பீர் கூறுவது போன்று அவர்கள் அல்லலூயா என்று சொல்வார்கள். அல்லலூயாவின் அர்த்தம் என்ன? இதற்குப் புதிய ஏற்பாட்டின் 27வது புத்தகமான இறுதிப் புத்தகம் திருவெளிப்பாடு (வெளிப்படுத்தின சுவிஷேசம்) செல்வோம்.

ஏசுவுடைய மாணவர் ஒரு காட்சியைக் காண்கிறார். அதை இப்போது பார்ப்போம்.

1. இதன்பின் பெருந்திரளான மக்களின் கூச்சல் போன்ற ஒலி விண்ணகத்தில் எழக் கேட்டேன். அது பின்வருமாறு முழங்கியது; “அல்லேலூயா! மீட்பும் மாட்சியும் வல்லமையும் நம் கடவுளுக்கே உரியன.

2 ஏனெனில் அவருடைய தீர்ப்புகள் உண்மை உள்ளவை, நீதியானவை. தன் பரத்தைமையால் மண்ணுலகை அழிவுக்குட்படுத்திய பேர்போன அந்த விலைமகளுக்கு அவர் தீர்ப்பு வழங்கினார்; தம் பணியாளர்களைக் கொன்றதற்காக அவளைப் பழிவாங்கினார்.”

3 மீண்டும் அந்த மக்கள், “அல்லேலூயா! அந்த நகர் நடுவிலிருந்து புகை என்றென்றும் மேலே எழுந்த வண்ணம் உள்ளது” என்றார்கள்.

4 அந்த இருபத்து நான்கு மூப்பர்களும் நான்கு உயிர்களும் அரியணையில் வீற்றிருந்த கடவுள்முன் விழுந்து வணங்கி, “ஆமென், அல்லேலூயா” என்று பாடினார்கள்.

5 அரியணையிலிருந்து எழுந்த ஒரு குரல், “கடவுளின் பணியாளர்களே, அவருக்கு அஞ்சி நடப்பவர்களே, சிறியோர்களே, பெரியோர்களே, நீங்கள் அனைவரும் நம் கடவுளைப் புகழுங்கள்” என்று ஒலித்தது.

6 பின்னர் பெருந்திரளான மக்களின் கூச்சல்போலும் பெரும் வெள்ளத்தின் இரைச்சல் போலும் பேரிடி முழக்கம் போலும் எழுந்த போரொலியைக் கேட்டேன். அது சொன்னது; “அல்லேலூயா! நம் கடவுளாகிய ஆண்டவர், எல்லாம் வல்லவர்; அவர் ஆட்சி செலுத்துகின்றார்.

7 எனவே மகிழ்வோம், பேருவகையுடன் அவரைப் போற்றிப் புகழ்வோம். ஏனெனில் ஆட்டுக்குட்டியின் திருமண விழா வந்துவிட்டது. மணமகளும் விழாவுக்கு ஆயத்தமாய் இருக்கிறார்.

8 மணமகள் அணியுமாறு பளபளப்பான, தூய்மையான, விலையுயர்ந்த மெல்லிய ஆடை அவருக்கு அளிக்கப்பட்டது. அந்த ஆடை இறைமக்களின் நீதிச் செயல்களே.”

9 அந்த வானதூதர் என்னிடம், “ஆட்டுக்குட்டியின் திருமண விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்’ என எழுது” என்று கூறினார். தொடர்ந்து, “இவை கடவுளின் உண்மையுள்ள சொற்கள்” என்று சொன்னார்.

10 நான் வானதூதரை வணங்கும் பொருட்டு அவரது காலடியில் விழுந்தேன். ஆனால் அவரோ என்னிடம், “வேண்டாம். இயேசுவுக்குச் சான்று பகர்ந்த உனக்கும் உன் உடன்பிறப்புகளுக்கும் நான் உடன்பணியாளனே. கடவுளை மட்டுமே நீ வணங்க வேண்டும்” என்றார். ஏனெனில் இயேசு பகர்ந்த சான்றே இறைவாக்குகளுக்கு உயிர்மூச்சு.

(திருவெளிப்பாடு 19:1-10)

இதற்கு அரபி பைபிளில் அமைந்த வார்த்தை:

அரபி பைபிளில் இடம் பெறும் சொற்களுக்காக திருச்சபை வழக்குச் சொற்கள் அகராதி என்று ஓர் அகராதியை இணைத்திருக்கின்றார்கள்.

அதில் இதற்குப் பொருள் கூறும் போது, “இது எபிரேய வார்த்தை. இவ்வாறு தான் (இவ்விரு விதமாகத் தான்) அனைத்து மொழிகளிலும் மொழியப்படுகின்றது. அதாவது “ஹல்லிலூ (தூய்மைப்படுத்துங்கள்) யாஹுவா (யாஹுவாவை)’ அதாவது இறைவனைத் தூய்மைப்படுத்துங்கள்; அல்லது அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள் என்பது இதன் பொருளாகும்” என்று இந்த அகராதி குறிப்பிடுகின்றது.

இதிலிருந்து நாம் தெளிவாக விளங்குவது, அல்லலூயா என்பதே அல்லாஹ்வைத் துதிப்பது தான்.

இங்கே இந்த அத்தியாயத்தின் அரபியாக்கத்தை அரபிப் பிரதியிலிருந்து தருகிறோம்.

தமிழ் பைபிளில் கடவுள், கர்த்தர் என்ற வார்த்தைகள் வந்த இடத்தில் அல்லாஹ் என்ற வார்த்தை வருகின்றது. இதில் நான்காவது வசனத்தில் அரபியில் அர்ஷ் என்ற வார்த்தை இடம்பெறுகின்றது. இதற்குத் தமிழ் மொழி பெயர்ப்புகளில் சிம்மாசனம், அரியணை என்று அர்த்தம் செய்யப்பட்டிருக்கின்றது. அரியணையில், சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கின்ற… என்ற வாசகம் அமையப் பெற்றிருக்கின்றது.

அவனே வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். அளவற்ற அருளாளனைப் பற்றி, அறிந்தவரிடம் கேட்பீராக! (திருக்குர்ஆன் 25:59)

அல்லாஹ் அர்ஷில் அமர்ந்திருக்கின்றான் என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகின்றது. குர்ஆனில் இதுபோன்ற அதிகமான வசனங்கள் இடம் பெற்றாலும் இங்கு உதாரணத்திற்காக ஒன்றே ஒன்றை மட்டும் எடுத்துக் காட்டியுள்ளோம்.

இவையெல்லாம் அல்லாஹ்வை மட்டும் தான் சந்தேகமில்லாமல் குறிப்பிடுகின்றன. ஒருபோதும் ஏசுவைக் குறிக்காது. அவ்வாறு குறிக்காது என்பதற்கு இதிலுள்ள 10வது வசனமும் ஒரு சான்றாகும்.

யோனா வானவரின் காலில் விழும் போது, “நீ அல்லாஹ்விற்கு மட்டும் தான் சிரம் பணிய வேண்டும்; நான் உன்னுடனும் உனது சகோதரர்களுடனும் உள்ள ஓர் அடிமை தான்” (அதாவது, அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்று) ஏசு அளித்த சான்று தான் தூதுச் செய்தியின் உயிர் மூச்சு என்று இந்த 10வது வசனமும் குறிப்பிடுகின்றது.

இதுவும் அழுத்தம் திருத்தமாக, ஆணித்தரமாக, அர்ஷில் இருக்கும் அல்லாஹ்வைத் தான் சந்தேகத்திற்கு இடமின்றி குறிப்பிடுகின்றது. இதன் அடிப்படையில் கிறித்தவ நண்பர்களே! அல்லலூயா என்று நீங்கள் அழைப்பது உங்களையும் எங்களையும் படைத்த உண்மையான அல்லாஹ்வைத் தான்.

அல்குர்ஆன் 3:64 வசனத்தின்படி உண்மையான அல்லாஹ்வை வணங்க வாருங்கள் என்று அன்புடன் அழைக்கின்றோம்.

குறிப்பு: அஹ்மத் தீதாத் அவர்கள், “அல்லலூயாவில் “அல்ல’ என்பது அல்லாஹ்வைக் குறிக்கின்றது; யா என்பது ஓர் ஆச்சரியக் குறி” என்று குறிப்பிட்டு விட்டு அந்த “யா’வை முன்னால் கொண்டு வந்து, “யா அல்லாஹ்’ என்பது தான் அல்லலூயாவின் பொருள் என்று தெரிவிக்கின்றார்கள்.

ஆனால் “யா’ என்பது அரபியிலும் எபிரேயுவிலும் முன்னால் தான் இடம் பெறுகின்றது என்று அஹ்மத் தீதாத் அவர்களே மற்றொரு இடத்தில் குறிப்பிடுகின்றார். அல்லலூயாவில் அது பின்னால் இடம் பெறுகின்றது. இதை எப்படி முன்னால் கொண்டு வர முடியும் என்ற விளக்கத்தை அவர் தரவில்லை. அத்துடன் அரபியில் “யா’ என்பது அழைப்புக் குறியாகத் தான் வருகின்றது. ஆச்சரியக் குறியாக வருவதில்லை.

எனவே அல்லலூயாவிற்கு அரபி பைபிள் கொடுக்கின்ற விளக்கம் தான், “ஹல்லிலூ (தூய்மைப்படுத்துங்கள்) யாஹுவா (யாஹுவாவை)” அதாவது “இறைவனைத் தூய்மைப்படுத்துங்கள்” என்ற விளக்கம் தான் ஓரளவுக்குப் பொருத்தமாக இருக்கின்றது என்பதால் அந்த விளக்கமே இங்கே அளிக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடவுள் தந்தை.

குர்ஆனிலும் பைபிளிலும் கடவுளுக்கென்று பொதுவான பெயர்கள் இருக்கின்றன. ஆனால் குர்ஆனில் அல்லாஹ்வுக்கென்று அழகிய பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன. அந்தப் பெயர்களில் “அப்’ – தந்தை என்ற வார்த்தை அறவே இடம்பெறவில்லை. ஆனால் இதற்கு மாற்றமாக “ரப்’ என்ற வார்த்தை மிக அதிகமாக இடம்பெற்றுள்ளது. இதற்கு இறைவன், எஜமான் என்று பொருள்.

குர்ஆனில் தந்தை என்ற வார்த்தை இடம் பெறாததற்கு ஒரே காரணம், கிறித்தவர்கள் வானத்தில் உள்ள தந்தைக்கு மகனாக ஏசுவை ஆக்கியது தான். இது புனித மிக்க கடவுளின் தரத்தை பாலியல் தேட்டத்திற்கு உட்பட்ட மனித, மிருக இனங்களின் தரத்திற்கு இறக்கும் அநியாயமும் அக்கிரமும் ஆகும்.

குர்ஆன் கூறும் கடவுள் கொள்கை.

“வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு பொறுப்பாளனை ஏற்படுத்திக் கொள்வேனா? அவனே உணவளிக்கிறான். அவன் உணவளிக்கப்படுவதில்லை” என்று கூறுவீராக! “கட்டுப்பட்டு நடப்போரில் முதலாமவனாக இருக்கு மாறும் இணை கற்பித்தோரில் ஒருவனாக ஆகிவிடக்கூôது என்றும் கட்டளையிடப் பட்டுள்ளேன்” எனவும் கூறுவீராக! (அல்குர்ஆன் 6:14)

உணவு சாப்பிடுகின்ற எவரும் எவனும் ஆபசஆபமஆக, கடவுளாக இருக்க முடியாது. இந்த ஓர் உரை கல்லை வைத்து மனிதக் கடவுளை வணங்குகின்ற கோடிக்கணக்கான படித்த, பண்டித அறிவிழந்த ஜென்மங்களை மீட்டெடுத்து நரகத்திலிருந்து காத்து விடலாம்.

இந்த அடிப்படையில் கடவுளை ஆபசஆபம என்று கூறும் தெற்கு ஆஸ்திரேலியாவின் பூர்வீகக் குடிமக்கள், இனத்தால் பழங்குடியினராக இருந்தாலும் கடவுள் பற்றிய தங்களது சரியான சிந்தனையினால் கிழக்கத்திய, மேற்கத்திய நாகரீக (?) மக்களை விட விஞ்சி விட்டார்கள் என்பது தான் உண்மை.

காதலை பரிமாறும் சாக்லேட் தருணங்கள்!



காதல் என்ற வசந்தம் அனைவரின் வாழ்க்கையிலும் வருவதில்லை. ஆசிர்வதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே காதல் வாய்க்கும். காதல் வயப்பட்டிருப்பவர்கள் அனைவரும் இறகு முளைத்தது போல சதா வானத்தில் மிதந்து கொண்டிருப்பார்கள்.

காதலனிடம் இருந்து சின்ன எஸ்.எம்.எஸ் வந்தாலே அன்றைய சந்திப்பை பற்றி அந்த நொடியில் இருந்தே கனவு காண தொடங்கிவிடுவார்கள். காதல் எல்லோருக்குமே வாய்ப்பதில்லை. ஆனால் குறிஞ்சிப் பூவாய் கிடைத்த காதலை எத்தனை பேர் வெற்றிகரமாக தக்கவைத்துக் கொண்டிருக்கின்றனர் என்றால் 50 சதவிகிதம் பேர் இல்லை என்று தான் கூறுவர்.

படிக்கும் போது தோன்றிய காதல் பணிச்சூழல், பொருளாதார சூழ்நிலைகள் போன்ற காரணங்களினால் படிப்படியாக மறைந்து போவதும் உண்டு. அப்படியே வெற்றி பெற்று அது திருமணம் வரை கணிந்தாலும் நாளடைவில் கசந்து காதல் காணமல் போய்விடும். எனவே காதலித்து திருமணம் செய்தவர்கள் கடைசி வரை காதலை வெற்றிகரமாக தக்கவைத்துக் கொள்ள வல்லுநர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்கள்:

சந்தோச பரிசுகள்

திருமணம் முடிந்த உடன் முதலில் செய்ய வேண்டியது இருவரின் குடும்பத்தைப் பற்றியும், வருங்காலத்தைப்பற்றியும் பேசவேண்டும். இருவரும் இணைந்து எதிர்காலத்தை பற்றி பேசுவதன் மூலம் நம்பிக்கை அதிகரிக்கும். காதலும் உறுதிப்படும்.

காதலிக்கும் போது என்னென்னவோ பரிசுகள் கொடுத்திருக்கலாம் திருமணத்திற்குப் பிறகும் அது தொடரவேண்டும். பிறந்தநாள், திருமணநாள், காதலர் தினம் என சிறப்பு நாட்களில் மட்டும்தான் பரிசு கொடுக்க வேண்டும் என்பதில்லை. துணையை குஷிப்படுத்த அடிக்கடி சர்ப்ரைஸ் பரிசு கொடுங்கள்.

காதலிக்கு நீங்கள் வழங்கும் மிகச்சிறந்த பரிசுப்பொருள் உங்களின் பரிசுத்தமான அன்புதான். எனவே இதயப்பூர்வமாக உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்.

நகைச்சுவை உணர்வு

பேசுவது நீங்களாக மட்டுமே இல்லாமல் கேட்பவராகவும் இருங்கள். உங்கள் காதலியை அதிகம் பேச விடுவது காதலுக்கு அதிக நன்மை பயக்கும். எப்பொழுதும் பிறரிடம் இருந்து மட்டுமே எதிர்பார்த்து கொண்டிருக்காதீர்கள். நீங்கள் கொடுப்பவராகவும் இருங்கள்.

உம்மென்று இருக்க வேண்டாம். அடிக்கடி சிரித்து பேசி உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக்கொள்ளுங்கள். அதற்காக ஜோக்கடிக்கிறேன் என்ற பெயரில் கடித்து கஷ்டப்படுத்த வேண்டாம்.

சாக்லேட் அவசியம்

விடுமுறை தினம் என்றாலே தூங்கிதான் பொழுதை கழிக்க வேண்டும் என்பதில்லை. திட்டமிட்டு எங்காவது சென்று வாருங்கள். காதலை புத்துணர்வாக்க இது சிறந்த வழி.

எப்பொழுதும் கையில் சாக்லேட் வைத்திருங்கள். அவசரகாலங்களில் ஆபத்பாந்தவனாக உதவுவது அந்த சாக்லேட்தான். சண்டையின் போது சமாதானத் தூதுவனாக உதவுவதும் அந்த சாக்லேட்தான்.

வாழ்க்கைத் துணையை உடல் ரீதியாக பார்க்காதீர்கள். உணர்வு ரீதியாக பார்ப்பதே காதலை வலுப்படுத்தும். அடிக்கடி பாராட்டுங்கள். அது அன்பை ஆழப்படுத்தும். எந்த சந்தர்ப்பத்திலும் மட்டம் தட்டி பேசாதீர்கள். முக்கியமாக உங்கள் துணையைப் பற்றி நட்பு வட்டாரங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

விட்டுக்கொடுப்பதில் தவறில்லை


வார விடுமுறையை கொண்டாடுங்கள், அன்பை பரிமாறுங்கள். அது இருவருக்குமிடையேயான காதலை வளர்க்கும். மனைவியோ, காதலியோ பேசும் முன்பு யோசித்து பேசவும், எந்த ஒரு வார்த்தையும் காதலுக்கு எதிராக திரும்பிவிடக்கூடாது. அலுவலகத்திற்கு இருக்கும் சமயங்களில் கூட ஐ லவ் யூ எஸ்.எம்.எஸ் அணுப்பலாம். அது அலுவலக மன உளைச்சலை சற்றே தணிக்கும். உங்கள் மீதான அன்பை அதிகரிக்கும்.

இருவருக்கும் பிரச்சினை என்றால் யார் விட்டுக்கொடுப்பது என்பதில் ஈகோ வேண்டாம். பிரச்சினையை தீர்க்க விட்டுக்கொடுப்பவர் நீங்களாக இருங்கள். பிரச்சினை தோன்றிய இடம் காணமல் போய்விடும்.

கோபம் வந்தா உடனே அடிச்சிறாதீங்க!



தம்பதியரிடையே சின்ன சின்ன சண்டைகள் ஏற்படுவது இயல்பானதுதான். ஊடல்கள் இருந்தால்தான் கூடல்கள் சுகமாக இருக்கும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். சண்டைக்கான வாய்ப்பு ஏற்படும்போதே சமாதானத்திற்கான வழியையும் தேடவேண்டும். அப்பொழுதுதான் இல்லறம் நல்லறமாகும்.

இடையில பேசாதீங்க

குடும்பத்தில் எப்பவுமே சண்டை என்று ஆரம்பித்தால் குரல் உயர்த்திப் பேசுவதை யாராவது ஒருவர் நிறுத்தவேண்டும். இடைமறித்துப் பேசுவதையும் கட்டுப்படுத்தவேண்டும். அப்பொழுதுதான் பிரச்சினை பெரிதாகாமல் இருக்கும்.

தவறை ஒப்புக்கொள்ளுங்கள்

ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றம் சுமத்தாதீர்கள்.யார் மீது தவறு என்றாலும் அதை ஒப்புங்கள். அப்பொழுதுதான் குடும்பத்தில் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

அடிக்க கை நீட்டாதீர்கள்

எந்த சூழ்நிலையிலும் துணையை அடிக்க கை நீட்டாதீர்கள். அப்புறம் பிரச்சினையை தீர்க்கவே முடியாத அளவிற்கு அது தொடர்கதையாகிவிடும். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை நேரடியாக தெரிவித்துவிடுங்கள். பூடகமாக பேசுவதுதான் பிரச்சினைக்கு முக்கிய காரணமாகிவிடுகிறது.

கோபத்திற்கு முற்றுப்புள்ளி

எந்த பிரச்சினை என்றாலும் அதற்கு சமாதான பேச்சு மூலம் தீர்வு காண முயலுங்கள். பெரும்பாலான குடும்பங்களில் தம்பதியர் ஒருவருக்கொருவர் வெளிப்படையாக பேசிக்கொள்ளாததே பிரச்சினைக்கு முக்கிய காரணமாகிவிடுகிறது. எனவே எந்த பிரச்சினை என்றாலும் ஒருவருக்கொருவர் பேசி பிரச்சினையை தீர்க்க முயலுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

கோபம் ஏன் ஏற்படுகின்றது?

உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே ஆகும். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) - புகாரி) (Volume 8, Book 73, Number 135)

"ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும்" என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள்.

கோபம் ஏன் ஏற்படுகின்றது?

கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை  காரணமாக உண்டாகிறது.

    *

      நாம் சொல்வதை (நம்மைவிட எளியவர்கள் என்று நாம் நினைக்கும்) மற்றவர்கள்  மதிக்காத போது...
    *

      நம்முடைய பிரச்சனைகளை உரியவர்கள் உடனே நிவர்த்தி செய்யாத போது...
    *

      நாம் சொல்வது (தவறாகவே இருந்தாலும்) தவறு என்று பலர் முன்னிலையில் விமர்சிக்கப்படும் போது...
    *

      எதிர்பார்த்த மரியாதை கிடைக்காத போது ...

இப்படியே பல காரணங்கள் உள்ளன.

ஒருவன் நம்மைப் பார்த்து "கழுதை" என்று திட்டும்போது நாம் "குரங்கு" என்று பதிலுக்குத் திட்டினால் அந்தச் செயல்தான் reaction ஆகும்.

ஆக உடனே சிந்திக்காமல் ஏற்படும் ஒரு வித அதிருப்தியான வெளிப்பாடு தான் கோபம்.  அல்லது நம்மை நாமே  தாழ்த்திக் கொண்டு சிந்திக்கும் போது ஏற்படும் எதிர் விளைவு  கோபமாகும்.

கோபம் தன்னையே அழித்து விடும்

மனிதத்துவம் என்பது சமூகத்துடன் ஒன்றி வாழ்வதாகும். ஒருவருக்கொருவர் அனுசரித்து - பாராட்டி - உதவி செய்து  வாழ்வதாகும். இதற்கு பொறுமை இன்றியமையாததாகும்.

ஒரு மனிதனின் வெற்றிக்கு தடையாத இருப்பதில் மிக முக்கியமானது கோபமாகும்.

கோபம் கொள்வதால் நமது சிந்தனை,  கவனம் போன்றன சிதறடிக்கப்படுகின்றன. சரியான சமயத்தில் செய்ய வேண்டிய செயல்கள் இதனால் பாதிக்படுகின்றன. நம்மை சுற்றி இருப்பவர்களைப் பற்றியும் சூழ்நிலையையும் உணராது நமது செயல்கள் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. அவற்றுள்...

    *

      வாழ்வின் சந்தோசத்தை பறித்து விடும். (கோபமும் சந்தோசமும் ஒன்றுக்கொன்று எதிரானவைகள்)
    *

      திருமணம் மற்றுமுள்ள தொடர்புகளை அழித்து விடும்.
    *

      தொழிலை முடக்கி விடும். காரணம் தொழில் என்பது தொடர்புகளுடன் சம்பந்தப்பட்டது.
    *

      மனஇருக்கத்தை ஏற்படுத்தி இருதய வியாதிக்கு வழிவகுக்கும்.
    *

      முறையாக சிந்தித்து செயல்படுவதை தடுத்து நமது செயல்களை தவறானதாக்கி விடுகின்றது.

கோபம், மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்து விடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றார்கள. 55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இருதய வியாதிகளால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு ஆகும். ஆனால் 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிரிழப்பு ஆபத்து 6 மடங்காக உயர்கிறது.

    *

      கோபமானது இதய ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்புகளை திடீரென சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்படும். இது  மாரடைப்பில் விட்டு விடும்.
    *

      இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா எனப்படும் நிலையற்ற நெஞ்சுவலி போன்ற சிக்கல்களும் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் தான்.
    *

      மூளையை தாக்கும் பக்கவாதத்துக்கு கூட கோபம் காரணமாக அமைவதுண்டு.

ஆக, கோபம் உங்களை அழிப்பதற்கு முன் நீங்கள் அதை அழித்து விட வேண்டியது முக்கியம்.

கோபத்தைக் கட்டுப்படுத்துதல்:

கோபம் வரும்போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை இழக்கிறான். இதனால் தான், கோபத்தில் கொந்தளிப்பவர்களுக்கு வியர்வை, நடுக்கம், மூக்கு விடைத்துக் கொள்தல், தூக்கமின்மை, ஓய்வின்மை, நெஞ்சுவலி, மாரடைப்பு, ரத்த அழுத்தம் திடீரென அதிகரித்தல், எரிச்சல், தசைகள் கெட்டித்தன்மை ஆவது, தலைவலி போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.


கோபத்தை குறைக்க சில வழிகள்:

   1.கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள். மற்றவர்களையும் அன்போடு பாருங்கள். நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை சிந்தியுங்கள்.
   2.

      கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள்.
   3.

      அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருங்கள்
   4.

      நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்.
   5.

      செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.
   6.

      கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். மெளனமாக இருங்கள்
   7.

      நமது கெளரவம் பாதிக்கப்பட்டதை மறந்து மற்றவர்களை விட நமக்கு இறைவன் அளித்த வாய்ப்புகளை நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
   8.

      எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.
   9.

      சில நிமிடத்திற்கு உங்களது சூழ்நிலையை மாற்றுங்கள். அமர்ந்திருந்தால் எழுந்து நடங்கள். நடந்து கொண்டிருந்தால் சற்று நின்று கொள்ளுங்கள்.
  10.

      கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.
  11.

      முகத்தை கழுவுங்கள். அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள்.

நீண்ட நாள் சந்தோசமாக வாழ வேண்டுமானால் நிச்சயம் நாம் கோபத்தை குறைத்தாக வேண்டும்.
 

Monday, June 4, 2012

‘அவர்கள்’ குழந்தைகள்!



தன்னைச் சுற்றியுள்ள உண்மையான உலகத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் ‘அவர்களைப்’ பற்றி எப்போதாவது நீங்கள் யோசித்துப் பார்த்ததுண்டா?

ஓன்றில் ‘அவர்களை’ பரிகாசத்துக்குரியவர்களாக நம்மில் பலர் பார்க்கிறோம். அல்லது பரிதாபத்துக்குரியவர்களாக எண்ணிக் கொண்டிருக்கிறோம்!

ஆனால், நம்மில் எத்தனைபேர் ‘அவர்களை’ – நமது சக ஜீவன்களாக நினைத்துப் பழகியிருக்கின்றோம்?

‘அவர்கள்’ தீண்டத் தகாதவர்களா? ‘அவர்கள்’ பாவப்பட்டவர்களா? இல்லையே! பிறகேன் ‘அவர்கள்’ நமது குடும்பத்தில் இருந்தால் அவமானமாகவும், வெளியில் இருந்தால் அலட்சியமாகவும் கருதுகின்றோம்!

நன்றாக யோசித்துப் பார்த்தால், ‘அவர்கள்’ பல சந்தர்பங்களில் குழந்தைகள் போலவே நடந்து கொள்கின்றார்கள்!

ஆனாலும், ஒரு குழந்தைக்குக் கொடுக்கும் சமூக அந்தஷ்தைக் கூட, நம்மில் பலர் ‘அவர்களுக்கு’க் கொடுப்பதில்லை!

‘அவர்கள்’, ‘அவர்கள்’ என்று நாம் மேலே கூறும் அவர்கள் – யார் என்றா கேட்கிறீர்கள்?

அவர்கள்தான் உளநோயாளர்கள்!

இவர்களை இழிவு படுத்தும் கீழ்நிலைச் சொற்கள் – நமது புழக்கத்தில் இருக்கின்றன. ஆனாலும் – இவர்களை உளநோயாளர்கள் என்றுதான் மருத்துவம் அழைக்கிறது.

உடலில் ஏற்படும் சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம் போல் – உளநோயும் ஒரு வியாதிதான் என்று நம்மில் பலர் புரிந்துகொள்வதில்லை!

இன்று உலக உளநல தினமாகும்! ‘நாட்பட்ட உளநோய்களும், குடும்பங்களின் பங்களிப்பும்’ எனும் தொனியை அடிப்படையாகக் கொண்டு இந்த வருடத்துக்கான இன்றைய உளநல தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

நமது சமூகத்தில் அநேகமாக, நாட்பட்ட உளநோயாளர்கள் அவர்களின் குடும்பத்தவர்களால் கைவிடப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். அதனால், குறித்த உளநோயாளி மேலும் மேலும் நோய்த் தாக்கத்துக்குள்ளாகி விடுகின்றார்.

உளநோயாளர்கள் குறித்து சமூக மட்டத்தில் மட்டுமல்ல, சர்வதேச மட்டத்தில் கூட, பெரிதாக அக்கறை செலுத்தப்படுவதில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்!

உதாரணமாக, உலகில் 14 வீதமானோர் ஏதோ ஒருவகையில் உளநோய்க்கு உள்ளாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆனாலும், உலகிலுள்ள 40 வீதமான நாடுகளில் உளநோய்க்கான வைத்தியக் கோட்பாடுகளும், 20 வீதமான நாடுகளில் உளநல வைத்தியம் தொடர்பில் சட்டங்கள்  எதுவுமில்லை என்பது அதிர்ச்சிகரமானதொரு தகவலாகும்.

இலங்கையிலும் உளநோய் குறித்த போதுமான விழிப்புணர்வுகளும், சுகாதாரச் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவில்லை!

இலங்கையின் மொத்தச் சனத்தொலைகயில் 03 வீதமானோர் ஏதோவொரு உளநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. ஆனால், இலங்கையில் உளநோய் தொடர்பான மருத்துவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவுள்ளது. 05 லட்சம் பேருக்கு 01 உளநோய் மருத்துவர் எனும் விகிதத்திலேயே இலங்கையில் உளநோய் சிகிச்சைக்கான மருத்துவர்கள் இருக்கின்றனர்.

இதேவேளை, உலகின் வேறுசில நாடுகளின் நிலை மிகவும் மோசமானதாகவுள்ளது. உதாரணமாக, தன்சானியாவில் உளநோய் தொடர்பான 06 அரசாங்க வைத்தியர்களே முழு நாட்டுக்குமாக உள்ளனர். கானாவில் 04 உளநோய் வைத்தியர்கள்தான் உள்ளதாகக் கூறப்படுகிறது. லாஓஸின் நிலை இதை விடப் பரிதாபம்ளூ அங்கு உளநோய் தொடர்பில் சிகிச்சையளிப்பதற்கு 02 வைத்தியர்கள்தான் உள்ளனராம்!

உளநோய் தொடர்பில், முழு உலகமும் இப்படித்தான் பாராமுகமாகவே இன்னும் இருக்கிறது.

உலகின் மொத்தச் சனத்தொகையில் மூன்றிலொரு பகுதியினர் வாழுகின்ற உலக நாடுகள், தமது சுகாதாரச் செலவீனங்களில் ஒரு வீதத்துக்கும் குறைவான தொகையினைத்தான் உலநல மருத்துவத்துக்குச் செலவிடுவதாக அறிக்கையொன்று கூறுகிறது.

ஆக, இந்த புள்ளிவிபரங்கள் – அறிக்கைகளையெல்லாம் வைத்துப் பார்க்கின்றபோது, உளநோயாளர் தொடர்பிலான எமது பார்வையும், கவனமும் மிகவும் கீழ் மட்டத்திலேயே இன்னும் இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

எனவே, தனி நபரில் தொடங்கி – சர்வதேசம் வரை, உளநோயாளர் குறித்த பார்வையும், செயற்பாடுகளும் மிகவும் பலவீனமானதாகவே இருக்கின்றன. அதனால், அவற்றினை மீள் பரிசீலனைக்குட்படுத்த வேண்டியிருக்கிறது.

உளநோயாளர்கள் மிகவும் சிரத்தையோடும், அர்ப்பணிப்போடும் கவனிக்கப்பட வேண்டியவர்கள். நமது பார்வையிலிருந்து இவர்கள் தவறும் போது, அவர்கள் தம்மைத் தாமே ஆபத்துக்குள் சிக்க வைத்துக் கொள்வார்கள்.

உதாரணமாக, இலங்கையில் தற்கொலை செய்து கொள்பவர்களில் 50 முதல் 60 வீதமானோர் மன அழுத்தத்துக்கு உள்ளானவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. மன அழுத்தம் என்பது உளநோயின் ஒருவகை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. அந்தவகையில், வருடமொன்றுக்கு இலங்கையில் சுமார் 06 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். 01 லட்சம் பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

எனவே, உளநோயாளர்கள் எப்பொழுதும் யாரோ ஒருவரின் கண்காணிப்புக்குள் இருக்க வேண்டிது அவசியமாகும். ஆனால், இந்தக் கண்காணிப்பு பெரும்பாலான உளநோயாளர்களுக்குக் கிடைப்பதேயில்லை!

இலங்கையில் உளநோய் அதிகரித்துச் செல்வதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கின்றது.

உளநோயாளர்களுக்கென இலங்கையில் நிறுவப்பட்டுள்ள பெரிய வைத்தியசாலையான அங்கொட மனநல வைத்திய நிலையத்தில் கடந்த வருடம் மட்டும் 08 ஆயிரத்து 29 உளநோயாளர்கள் அனுமதிக்கப்பட்டதாகவும், இவ்வருடம் கிட்டத்தட்ட 07 ஆயிம் பேர் அனுமதி பெற்றதாகவும் அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜெயான் மென்டில் தெரிவிக்கின்றார்.

எனவே, உளநோய் மற்றும் உளநோயாளர் குறித்து நாமும், தேசமும் மிக அவதானத்துடன் செயற்படுதல் வேண்டும்.

உதாரணமாக உளநோயின் ஒரு வகையான மன அழுத்தத்துக்கு பிரதான காரணங்களாக பின்வருவனவற்றை மருத்துவ உலகம் குறிப்பிடுகின்றது.
•    வறுமை
•    சமூக அங்கீகாரமின்மை மற்றும் கல்வியறிவின்மை
•    வன்முறைக்கு ஆளாகுதல்
•    தனிமைப்படுதல் மற்றும் விவாகரத்து (இதனால் ஆண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்)
•    நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டிருத்தல்

எவ்வாறாயினும், ஆண்களை விடவும் – பெண்கள் 02, 03 மடங்கு அதிகமாக மன அழுத்தத்துக்கு உள்ளாவதாகக் கூறப்படுகிறது.

இலங்கையில், உளநோய் அதிகரித்துச் செல்வதற்கு இங்கு ஏற்பட்ட சுனாமி மற்றும் யுத்த அழிவுகள் பிரதான காரணங்களகக் குறிப்பிடப்படுகின்றன.

இறுதி யுத்தத்தின் போது, தமது உடனிருந்தவர்களும், குடும்ப அங்கத்தவர்களும் கோரமாகச் சிதறி வெடித்து இறந்துபோனதைக் கண்ட பலர் – இன்று உளநோயாளிகளாக மாறிப்போயுள்ளனர்.

சுனாமியின்போது, தமது அன்புக்குரியவர்களை கண்ணெதிரில் கடலுக்குப் பலிகொடுத்த நிகழ்வினை மறக்க முடியாத பலர் – இன்று உளநோயாளர்களாக நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இவர்கள் பற்றி, நம்மில் எத்தனைபேர் ஒரு கணமேனும் நேரமொதுக்கிச்  சிந்தித்திருக்கின்றோம்?

எனவே, உலக உளநல தினமான இன்றிலிருந்தாவது, உளநோயாளர்கள் குறித்து நமது பார்வையினை உயர்ந்த நிலையுடையதாக மாற்றிக் கொள்வதோடு, அவர்களுக்கு முடியுமான வரை உதவுவேன் என்கிற உறுதியை நமக்குள் எடுத்துக் கொள்வோம்.

1992 ஆம் ஆண்டு உலக உளச் சுகாதார சம்மேளனத்தின் வேண்டுகோளுக்கிணங்க, ‘உலக உளநல தினம்’ முதன்முதலாக அனுஷ்டிக்கப்பட்டது.

உளநலச் சுகாதாரக் கல்வி, உலநலம் தொடர்பான விழிப்புணர்வு, உளநலம் எனும் விடயத்துக்காக ஓங்கிக் குரல் கொடுத்தல் ஆகியவைகளை முன்னிறுத்தியே ‘உலக உளநல தினம்’ பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்தத் தினத்தை அனுஷ்டிக்கத் தொடங்கி 18 வருடங்கள் ஆகி விட்டன. ஆனாலும், இந்தத் தினத்தைக் அனுஷ்டிப்பதனூடாக எதுவெல்லாம் நிகழவேண்டுமென எதிர்பார்க்கப்பட்டதோ, அவை தேவையான அளவு நிகழ்வதாகத் தெரியவில்லை!

ஒரு கசப்பான உண்மை என்ன தெரியுமா?

உளநோயாளர்கள் தொடர்பில், நம்மில் பலர் ‘அவர்களை’ விடவும் மோசமாகவே நடந்து கொண்டிருக்கின்றோம்!

    *

(இந்தக் கட்டுரையை 10 ஒக்டோபர் 2010ஆம் திகதிய ‘தமிழ் மிரர்’ இணையத்தளத்திலும் காணலாம்)

Sunday, June 3, 2012

காதல் திருமணத்தை பெற்றோர்கள் எதிர்ப்ப‍து ஏன்? – உளவியல் நிபுணர்கள்.

வீட்டைக்கட்டிப்பார், திருமணம்செய்துபார் என்பார்கள். திருமணம் செய்வது அந்த அளவிற்கு கடினமாக விசய ம். ஆனால் மனதிற்கு பிடித்த துணையை பார்த்து காதலிப்பதும், திருமணம்செய்து கொள்வதும் இன்றைய இளையதலைமுறை க்கு எளிதான காரியமாக உள்ளது.

பெரும்பாலான பெற்றோர்கள் காதல் திரும ணத்திற்கு சம்மதம் தெரிவிப்பதில்லை. தங் கள் குழந்தைகளுக்கு தாங்களாக பார்த்து முடிவு செய்து துணையை தேடித்தருவதைத் தான் விரும்புகின்றனர். இதற்கு காரணம் கா தலித்து திருமணம் செய்து கொண்டவர்களி ன் வாழ்க்கையில் எழும் பல சிக்கல்கள் தான்.

காதல் திருமணத்தை பெற்றோர்கள் எதிர்ப்பதற்கான காரணத்தைஅலசுகின்றனர் உளவியல் நிபுணர்கள்.

காதல் என்பது உணர்வு ரீதியாக எடுக்கும் முடிவு. இது பெரும்பா லான சமயங்களில் தோல்வியில்தா ன் முடிகிறது என்பது பெற்றோர்களின் வாதம். துணையை தேர்ந்தெடுப்பதில் குழந்தைகள் தவறான முடிவு எடுத்து விட்டு பின்னர் கண்ணை கசக்கிக் கொ ண்டு நிற்பார்களே என்ற பயம்தான் காதல் திருமணத்தை எதிர்க்க காரண ம். எனவே பாதுகாப்பான வாழ்க்கை யை தங்களால் மட்டுமே தேர்தெடுத்து தர முடியும் என்பது பெற்றோர்களின் நம்பிக்கை.
அனுபவம் போதாது

தங்கள் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனாலும் இன்னமும் குழந்தைகள்தான் என்று பெற்றோர்கள் நினைத்துக் கொண்டிருப் பார்கள். துணையை தேர்ந்தெடுக்கும் அளவிற்கு குழந்தைகளுக்கு அனுபவம் போதாது என்பது பெற் றோர்கள் வாதம். எனவேதான் காதல் திருமணத்தை எதிர்க்கின் றனர். தாங்கள் பார்த்து வைக்கும் பெண்ணையோ / பையனையோ திருமணம் செய்துகொள்ள வேண் டும் என்று வலியுறுத்துகின்றனர்.
இந்திய கலாச்சாரம்

இந்தியாவில் காதல் திருமணங்களை விட நிச்சயம் செய்யப்பட்ட திருமணங்கள்தான் சிறந்தது என்று இன்றைக்கும் கருதப்படுகிறது. இதற்கு காரணம் இதில் உள்ள பாதுகாப்புதான். தங்கள் பெற்றோர்கள் தங்களுக்கு சிறந் த வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடு த்து கொடுத்ததைப்போல தங்கள் குழந் தைகளுக்கு சிறந்த துணையை தேர்தெடுத்து தரவேண்டும் என்பது இன்றைய பெற்றோர்களின் நம்பிக்கை.

கண்டதும் காதல்

இன்றைக்கு மனதிற்கு பிடித்தவ ர்களை பார்த்து பழகிய உடன் மீட் டிங், டேட்டிங் என கலாச்சாரம் மா றிவிட்டது. இதனை இன்றைய பெற்றோர்கள் விரும்புவதில்லை . தங்கள் வீட்டிற்கு வரும் புதிய நபர் தங்களால் தேர்தெடுக்கப்பட் டவராக இருக்க வேண்டும் என் பது பெற்றோர்களின் எதிர்பார்ப்பு.

சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன

இந்தியாவில் உள்ள பெற்றோர் களைப் பொருத்தவரை திரு மணங்கள் சொர்க்கத்தில் நிச்ச யிக்கப்படுகின்றன என்ற நம்பி க்கை உள்ளது. அதனால்தான் தங்கள் குழந்தைகளுக்குத் தே வையான வாழ்க்கைத் து ணையை இன்றைய டெக்னா லஜி படி ஆன்லைன், மேட்ரி மோனியல், சோஷியல் நெட் ஒர்க் சர்வீஸ் மூலம் தேர்தெடு க்கின்றனர். தங்களுக்கு வரப்போகும் மருமகனோ, மருமகளோ நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதும்பெற்றோர்களின் எதிர்பார் ப்பாகும்.

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். காதலோ, நிச்சயிக்கப்பட்ட தோ திருமண வாழ்க்கை என் பது தலைமுறை தாண்டியும் சந்தோசமாக இருந்தால் சரி தான்.

உள்ளுக்குள் முஸ்லிம், வெளியே கிருத்துவர்..டாக்டர் ஜெரால்ட் டர்க்ஸ் (Dr.Jerald Dirks).





டாக்டர் ஜெரால்ட் டர்க்ஸ் (Dr.Jerald Dirks), ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் “Masters in Divinity” பட்டம் பெற்றவர். உளவியலில் முனைவர் (Doctorate in Psychology) பட்டம் பெற்றவர். சுமார் அறுபது கட்டுரைகள் உளவியலிலும், சுமார் 150 கட்டுரைகள் அரேபிய குதிரைகளின் வரலாற்றை பற்றியும் வெளியிட்டுள்ளார். பைபிளில் நல்ல ஞானம் பெற்றவர். United Methodist சர்ச்சில் உதவிப் பாதிரியாராக (Deacon, Ordained Minister) இருந்தவர். இறைவன், தான் நாடுவோரை இஸ்லாத்தின் பக்கம் கொண்டு வரும் ஒவ்வொரு விதமும் ஆச்சர்யமூட்டுபவை, அழகானவை.

அரேபிய குதிரைகளின் வரலாற்றை ஆய்வு செய்ய ஆரம்பித்து, அதன் மூலமாக முஸ்லிம்களின் நட்பு கிடைத்து, அவர்களால் குரானை ஆராயத் தொடங்கி, 1993 ஆம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் டர்க்ஸ். அன்றிலிருந்து இன்றுவரை அவர்

நம் உம்மத்துக்கு ஆற்றிய பணிகள் அளப்பரியவை. அல்ஹம்துலில்லாஹ்

சிலர், அதிக கஷ்டங்களின்றி இஸ்லாத்திற்குள் வந்து விடுகின்றனர். சுப்ஹானல்லாஹ். ஆனால், பலருக்கும் அப்படி இருப்பதில்லை. அவர்கள் அனுபவிக்கக்கூடிய மனப் போராட்டங்களை அவர்கள் நிலையில் இருந்து பார்த்தால் தான் புரியும். டாக்டர் டர்க்ஸ் அவர்கள் இஸ்லாத்திற்கு வந்த விதமும் அப்படித்தான். சுலபத்தில் அது நடந்து விடவில்லை.     
              
 ”நான் ஹார்வர்ட் பல்கலைகழகத்திலிருந்து வெளியே வந்த 1974 ஆம் ஆண்டிலிருந்து 1993 ஆம் ஆண்டு வரை ஒரு அசாதாரண கிருத்துவனாக இருந்தேன். இறை நம்பிக்கை அதிகம் உண்டு. பைபிளை தொடர்ந்து படிப்பேன்.  ஆனால், ஏசு (அலை) அவர்களின் தெய்வத்தன்மையிலோ அல்லது திருத்துவத்திலோ நம்பிக்கை இல்லை. ஆக, மற்ற கிருத்துவர்கள் போலல்லாமல் ஒரு அசாதாரண கிருத்துவனாக இருந்தேன்.

என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்ப்படுத்திய ஆண்டு 1991. அப்போது நானும் என் மனைவியும் அரேபிய குதிரைகளின் வரலாற்றை ஆய்வு செய்து கொண்டிருந்தோம். அந்த குதிரைகளைப் பற்றிய சில ஆவணங்கள் அரபி மொழியில் இருந்தன. அவற்றை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்க அரபி அறிந்த நபர்களின் உதவி தேவைப்பட்டது. அப்போது என் பகுதியில் வசித்து வந்த சகோதரர் ஜமால் அறிமுகமானார். எங்களுக்கு உதவ அவர் ஒப்புக்கொண்டார்.       
எங்கள் பண்ணைக்கு வந்த அவர் குதிரைகளை பார்வையிட்டார், பிறகு அந்த ஆவணங்களை வாங்கிப் பார்த்தார். மொழிப் பெயர்த்து தருவதாக உறுதியளித்தார். அவர் புறப்படும் முன் என்னிடம் வந்து,

“நான் தொழ வேண்டும், அதற்கு முன்பாக உளு செய்யவேண்டும், அதற்கு உங்களது குளியலறையை பயன்படுத்தி கொள்ளலாமா?” என்று கேட்டார்.

உளு செய்து விட்டு வந்தவர், தரையில் வைத்து தொழ என்னிடம் சில பேப்பர்கள் வேண்டும் என்று கேட்டு வாங்கிக்கொண்டார்.

முஸ்லிம்களுடைய தொழுகை மிகவும் வலிமையான ஒன்றாக தெரிந்தது. நாட்கள் செல்ல செல்ல, ஜமால் மற்றும் அவரது குடும்பத்தினருடன் மிகவும் நெருங்கி விட்டோம். ஜமால் அவ்வப்போது குரான் மற்றும் ஹதீஸ்களிலிருந்து வசனங்கள் சிலவற்றை எடுத்துக் கூறுவார். நிச்சயமாக, எப்படியாவது எங்களை இஸ்லாத்தின்பால் கொண்டு வந்துவிடவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்ததில்லை. அவர் குரான் மற்றும் ஹதீஸ்களிலிருந்து எடுத்துச் சொன்ன அந்த வசனங்கள் அவர் சொல்ல வந்த கருத்தை தெளிவாக சொல்லத்தானே தவிர எங்களை இஸ்லாத்தின்பால் கொண்டுவர அல்ல.

ஆனால் ஜமால் அவர்களின் தாஃவா மிக வலிமையானது. எங்களை அவர் இஸ்லாத்தின்பால் நேரடியாக கூப்பிடவில்லை. அவருடைய தாஃவா என்பது அவரது நடவடிக்கையில் தான் இருந்தது. மிக நேர்மையானவர், மிக பண்புள்ளவர். வியாபாரத்தில் அவர் காட்டிய நேர்மை, தன் குடும்பத்தாரிடம் காட்டிய அன்பு என்று எல்லாமே எங்களை மிகவும் கவர்ந்தன.

காலப்போக்கில் வேறு சில அரேபிய குடும்பங்களோடும் நட்பு வளர்ந்தது. Wa’el மற்றும் அவரது குடும்பத்தினர், அஹ்மத் மற்றும் அவரது குடும்பத்தினர் என்று இவர்கள் அனைவரும் மிக அழகான, அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர்.  

இப்போது எனக்குள்ளே கேள்விகளை கேட்க ஆரம்பித்தேன்,

“என்னையும், என்னுடைய இந்த முஸ்லிம் நண்பர்களையும் எது பிரிக்கிறது?, நானும் என் மனைவியும் இவர்களைப் போலத்தான் வாழ நினைக்கிறோம். ஆனால் எங்களால் முடியவில்லை, என்ன காரணம்?, என்னையும் இவர்களையும் எது பிரிக்கிறது? “

நான் அவர்களிடம் இது பற்றி கேட்டிருக்கலாம். ஆனால் அவர்களிடம் கேட்பதற்கு சங்கடமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல், நான் ஏதாவது கேட்டு, அதை அவர்கள் தவறாக நினைத்து கொண்டால், எங்கள் நட்புக்கு பாதிப்பு வந்துவிடுமே என்ற சிறு அச்சம். அதனால் அவர்களிடம் கேட்கவில்லை.  

நான் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் இஸ்லாமைப் பற்றி சிறிது படித்து இருக்கிறேன். இப்போது என் வீட்டில் இருந்த இஸ்லாமைப் பற்றிய அரை டஜன் புத்தகங்களை தூசி தட்ட தொடங்கினேன். அவை அனைத்தும் முஸ்லிமல்லாத நபர்களால் எழுதப்பட்டவை. அவைகளை மறுபடியும் படித்தேன். இரண்டு வெவ்வேறு ஆங்கில மொழிபெயர்ப்பு குரான்களை வாங்கினேன். படிக்கத் தொடங்கினேன்.   

குரானைப் படித்த போது அதனுடன் என்னை தொடர்பு படுத்திக் கொள்ள ஆரம்பித்தேன் (I am started to connect very much with Qur’an).

அதுமட்டுமல்ல, நான் பைபிளை மிக ஆழமாக ஆராய்ந்தவன். நான் குர்ஆனில் பார்த்த பைபிள் சம்பத்தமான சில வாக்கியங்களை, நிச்சயமாக ஏழாம் நூற்றாண்டு படிக்காத மனிதர் எழுதியிருக்க முடியாது. இது இறைவனின் ஊக்கமாகத்தான் இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன் (This must be inspired by God).

இந்த முடிவு நிச்சயமாக ஒரு அசௌகர்யமான உணர்வைத் தந்தது. இத்தனை நாளாய் நான் கொண்டிருந்த நம்பிக்கையை இந்த புத்தகம் அசைத்துப் பார்ப்பதை நான் விரும்பவில்லை. நான் கிருத்துவத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தவன். குரான் எனக்குள் ஏற்ப்படுத்திய இந்த தாக்கத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மன போராட்டங்கள் ஆரம்பித்தன.        

இது சம்பந்தமாக நிறைய முறை என்னுடைய மனைவியுடன் ஆலோசித்துள்ளேன். அவரும் இஸ்லாத்தை பற்றி அதிகம் பேச ஆரம்பித்தார்.

அது 1992 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதத்தின் பிற்பகுதி. அரேபிய குதிரைகளின் வரலாற்றைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள மத்திய கிழக்கிற்கு பயணம் மேற்க்கொள்ள ஆயத்தமானோம். பாஸ்போர்ட் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொண்டிருந்தோம். அந்த விண்ணப்பத்தில் ஒரு கேள்வி,

“உங்கள் மதம் என்ன?”

“கிருத்துவன்” என்று பூர்த்தி செய்தேன்.

சிறிது நேரத்திற்கு பின், பக்கத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொண்டிருந்த என் மனைவி என்னிடம் திரும்பி,

“மதம் என்னவென்று கேட்கப் பட்டிருக்கிறதே, என்ன எழுதினீர்கள்?”

இந்த கேள்வியை அவர் கேட்டவுடன் ஒரு நொடி திகைத்து விட்டேன்.

“என்ன கேள்வி இது?, நாமென்ன முஸ்லிமா?, நாம் கிருத்துவர்கள் தானே?” என்று சொல்லி பலமாக சிரித்து விட்டேன்.                 

நான் உளவியலில் தனித்துவம் பெற்றவன். எனக்கு நன்கு தெரியும், ஒருவருக்கு டென்ஷன் அதிகமிருந்தால் அதிலிருந்து விடுபட அவர் சிரிக்க முயல்வார். இது அந்த சூழ்நிலையில் எனக்கும் பொருந்தும்.

    * அப்படி என்ன டென்ஷன் எனக்கு?

    * அந்த எளிமையான கேள்வியை பூர்த்தி செய்ய ஏன் எனக்குள் இவ்வளவு போராட்டங்கள், டென்ஷன்.

    * இதையெல்லாம் விட, நான் ஏன் “நாமென்ன முஸ்லிமா?” என்று கேட்க வேண்டும்.

எது எப்படியோ, சிரித்து சமாளித்து விட்டேன்.

பிறகு என் மனைவி சொன்னார், “இல்லை இல்லை, protestant, Methodist என்று இவற்றில் எதுவென்று கேட்டேன்”.          

பிறகு ஜனவரி 1993 ஆம் ஆண்டில், என்னுடைய மூன்றாவது குரான் ஆங்கில மொழிபெயர்ப்பை படிக்கத் தொடங்கி இருந்தேன். இதிலாவது எனக்கு சாதகமான விஷயங்கள் இருக்கிறதா என்று ஆராயத் தொடங்கினேன். நிச்சயமாக நான் முன்பு படித்த இரண்டு மொழிபெயர்ப்புகளும் என்னுள் அதிக தாக்கத்தை ஏற்ப்படுத்தி இருந்தன. இது இறைவனின் வார்த்தைகளாக இருக்குமோ என்ற அந்த முடிவை நான் விரும்பவில்லை.

அதே மாதம், தொழுகைகளை செயற்படுத்தி பார்ப்போமே என்று தொழ ஆரம்பித்தேன். அப்போது எனக்கு அரபி தெரியாது. அதனால் ஆங்கிலத்திலேயே சூராக்களை ஓதி தொழுதேன். அப்போது நான் பெற்ற அந்த மன அமைதி அற்புதமானது.

ஆக, குரானைப் படிக்கிறேன், முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்று நம்ப ஆரம்பித்திருக்கிறேன், ஐவேலை தொழுகிறேன், ஆனால் முஸ்லிமில்லை. உள்ளுணர்வு நான் முஸ்லிம் என்று சொல்லுகிறது. ஆனால் வெளியில் ஏதோ ஒன்று தடுக்கிறது. நான் இன்னும் கிருத்துவன் தான்.          
 
என்னுடைய மதிய உணவை ஒரு அரேபிய உணவகத்தில் எடுத்துக்கொள்ளும் வழக்கத்தை கொண்டிருந்தேன். அன்றும், வழக்கம் போல அங்கு சென்றேன். என்னுடைய மூன்றாவது ஆங்கில மொழிபெயர்ப்பு குரானை திறந்து படித்துக் கொண்டிருந்தேன். ஆர்டர் எடுக்க, அந்த உணவகத்தின் உரிமையாளரான மஹ்மூத் வந்தார். நான் என்ன படித்து கொண்டிருக்கிறேன் என்று பார்த்தார். ஒன்றும் சொல்லவில்லை. ஆர்டர் எடுத்துக்கொண்டு சென்று விட்டார்.

சில நிமிடங்களுக்கு பிறகு, மஹ்மூதின் மனைவி இமான் உணவுகளை கொண்டு வந்தார். அவர் ஒரு அமெரிக்கர், இஸ்லாத்தை தழுவியவர். வந்தவர், நான் குர்ஆன் படித்துக் கொண்டிருப்பதை பார்த்து,

“நீங்கள் முஸ்லிமா?” என்று பணிவுடன் கேட்டார்.

ஆனால் நானோ மிகக் கடுமையாக,

“NOoooooooooooooooooooooooooo………….”

என்று எரிச்சலுடன் கத்திவிட்டேன். இதை கேட்டவுடன் கண்ணியத்துடன் விலகி சென்று விட்டார் அவர்.

ஆனால், என்ன ஆயிற்று எனக்கு?, நான் ஏன் அப்படி நடந்துக்கொண்டேன்?, அப்படி என்ன தவறான கேள்வியை கேட்டு விட்டார் அவர்?. இது நிச்சயமாக நானில்லை. சிறு வயதிலிருந்தே அனைவரையும் மரியாதையுடன் அழைக்கத் தெரிந்த எனக்கு, இன்று என்னாயிற்று?        

இப்படியாகப்பட்ட கேள்விகள் துளைத்தெடுக்க ஆரம்பித்தன. குரான் படிப்பதை நிறுத்தி விட்டேன். மிகுந்த குழப்பம். பெரிய தவறு இழைத்துவிட்டதாக எண்ணினேன். சகோதரி இமான் பில்லைக் கொண்டு வந்தார். நான் அவரிடம் மன்னிப்பு கேட்டேன்.

“உங்களிடம் நான் கடுமையாக நடந்துக் கொண்டேன் என்று அஞ்சுகிறேன். இங்கே பாருங்கள், நீங்கள் என்னிடம், நான் இறைவன் ஒருவனே என்று நம்புகிறேனா என்று கேட்டால், அதற்கு என்னுடைய பதில், ஆம் என்பது.

நீங்கள் என்னிடம், முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர்களில் ஒருவர் என்று நம்புகிறேனா என்று கேட்டால், அதற்கும் என்னுடைய பதில், ஆம் என்பது தான்”

நான் என்னுடைய பதிலை தெளிவாக சொல்லவில்லை. அது எனக்கு நன்றாகவே தெரிந்தது. அவர் கேட்ட கேள்விக்கு நேரடியான பதிலில்லை அது.

என்னை புரிந்துக் கொண்டார் அவர். நான் என் மனதில் ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன் என்று அவர் அறிந்திருக்க வேண்டும்.

“ஒன்றும் பிரச்சனையில்லை. ஒரு சிலருக்கு இஸ்லாத்தை ஏற்க நீண்ட காலம் எடுக்கும்” என்று சொல்லி விடைபெற்றார் அவர்.

நிச்சயமாக நான் என் மனதில் ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தேன். என்னை அறியாமலேயே ஆங்கிலத்தில் சகோதரி இமான் முன்பு ஷஹாதா சொல்லி விட்டேன். ஆனால் நான் வெளிப்படையாக முஸ்லிமாவதை ஏதோ ஒன்று தடுத்துக் கொண்டிருக்கிறது. என் உள்ளுணர்வு நான் முஸ்லிம் என்று சொன்னாலும், நான் இத்தனை நாளாய் கொண்டிருந்த என்னுடைய அடையாளத்தை, அதாவது கிருத்துவன் என்ற அடையாளத்தை விட்டு விட மனம் வரவில்லை. இன்னும் நான் கிருத்துவன் என்று தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

பிறகு மார்ச் 1993ல், மத்திய கிழக்கில் மகிழ்ச்சியாக நாட்கள் சென்று கொண்டிருந்தது. அது ரமலான் மாதம். அங்கிருந்தவர்களுடன் சேர்ந்து நானும் என் மனைவியும் நோன்பு நோற்றோம். இப்போது அவர்களுடன் சேர்ந்து வெளிப்படையாக ஐந்து வேலை தொழ ஆரம்பித்தேன்.

இப்போது நான்,


    * ஈசா (அலை) அவர்களின் தெய்வத்தன்மையில் என்றுமே நம்பிக்கை கொண்டிருந்ததில்லை. 

    * இறைவன் ஒருவனே என்று நம்புகிறேன்.

    * முஹம்மது (ஸல்) அவர்கள் அவனுடைய தூதர் என்று நம்புகிறேன்.

    * ஐந்து வேலை தொழுகிறேன்.

    * நோன்பு நோற்கிறேன்…

இப்படி முஸ்லிம்களை போன்று நடந்துக் கொள்கிறேன். ஆனால் முஸ்லிமில்லை. இன்னும் நான் கிருத்துவன் தான். கேட்வர்களுக்கு இது நிச்சயம் குழப்பத்தை தரும். ஆனால் என் மனப்போராட்டங்கள் இப்படித் தான் இருந்தன.

என்னைப் பார்த்து “நீங்கள் முஸ்லிமா?” என்று யாராவது கேட்டால், அவர்களுக்கு நேரடியாக பதில் சொல்லாமல், ஒரு ஐந்து நிமிடங்களாவது ஏதாவது பேசி தலைப்பை திசை திருப்பிவிடுவேன். கடைசி வரை அவர்கள் கேட்ட கேள்விக்கு நேரடியான பதிலாக அது இருக்காது.

இப்போது மத்திய கிழக்கில் எங்களது பயணம் கடைசி கட்டத்தை எட்டியிருந்தது.

ஒரு பாலஸ்தீன முதியவருடன், பாலஸ்தீன அகதிகள் முகாமில், ஒரு குறுகிய சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அந்த முதியவருக்கு ஆங்கிலம் அவ்வளவாக தெரியாது. அப்போது எதிரே ஒருவர் வந்தார். அவருக்கும் ஆங்கிலம் தெரியவில்லை.

எதிரே வந்த அந்த சகோதரர் சலாம் சொன்னார், நான் பதிலளித்தேன். தொடர்ந்து ஒரு கேள்வியை கேட்டார்.

எனக்கு அரபி சிறிதளவே அப்போது தெரியும். ஒரு சில வார்த்தைகள் பேசுவேன். மற்றவர்கள் பேசினால் சிறிதளவு புரியும். அந்த சிறிதளவு அரபி ஞானம் போதும், அவர் கேட்ட கேள்வியை புரிந்துக்கொள்ள.

ஆம். அதே கேள்விதான்.

“நீங்கள் முஸ்லிமா?”

இப்போது என்ன சொல்வது?. ஏதாவது சொல்லி மழுப்பக் கூட முடியாது. ஏனென்றால் நாங்கள் மூவர் தான் இருக்கிறோம். மற்ற இருவருக்கும் ஆங்கிலம் தெரியாது. அவர்கள் மொழியிலேயே மழுப்பலாம் என்றால், எனக்கு அரபி சரளமாக தெரியாது.

எனக்கு தெரிந்த சிறிதளவு அரபியில் தான் நான் பதில் சொல்லியாக வேண்டும். வேறு எந்த வழியும் இல்லை. என்னிடம் இப்போது இரண்டே இரண்டு பதில்கள்தான்,

    * ஒன்று “நாம்” (N’am, அரபியில் “ஆம்” என்று அர்த்தம்),
    * மற்றொன்று “லா” ( La, ”இல்லை” என்று அர்த்தம்). 

இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை இப்போது நான் சொல்லியாக வேண்டும், வேறு சாய்ஸ் இல்லை.
இப்போது குரானின் ஒரு வசனம் ஞாபகத்திற்கு வந்தது,
“திட்டமிடுதலில் அல்லாஹ்வே சிறந்தவன்”
ஆம், அது நிச்சயமான உண்மை. இப்போது என்னை அவன் வசமாக சிக்க வைத்துவிட்டான். என்ன பதில் சொல்வது?
  
அல்ஹம்துலில்லாஹ்…சில நொடிகள் பதற்றத்திற்கு பிறகு, இறுதியாக அந்த வார்த்தை வெளியே வந்தது….

“நாம்”…………………..

இதே காலக்கட்டத்தில் என்னுடைய மனைவியும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்…அல்ஹம்துலில்லாஹ்…”

சுப்ஹானல்லாஹ். இஸ்லாத்தை ஏற்க ஒருவர் படும் மனப் போராட்டங்களை மிக அழகாக வெளிப்படுத்திவிட்டார் டர்க்ஸ் அவர்கள்.

இஸ்லாமை ஏற்றுக்கொண்ட பிறகு டர்க்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தித்த பிரச்சனைகளும் அதிகம். நேற்று நண்பர்களாக இருந்தவர்கள் இன்று நண்பர்களில்லை. அவரது தொழிலும் வீழ்ச்சியடைந்தது. ஆனால் இவையெல்லாம் இஸ்லாம் என்ற வாழ்க்கை நெறிக்கு முன் ஒன்றுமில்லை என்று கூறுகிறார் அவர்.

இன்று, அவரும் அவரது குடும்பத்தினரும் முஸ்லிம் அமெரிக்கர்களால் பெரிதும் விரும்பப்படுகின்றனர்.

முஸ்லிம்கள், அமெரிக்காவில் கொலம்பஸ்சுக்கு முன்னிலிருந்தே இருக்கின்றனர், அவர்கள் இந்த நூற்றாண்டில் வந்து குடியேறியவர்கள் இல்லை, சுமார் ஆயிரம் ஆண்டுகளாகவே அமெரிக்கா தான் அவர்களது தாய் நாடு என்ற உண்மையை வெளிக்கொண்டு வந்தவர்களில் ஒருவர் (இவருக்கு முன்னரே Dr. அப்துல்லாஹ் ஹக்கீம் க்வீக் அவர்கள் இது பற்றி எழுதி இருக்கிறார்கள்).


அந்த புத்தகம் மட்டுமல்லாமல் மற்றும் பல புத்தகங்களையும் எழுதியிருக்கிறார் அவர்.
டர்க்ஸ் அவர்களின் துணைவியார் டெப்ரா டர்க்ஸ் (Debra Dirks) அவர்களோ, “Islam Our Choice: Portraits of Modern American Muslim Women” என்ற புத்தகத்தை எழுதியவர்.


அதில், தன்னைப் போல இஸ்லாத்தை தழுவிய ஆறு அமெரிக்க சகோதரிகள்,

    * இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட விதம்,
    * ஏற்றுக்கொண்டதற்கு பின்னால் அவர்கள் சந்தித்த துயரங்கள்,
    * தங்கள் குழந்தைகளை முஸ்லிம்களாக வளர்க்க அவர்கள் எதிர்க்கொள்ளும் சவால்கள்

என்று ஒரு முஸ்லிம் அமெரிக்க சகோதரியின் வாழ்க்கையை அழகாக பதிவு செய்திருக்கிறார். இவருடைய இந்த புத்தகம் புதிதாய் இஸ்லாத்தை ஏற்கும் சகோதரிகளுக்கு பெரும் உதவியாய் இருக்கிறது.


இறைவன் இந்த தம்பதியருக்கு, மென்மேலும் கல்வி ஞானத்தையும், மன பலத்தையும் தந்தருள்வானாக…ஆமின்

டெப்ரா டர்க்ஸ் அவர்களின் இந்த புத்தகத்தை போல, இஸ்லாத்தை புதிதாய் தழுவும் சகோதரிகளுக்கு பெரிதும் உதவியாய் இருக்கும் மற்றொரு புத்தகம், “Daughters of Another Path: Experiences of American Women Choosing Islam”.

இந்த புத்தகம் சற்று வித்தியாசமானது. ஏனென்றால், இது புதிதாய் இஸ்லாத்தை ஏற்கும் அமெரிக்க சகோதரிகளுக்கானது அல்ல, அவர்களின் முஸ்லிமல்லாத பெற்றோர்களுக்கானது. 

இதை எழுதிய கரோல் அன்வே (Carol L. Anway) அவர்கள் முஸ்லிமல்ல. ஆனால் அவருடைய மகள் இஸ்லாத்தை தழுவியவர். தன் மகளின் இந்த முடிவால் பெரிதும் துயரமடைந்த அவர், காலப்போக்கில் அதை ஏற்றுக்கொண்டார். ஆனால் தன்னைப் போல பல தாய்மார்கள் இருப்பதை உணர்ந்த அவர், அவர்களில் சிலரை (சுமார் 53 பேர்) நேர்க்காணல் செய்து வெளியிட்ட  புத்தகம் தான் இது.

இதில்,

    * முஸ்லிமல்லாத பெற்றோர்களின் உணர்வுகளை,

    * பெண்கள் ஏன் இவ்வளவு எதிர்ப்பையும் மீறி இஸ்லாத்தை தழுவுகிறார்கள் என்பதை,

    * எப்படி காலப்போக்கில் அந்த பெற்றோர்கள் தங்கள் அருமை மகள்களின் பண்புகளை பார்த்து ஏற்றுக் கொள்கிறார்கள்

என்பது போன்ற விஷயங்களை ஆராய்ந்து எழுதியிருக்கிறார் அவர்.     

CNN தொலைக்காட்சி செய்தியறிக்கையின் படி, அமெரிக்காவில் உள்ள முஸ்லிம்களில் 25% பேர் இஸ்லாத்தை ஏற்றவர்கள். அவர்களில் பெண்களே அதிகம். இந்த எண்ணிக்கை எப்போதும் போல  அதிகரித்து கொண்டு தான் வருகிறது.

புதிதாய் இஸ்லாத்திற்கு வரும் பெண்கள் தங்கள் பெற்றோர்களை சமாதானப்படுத்த இது போன்ற புத்தகங்கள் அவர்களுக்கு பெரிதும் உதவியாய் இருக்கின்றன…அல்ஹம்துலில்லாஹ். பல அமெரிக்க சகோதரிகள் தங்கள் பெற்றோருக்கு பரிசாய் கொடுக்க நினைக்கும் புத்தகங்களில் இதுவும் ஒன்று. 

இறைவன், இஸ்லாத்தை ஏற்கும் சகோதரிகளுக்கு மென்மேலும் மன வலிமையை தந்தருவானாக…ஆமின்
 
இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் இஸ்லாத்தில் நிலைக்கச்செய்வானாக…ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்..