ஜிகினா உலகின் லேட்டஸ்ட் கிசுகிசு என்னவென்றால், அமலாபாலுக்கும் – ஆர்யாவுக்கும் இடையில் இப்போது பெரிய விரிசல் விழுந்து விட்டது என்பது தான்.
இப்படி ஒரு செய்தி வெளியாக மூலக்காரணம் என்னவென்று பார்த்தால், வேட்டை படத்தின் மூலம் நெருங்கிப் பழக வாய்ப்பு கிடைத்து தன்னுடன் நல்ல நெருக்கம் பாராட்டி வந்த அமலாபாலை, புது வீடு கட்டி கோடம்பாக்கத்தையே கூப்பிட்டு கொண்டாடிய ஆர்யா அழைக்கவில்லை என்பதில் இருந்து தான் ஆரம்பித்திருக்கிறது என்பது தெரிய வந்தது. நெருப்பில்லாமல் புகையுமா என்ன?!
இது குறித்து அமலாபாலிடம் கேட்டால் : வழக்கம் போல இப்படி எல்லாம் பொய்யான செய்திகளை யார் பரப்பி விடுகிறார்கள்? நானும் ஆர்யாவும் ஸ்டில் பிரெண்ட்ஸ் என்கிறார். ஆர்யா வீட்டில் திறப்பு விழா நடந்த நாளன்று துபாயில் ஏற்கனவே கமிட் ஆன விழாவில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது அதனால் தான் கலந்து கொள்ள முடியவில்லை என ஒரு நொண்டி சாக்கு வேறு கூறுகிறார். ஆர்யாவோ இது பற்றி மவுனம் சாதிக்கிறார். கூட்டி கழித்து பார்த்தால் அம்மணி எங்கேயோ கணக்கு இடிக்குதே!! கரெக்டா நீங்களே சொல்லுங்க பார்க்கலாம்!
No comments:
Post a Comment