Thursday, March 29, 2012

ஞாபகம் உன்னோடு...



மனசெல்லாம் இசைக்கும் - உன்
நாமம் மறந்தும் நான்
அணுவளவேனும்
மறந்து போய் விடவில்லை..
காதலின் வேதனை
கவியாய்ச் சொட்டுகையில்
மனசெங்கும் உன் எண்ணம்
விரவி ஓடும் விந்தைக்குப்
பெயர் தான் காதலா?
மெல்ல வாய் திறந்து
சொல்ல வா காதலா.
நினைவுகளின் அடுக்குகளில் - நிகழ்ச்சி
நிரலாய் நீ தான் என்பதால்..
நீங்காது உன் ஞாபகம் என்றதால்..
நினைவுகள் உனக்கு மட்டுமே
சொந்தமாகிப் போனது.
மனசுன்னை வரித்த நாள் முதலாய்
மயிலிறகு வார்த்தைகளை நிதம்
தேடி அலைகிறது..
வாடிப் போன பெண்மையது- உனை
தேடித் போக வகை தெரியாது
தேம்பி இங்கு அழுகிறது..
தினம் ஒரு வேதனை இங்கு
தொடர் கதையாய்... - துயரம்
ஒரு படி மேலாய் நெஞ்சை தைக்க
மனம் இங்கு மரணித்து வெகு காலம்..
கனவே வாழ்க்கையாய் உன்னினைவோடு
நெடுங்காலம் நான் வாழவோ...?

No comments:

Post a Comment