Thursday, March 29, 2012

மீண்டும் கும்ளேவுடன் இணைவது மகிழ்ச்சி: முரளிதரன்



இந்திய அணியின் முன்னாள் நட்சத்திரச் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளேயுடன் இணைந்து செயற்படுவது மகிழ்ச்சியாக உள்ளது என்று இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.எதிர்வருகிற ஐ.பி.எல் போட்டிகளில் முத்தையா முரளிதரன், ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சார்பாக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ரோயல் சலஞ்சர்ஸ் அணியின் நிர்வகிப்பவர்களில் ஒருவராக கும்ப்ளே செயற்படுகிறார்.
இந்நிலையில் முரளிதரன் கூறியதாவது, அனில் கும்ப்ளேவுடன் இணைந்து 2000 ற்கும் அதிகமான டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளோம்.
தற்போது கும்ப்ளேயுடன் மீண்டும் இணைந்து செயற்படுவது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment