Tuesday, May 1, 2012

உறுதி…

உன்னிடம் சொல்ல
உள்ளத்திலில்லை உறுதி…
உறுதியான செய்தியில்லை
இருந்தும்…
உதடுகளை தாண்டிய பின்னே
செவிகளை தீண்டிய பின்னே
உள்ளத்தை உருக்குலைக்காமல்
ஒருபோதும் விடுவதில்லை சொற்கள்!
அவ்வகையில்…
உறுதியோடு…
உள்ளமும் உடைந்தது எனக்கு!

No comments:

Post a Comment