ரயில்
பாதை ஒன்றைக் கடக்கும்போது போதிய அவதானமின்றி காரைச் செலுத்தியதால்
ஏற்படவிருந்த பாரிய விபத்து ஒன்று தெய்வாதீனமாக நிறுத்தப்பட்டுள்ளது.
வேல்ஸ் நகரின் லாண்டீலோ பகுதியில் இடம்பெற்ற இவ் அதிர்ச்சிச் சம்பவத்தின்போது காரினுள் தாயும் மகனும் இருந்துள்ளனர்.
எனினும் குறித்த இடத்திற்கு ரயில் வரும்
முன்பாக கார் பாதையைக் கடந்ததனால் மயிரிழையில் விபத்து தவிர்க்கப்பட்டது.
இச்சம்பவத்தை அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கமெரா பதிவு
செய்துள்ளது.
No comments:
Post a Comment