Wednesday, October 3, 2012

மாற்றான் 4 வருடங்களாக உட்கார்ந்து எழுதப்பட்ட கதை - சூர்யா


மாற்றான் திரைப்படம் ஆங்கிலப்படத்தின் தழுவலோ அல்லது வேறு எந்தப்படத்தின் தழுவலோ அல்ல இது ஒரு அசல் கதை என்று தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா.

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டையராக சூர்யா நடித்திருக்கும் மாற்றான் திரைப்படத்தின் கதை ஆங்கிலப்படத்தின் தழுவல் என பரவலாக பேசப்பட்டு வந்தது இதனை முற்றாக மறுத்துள்ளார் படத்தின் நாயகன் சூர்யா.

இது தொடர்பில் அவர் கூறுகையில், 'இது எனக்கு முக்கியமான காலகட்டம். நான் எடுக்கிற ஒவ்வொரு முடிவையும் மிகக் கவனமாக எடுக்க வேண்டிய கட்டம் இது. அப்படி மிக கவனமாக எடுத்த முடிவுதான் 'மாற்றான்'.

இந்த படத்துக்காக ஒன்றரை வருடம் உழைத்து இருக்கிறேன். ஒன்றரை வருடமும் 'மாற்றான்' படத்துக்காக என்னை நான் அர்ப்பணித்துக்கொண்டேன்.

இதுஇ ஒட்டிப்பிறந்த சகோதரர்களை பற்றிய கதை மட்டுமல்ல. அப்பா-மகன் பாசம் இருக்கிறது. சமூக நலன் சார்ந்த கரு இருக்கிறது. ஒரே கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடிய படமாக இருக்காது. ஆங்கில படமோ அல்லது வேறு எந்த படத்தின் தழுவலோ அல்ல. 4 வருடங்களாக உட்கார்ந்து எழுதப்பட்ட கதை என்றார்.

மாற்றான் படத்தின் செய்தியாளர் சந்திப்பிலேயே சூர்யா இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த், இசையமைப்பாளர் ஹரீஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவாளர் சவுந்தர்இ கலை இயக்குனர் ராஜீவன், எழுத்தாளர்கள் சுபா, பாடலாசிரியர்கள் நா.முத்துக்குமார், விவேகா, தாமரை மற்றும் ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ரங்கராஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment